மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்யும் பொழுது படியில் தொங்குவதைத் தவிர்க்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த. விஜயலட்சுமி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
புதுக்கோட்டை பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்ட அவர் மாணவர்களிடம் பேசியது:
மாணவர்கள் பள்ளியின் நெறிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். பள்ளிக்கு மாணவர்கள் தாமதமாக வருவதைத் தவிர்க்க வேண்டும். ஆசிரியர்கள் கூறும் அறிவுரைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும்.
எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வில் நூறு சதவிகிதத் தேர்ச்சி பெற வேண்டும். அதற்கு மாணவர்களும் ஆசிரியர்களும் ஒத்துழைக்க வேண்டும். மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்யும்போது படியில் தொங்குவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
பின்னர் மெளண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற எஸ்எஸ்எல்சி வகுப்பு கற்பிக்கும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடைபெற்ற புதிய பாடநூல் சார்ந்த பயிற்சியில் கலந்து கொண்டு பேசியது:
ஆசிரியர்கள் பயிற்சியில் பெற்றவற்றை பள்ளியில் கொண்டு சேர்க்க வேண்டும். பயிற்சியின் போது பாடம் சார்ந்த கூடுதல் விவரங்களை மற்ற ஆசிரியர்களோடு கலந்தலோசித்து பெற வேண்டும். பாடப் புத்தகம் தாண்டி அதிக விஷயங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். வகுப்பறையில் பாடம் நடத்தச் செல்லும்போது கற்றல் கற்பித்தல் உபகரணங்களோடு தயார் நிலையில் செல்ல வேண்டும் என்றார். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் உதவித் திட்ட அலுவலர் பழனிவேல் பயிற்சியின் நோக்கம் குறித்துப் பேசினார். பயிற்சியில் கறம்பக்குடி, அரிமளம், திருமயம் ஒன்றியத்தில் பணிபுரியும் எஸ்எஸ்எல்சி வகுப்பு அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
பயிற்சியின் கருத்தாளர்களாக மு. பூமிநாதன், வி. கோவிந்தராஜன், ஆர்.செந்தில்குமார், பி.வசந்தகுமார், வி.கோவிந்தராஜன் ஆகியோர் செயல்பட்டனர். ஏற்பாடுகளை கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், மைய ஒருங்கிணைப்பாளர் தேன்மொழி ஆகியோர் செய்தனர்.
இதேபோல் கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது. அதனையும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த. விஜயலட்சுமி பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.
புதுக்கோட்டை பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்ட அவர் மாணவர்களிடம் பேசியது:
மாணவர்கள் பள்ளியின் நெறிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். பள்ளிக்கு மாணவர்கள் தாமதமாக வருவதைத் தவிர்க்க வேண்டும். ஆசிரியர்கள் கூறும் அறிவுரைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும்.
எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வில் நூறு சதவிகிதத் தேர்ச்சி பெற வேண்டும். அதற்கு மாணவர்களும் ஆசிரியர்களும் ஒத்துழைக்க வேண்டும். மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்யும்போது படியில் தொங்குவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
பின்னர் மெளண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற எஸ்எஸ்எல்சி வகுப்பு கற்பிக்கும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடைபெற்ற புதிய பாடநூல் சார்ந்த பயிற்சியில் கலந்து கொண்டு பேசியது:
ஆசிரியர்கள் பயிற்சியில் பெற்றவற்றை பள்ளியில் கொண்டு சேர்க்க வேண்டும். பயிற்சியின் போது பாடம் சார்ந்த கூடுதல் விவரங்களை மற்ற ஆசிரியர்களோடு கலந்தலோசித்து பெற வேண்டும். பாடப் புத்தகம் தாண்டி அதிக விஷயங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். வகுப்பறையில் பாடம் நடத்தச் செல்லும்போது கற்றல் கற்பித்தல் உபகரணங்களோடு தயார் நிலையில் செல்ல வேண்டும் என்றார். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் உதவித் திட்ட அலுவலர் பழனிவேல் பயிற்சியின் நோக்கம் குறித்துப் பேசினார். பயிற்சியில் கறம்பக்குடி, அரிமளம், திருமயம் ஒன்றியத்தில் பணிபுரியும் எஸ்எஸ்எல்சி வகுப்பு அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
பயிற்சியின் கருத்தாளர்களாக மு. பூமிநாதன், வி. கோவிந்தராஜன், ஆர்.செந்தில்குமார், பி.வசந்தகுமார், வி.கோவிந்தராஜன் ஆகியோர் செயல்பட்டனர். ஏற்பாடுகளை கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், மைய ஒருங்கிணைப்பாளர் தேன்மொழி ஆகியோர் செய்தனர்.
இதேபோல் கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது. அதனையும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த. விஜயலட்சுமி பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.
No comments:
Post a Comment