Thursday, 17 June 2021

திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்க காலணிகள் வருகை

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு அரசு சார்பில் புத்தகப்பை, காலணி, சீருடை போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் இவை மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் நீண்ட நாட்களாக மூடப்பட்டுள்ளன. இருப்பினும் தமிழக அரசின் நடவடிக்கையின் காரணமாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. 

Wednesday, 16 June 2021

அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம் தயார்

பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் மாணவர்கள் வீட்டில் இருந்து படிப்பதற்கு வசதியாக இந்த மாத இறுதியில் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது.தமிழக அரசு சார்பில் விலையில்லா பாடப்புத்தகம் அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இதனை இலவசமாக பெற்று பயனடைந்து வருகிறார்கள்.

நகராட்சிப் பள்ளியில் மூன்றே நாட்களில் இருக்கைகளைத் தாண்டி 2 மடங்கு குவிந்த மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 3 நாட்களில் இருக்கைகளை தாண்டி 2 மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளதால், அரசிடம் கூடுதல் வகுப்பறைகள், ஆசிரியர்களை கேட்டுப் பெற நிர்வாகம் முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும்நிலையில், அரசு உத்தரவுப்படி ஜூன் 14 முதல் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளன.


தனியார் பள்ளி மோகத்தால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வரும் இக்காலக்கட்டத்தில் ஆச்சரியப்படுத்தும் விதமாக காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

தொழிற்கல்வி படிப்பில் அரசு பள்ளி மாணவர் சேர்க்கை: ஆராய ஒருநபர் ஆணையம் அமைப்பு

தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை குறித்து ஆராய ஒரு நபர் ஆணையம் அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை குறித்து ஆராய ஒரு நபர் ஆணையம் அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி முருகேசன் தலைமையில் இந்த ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.


இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "2020- 2021 ஆம் கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.

கோவில் நிலத்தில் பள்ளி: அறநிலையத்துறை ஏற்று நடத்த முடிவு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள, தொண்டு நிறுவன பள்ளி, இனி அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும்,'' என, அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான 141 கிரவுண்ட் நிலம், சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கத்தில் உள்ளது.

இதில், தனியார் தொண்டு நிறுவனம் வசமிருந்த 32 கிரவுண்டில் செயல்பட்டு வந்த சீதா கிங்ஸ்டன் மெட்ரிகுலேஷன் பள்ளியை, அறநிலையத்துறை சுவாதீனமாக பெற்றது.அப்பள்ளி அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் நேற்று கொண்டு வரப்பட்டது. பள்ளியை பார்வையிட்ட, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:

Monday, 14 June 2021

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை இன்று தொடங்கியது

கொரோனா சூழலைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இன்று (14.06.2021) மாணவர் சேர்க்கை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட மாணவர்களை அழைத்துச் சேர்க்கைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. 

அதன்படி, முதலில் அந்தந்தப் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி படித்தவர்களுக்கு அதே பள்ளியில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதன்பிறகு மற்ற பள்ளிகளிலிருந்து வருவோருக்கு மாணவர் சேர்க்கை நடக்கும். 11ஆம் வகுப்புக்கான சேர்க்கை முழுவதும் முடிந்த பிறகு, பிற வகுப்புகளுக்கான சேர்க்கை துவங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பதால், பத்தாம் வகுப்பு மாணவர்களின் ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்றுவருகிறது. 

விறுவிறுப்பாக நடந்த பிளஸ் 1 மாணவர் சேர்க்கை- மருத்துவ, வணிகவியல் பிரிவுக்கு கடும் போட்டி

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி இருப்பதால் பெரும்பாலான மாணவ-மாணவிகள் முதல் குரூப்பை தேர்வு செய்கிறார்கள்.கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு இடையே தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்கியது.அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்பில் சேருவதற்கு மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் குவிந்தனர்.

10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இன்னும் வழங்கப்படாத நிலையில் மாணவர்கள் கேட்கும் பாடப்பிரிவுகளை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கையை ஒத்திவைக்க தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை

தமிழ்நாட்டில் பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கையை ஒத்திவைக்க வேண்டும் என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமாக பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. சமீப நாள்களாக பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்று ஜூன் 14 ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்குவர வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது. பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்கலாம் என்றும் மாணவர்கள் பள்ளிக்கு நேரில் சென்று புத்தங்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

மாணவர் சேர்க்கை இந்த இடங்களில் கிடையாது: அமைச்சர் திட்டவட்டம்!

மாணவர் சேர்க்கை, பள்ளிகள் திறப்பு, புத்தகம் வழங்குதல் என பல்வேறு விஷயங்கள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியுள்ளார்.சென்னை அசோக் நகர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் தளர்வுகள் அளிக்கப்பட்ட 27 மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. மீதமுள்ள 11 மாவட்டங்களில் தளர்வுகள் வழங்கியதும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

பள்ளி, கல்லூரி திறப்புக்கான போக்குவரத்துக்கு அனுமதி: ஊரடங்கில் தளர்வுகள் கொடுத்து அரசு உதவி

 கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், பள்ளி, கல்லுாரிகள் திறப்புக்காக, ஆசிரியர்கள், பணியாளர்கள் போக்குவரத்துக்கு, அரசு அனுமதி அளித்துள்ளது. புதிய கல்வி ஆண்டுக்கான நிர்வாக பணிகளை துவங்க, பள்ளி, கல்லுாரிகளுக்கு, ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த தளர்வுகள், நாளை முதல் அமலுக்கு வருகின்றன.

கொரோனா பெருந்தொற்றால், தமிழகத்தில் ஒன்றரை ஆண்டுகளாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.முதல் அலையின் பாதிப்புகள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்தது. அதனால், மே 24 முதல் முழு ஊரடங்கு அமலானது. அந்த மூன்று வார ஊரடங்கு நாளை முடிகிறது.இந்நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டு, நாளை முதல் அமலுக்கு வருகிறது.

இன்று முதல் மாணவர் சேர்க்கை, பாடப் புத்தகங்கள் வழங்கும் பணி: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

 அரசுப் பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், நாளை முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல் முதல் அலை காரணமாகக் கடந்த ஆண்டு பள்ளிகள் இயங்கவில்லை. ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன. இடையில் அலை ஓய்ந்திருந்தபோது 9,10,11,12ஆம் வகுப்புகள் திறக்கப்பட்டுச் செயல்பட்டன. ஆனால் பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தொற்று பரவியதை அடுத்து பள்ளிகள் மூடப்பட்டன.

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here