ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஹால் டிக்கெட்டை http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்வதில் தொடர் சிக்கல் என தேர்வர்கள் புகார் தொவிமத்துள்ளனர்.
மேலும் டெட் தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கு மே 26-ல் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Wednesday, 29 May 2019
Friday, 17 May 2019
அரசுப் பள்ளிகளில் 100 சேர்க்கை- முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு
தமிழக அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுவது குறித்த விழிப்புணர்வை பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே ஏற்படுத்தி, வரும் கல்வியாண்டில் முழுமையான சேர்க்கை நடைபெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தொடக்கக் கல்வி இயக்குநர் கருப்பசாமி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் அரசுப் பள்ளியில் தீவிர மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து, தொடக்கக் கல்வி இயக்குநர் கருப்பசாமி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் அரசுப் பள்ளியில் தீவிர மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Thursday, 16 May 2019
தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீடு: மே 18ல் விண்ணப்ப பதிவு நிறைவு
தனியார் பள்ளிகளில், 25 சதவீத இட ஒதுக்கீட்டில், குழந்தைகளை சேர்ப்பதற்கான விண்ணப்ப பதிவு, மே, 18ல் நிறைவடைகிறது. இதுகுறித்து, சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் து.கணேஷ்மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில், தொடக்க நிலை வகுப்புகளில் உள்ள மொத்த இடங்கள், 25 சதவீத இடங்கள் ஆகிய விபரங்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பங்கள், கடந்த, 20 முதல், ஆன்லைனில் பதிவு செய்யப்படுகிறது. விண்ணப்பிக்கும் பள்ளி, குழந்தையின் இருப்பிடத்திலிருந்து, 1 கி.மீ., தொலைவுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க, அனைத்து வட்டார வள மையங்கள், வட்டார கல்வி, மாவட்ட கல்வி, முதன்மை கல்வி அலுவலகங்களில், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மே, 18 வரை மட்டும் விண்ணப்பிக்க முடியும் என்பதால், மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
ஜூன் 8-ந்தேதி நடைபெற இருந்த பி.எட் தேர்வு தேதி மாற்றம் – உயர்கல்வித்துறை
‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் கடந்த மார்ச் 15-ந்தேதி முதல் ஏப்ரல் 5-ந்தேதி வரை ஆன்லைன் பதிவு செய்யலாம் என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு ஆணையம் அறிவித்திருந்தது.
இணையதளம் சரியாக வேலை செய்யவில்லை என விண்ணப்பதாரர்கள் கோரிக்கை வைத்ததையடுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை ஏப்ரல் 12-ந்தேதி வரை நீட்டித்தது.
இணையதளம் சரியாக வேலை செய்யவில்லை என விண்ணப்பதாரர்கள் கோரிக்கை வைத்ததையடுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை ஏப்ரல் 12-ந்தேதி வரை நீட்டித்தது.
Wednesday, 15 May 2019
TET தேர்வுக்கு DATE சொல்லியாச்சு: ஆசிரியர் தகுதித்தேர்வு வரும் ஜூன் மாதம் 8, 9 தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2019-க்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் கடந்த 28-ம் தேதி வெளியிடப்பட்டது. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாளுக்கான தேர்வு வரும் ஜூன் -8 ம் தேதி காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும், இரண்டாம் தாளுக்கான தேர்வு வரும் 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும் எழுத்துத்தேர்வு நடைபெறும் என்ற தகவல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1500 ஆசிரியர்களுக்கு பயிற்சி
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆயிரத்து 500 ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத காரணத்தால் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 1500 ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, 1500 ஆசிரியர்களின் பணிநீக்கத்தைத் தவிர்க்க ஜூனில் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித்தேர்வில், 1500 ஆசிரியர்களும் தேர்ச்சி பெறுவதற்கு ஏதுவாக பயிற்சி வழங்க பள்ளிக்கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியிருந்தது.
ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத காரணத்தால் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 1500 ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, 1500 ஆசிரியர்களின் பணிநீக்கத்தைத் தவிர்க்க ஜூனில் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித்தேர்வில், 1500 ஆசிரியர்களும் தேர்ச்சி பெறுவதற்கு ஏதுவாக பயிற்சி வழங்க பள்ளிக்கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியிருந்தது.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 6 லட்சம் பேருக்கு மேல் விண்ணப்பம்
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத 6 லட்சத்து 4 ஆயிரம் பேருக்கும் மேல் விண்ணப்பித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நடக்கவிருக்கும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 12ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டது.இரண்டு தாள் அடங்கிய இந்த தேர்வுக்கு மொத்தமாக 6 லட்சத்து 4 ஆயிரத்து 156 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் கூறும் போது, முதல் தாள் எழுத 1 லட்சத்து 83 ஆயிரத்து 341 பேரும், இரண்டாம் தாள் எழுத நான்கு லட்சத்து 20 ஆயிரத்து 815 பேரும் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நடக்கவிருக்கும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 12ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டது.இரண்டு தாள் அடங்கிய இந்த தேர்வுக்கு மொத்தமாக 6 லட்சத்து 4 ஆயிரத்து 156 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் கூறும் போது, முதல் தாள் எழுத 1 லட்சத்து 83 ஆயிரத்து 341 பேரும், இரண்டாம் தாள் எழுத நான்கு லட்சத்து 20 ஆயிரத்து 815 பேரும் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
Sunday, 12 May 2019
பணி விவரங்களை கணினிமயமாக்கும் திட்டத்தால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல்
தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய மற்றும் பணி விவரங்களை கணினி மயமாக்கும் திட்டம் அடுத்த மாதம் முதல் அனைத்து ஊழியர்களுக்கும் அமல்படுத்தப்பட உள்ள நிலையில், அதில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப பிரச்சினையால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான நிதி மேலாண்மை மற்றும் மனித வளமேலாண்மை ஆகியவற்றை இணைத்து ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டம் (IFHRMS - Integrated Financial and Human Resource Management System) நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தனியார் நிறுவனம் ஒன்று தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான நிதி மேலாண்மை மற்றும் மனித வளமேலாண்மை ஆகியவற்றை இணைத்து ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டம் (IFHRMS - Integrated Financial and Human Resource Management System) நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தனியார் நிறுவனம் ஒன்று தேர்வு செய்யப்பட்டுள்ளது.
படை வீரர்களின் வாரிசுகளுக்கு, மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு
பணியில் உள்ள படை வீரர்களின் வாரிசுகளுக்கு, மருத்துவப் படிப்பில் ஒதுக்கீடு மறுத்து, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்தது.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த, குறளரசன் தாக்கல் செய்த மனு: பணியில் உள்ள படை வீரர்களின் வாரிசுகளுக்கு, மருத்துவப் படிப்பில், ஒதுக்கீடு மறுத்து, தமிழக சுகாதாரத்துறை, 2018 ஜூன், 1ல் அரசாணை வெளியிட்டது. அதை ரத்து செய்து, பணியில் உள்ள படைப்பிரிவு வீரர்களின் வாரிசுக்கும், ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கோரியிருந்தார்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த, குறளரசன் தாக்கல் செய்த மனு: பணியில் உள்ள படை வீரர்களின் வாரிசுகளுக்கு, மருத்துவப் படிப்பில், ஒதுக்கீடு மறுத்து, தமிழக சுகாதாரத்துறை, 2018 ஜூன், 1ல் அரசாணை வெளியிட்டது. அதை ரத்து செய்து, பணியில் உள்ள படைப்பிரிவு வீரர்களின் வாரிசுக்கும், ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கோரியிருந்தார்.
Sunday, 5 May 2019
சென்னையில் இப்படி ஒரு அரசு பள்ளியா? ஆச்சர்யம் அளிக்கக் கூடிய தகவல்கள்
சென்னை அசோக்நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டதையொட்டி அங்கு அதிகளவில் மாணவிகளும், பெற்றோர்களும் குவிந்தனர்.சென்னை அசோக் நகரில் இயங்கி வரும் அரசு பெண்கள்மேல்நிலைப்பள்ளியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். சென்னையில் தனியார் பள்ளிகள் ஏராளமாக இயங்கி வந்தாலும் கூட, இந்த அரசு பள்ளியில் மட்டும் மாணவிகள் எண்ணிக்கை குறையவே இல்லை. தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில், இந்த பள்ளியில் கல்வித்தரம் உள்ளதாக பெற்றோர்கள் கருதுவதால் இங்கு அட்மிஷன் பெற கடும் போட்டி நிலவுகிறது.
எட்டாண்டுகள் படித்து முடித்து செல்லும் மாணவர்களுக்கு கவிதையால் வாழ்த்தி வழியனுப்பிய ஊ.ஒ.ந.நி.பள்ளி
பிரிவுபசாரம்
எட்டாண்டுண்டுகள்
இங்கு படித்து,
சொல்படி நடந்து,
ஒழுக்கம் ஒரு கண்
கல்வி ஒரு கண் என
இங்கு வாழ்ந்து,
இரு கண்ணிலும்
இப்போது நீரென..
எங்களைப் பிரியும்
எங்களின் முத்துக்களுக்கு
வழியனுப்பு விழா....
எட்டாண்டுண்டுகள்
இங்கு படித்து,
சொல்படி நடந்து,
ஒழுக்கம் ஒரு கண்
கல்வி ஒரு கண் என
இங்கு வாழ்ந்து,
இரு கண்ணிலும்
இப்போது நீரென..
எங்களைப் பிரியும்
எங்களின் முத்துக்களுக்கு
வழியனுப்பு விழா....
Subscribe to:
Posts (Atom)
1282 BT Assistant Post continuation order
1282 BT Assistant Six Month Post continuation order - click here
-
Set lanuage - 9th std - Click Here to Download 9&10 Maths set Relation & Funcions -1 9&10 Maths set Relation & Funcions -2 ...
-
1282 BT Assistant Six Month Post continuation order - click here