Tuesday, 11 June 2019

வேலைவாய்ப்பு:அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிக்கைகள்


தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு வட்டிச் சலுகை வழங்கப்படுகிறது: மாவட்ட ஆட்சியர் தலைவர் தகவல்


ஏழைப்பெண்களுக்கு மாவட்ட சமூக நலத்துறையின் மூலமாக மின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்குவதற்கு தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படும்: மாவட்ட ஆட்சியர் பத்திரிகை செய்தி வெளியீடு


சிறுபான்மையின பள்ளிகளுக்கு உட்கட்டமைப்பு ஏற்படுத்த நிதி: மாவட்ட ஆட்சியர் பத்திரிகை செய்தி வெளியீடு


SSA கூடுதல் திட்ட அலுவலராக பொறுப்பேற்றுள்ள தலைமையாசிரியருக்கு ஆசிரியர்கள் வாழ்த்து

மேல்மலையனூர்:அவலூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் விழுப்புரம் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் (SSA) கூடுதல் திட்ட அலுவலராக பொறுப்பேற்றுள்ளமைக்கு ஆசிரியர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Monday, 10 June 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு: கேள்விகள் மிகவும் நீளமாக இருந்ததாகப் புகார்

தேர்வு எழுதியவர்களில் பலர் கணித கேள்விகள் பல நீளமாக இருந்தன எனவும் கல்விசார் உளவியல் தொடர்பான கேள்விகள் கடினமாக இருந்தன எனவும் தெரிவித்தனர்.ஆசிரியர் தகுதித் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் கணிதம், கற்பித்தல் மற்றும் குழந்தை மேம்பாடு குறித்த கேள்விகள் கடினமாக இருந்தன என பலர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு இன்றும் நாளையும் (ஜூன் 9 மற்றும் 10) இரண்டு தாள்களாக நடைபெறுகிறது. இந்த ஆண்டு சுமார் 6 லட்சம் பேர் டெட் தேர்வை எழுத விண்ணப்பித்தனர். 1,081 தேர்வு மையங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்தது.

Sunday, 2 June 2019

2032-க்குப் பிறகு கல்லூரிகளே பட்டங்களை வழங்கும் நடைமுறை: வரைவு கல்விக் கொள்கை-2019 வெளியீடு

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் புதிய கல்விக் கொள்கை 2019-க்கான வரைவை வெளியிட்டுள்ளது.
 நாடு முழுவதும் தரமான உயர் கல்வி, ஆராய்ச்சிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளும், திட்டங்களும் இந்த வரைவு கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன.

தேசிய தரவரிசை: சென்னை பல்கலை. முன்னேற்றம்

தேசிய தரவரிசையில் 2 ஆண்டுகளுக்கு முன் 41-வது இடத்தில் இருந்த சென்னை பல்கலைக்கழகம் தற்போது முதல் 20 இடங்களுக்குள் முன்னேற்றியிருப்பதாக துணைவேந்தர் துரைசாமி தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ''பல்கலைக்கழகத்தில் தொழில்முனைவோர் மற்றும் சுய வேலைவாய்ப்பு பயிற்சி மண்டலம் அமைக்க மத்திய அரசிடம் 15 கோடி ரூபாய நிதி கோரப்பட்டுள்ளது. பி.எச்.டி. மாணவர்களின் சிறப்பான செயல்பாட்டிற்காக, பிழை கண்டறிதல் மற்றும் உண்மைத்தன்மை பரிசோதிக்கும் முறை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

பிளஸ் 2 முடித்தவர்கள் நேரடியாக சேரும் வகையில் 5 ஆண்டு எம்.ஏ. தமிழ் இலக்கியம் படிப்பு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அறிமுகம்

பிளஸ் 2 முடித்தவர்கள் நேரடியாக சேரும் வகையில் ஒருங்கிணைந்த 5 ஆண்டுகால எம்.ஏ. தமிழ் இலக்கியம் படிப்பை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் சேர ஜூன் 15 வரை விண்ணப்பிக்கலாம்.

இதுதொடர்பாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கோ.விஜயராகவன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் வரும் நாட்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அந்தமானில் பருவமழை தொடங்கியுள்ளது. இதனால், கடலோரப் பகுதிகளில் 45 கி.மீ வரை பலத்த காற்று வீசக்கூடும்.  எனவே, மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் போது பாதுகாப்புடன் செல்லவேண்டும்.

பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸில் பயணிக்கலாம்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு

கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் அரசு, தனியார் பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்படவுள்ளன.தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்து வரையிலான வகுப்புகளுக்கு மே மாதம் மட்டுமே விடுமுறை விடப்படும். ஆனால், இந்த ஆண்டு, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளைப் போன்றே ஏப்ரல் இரண்டாவது வாரம் முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. கோடை விடுமுறை ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வருகிறது.

இதையடுத்து அனைத்துப் பள்ளிகளும் திங்கள்கிழமை (ஜூன் 3) திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறந்த முதல் நாளிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பாடநூல்கள், சீருடைகள் வழங்கப்படவுள்ளன.

ஆசிரியர் தகுதித் தேர்வை கட்டாயப்படுத்தக் கூடாது: உயர்நீதிமன்றத்தில் மனு

கடந்த 2012-ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களை, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது எனக்கூறி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 சென்னை உயர்நீதிமன்றத்தில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பார்த்திபன் உள்ளிட்ட 5 ஆசிரியர்கள் தாக்கல் செய்த மனுவில், "அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் நாங்கள் கடந்த 2010-ஆம் ஆண்டு ஆசிரியராக நியமிக்கப்பட்டோம்.
அந்த சமயத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற வேண்டும் என நிபந்தனைகள் எதுவும் இல்லை. இந்த நிலையில் கடந்த 2009-ஆம் ஆண்டு கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் மத்திய அரசால் இயற்றப்பட்டது. இந்த சட்டம் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. இதன்படி ஆசிரியர்கள் பணி நியமனம் மற்றும் பணி விதிகள் உருவாக்கப்பட்டன. இந்தச் சட்டத்தை கடந்த 2011-ஆம் ஆண்டு தமிழக அரசு அமல்படுத்தி அறிவிப்பாணை வெளியிட்டது.

ஜிப்மர் மருத்துவக்கல்லூரி நுழைவுத் தேர்வு: ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

புதுச்சேரி ஜிப்மர் கல்லூரியின் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.200 எம்பிபிஎஸ் இடங்களுக்கான நுழைவுத் தேர்வானது, 25 மாநிலங்களில் உள்ள 280 மையங்களில் காலை, மாலை என 2 பிரிவுகளாக நடைபெறுகிறது.

இந்த தேர்வில் நாடு முழுவதிலுமிருந்து 1,84,272 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் சேர நீட் தேர்வு அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


நன்றி:தினமணி 

ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்புக்கு மதிப்பெண் அதிகரிப்பு: அரசாணை வெளியீடு

ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூலம் நடத்தப்படும், பட்டயப் படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மதிப்பெண்களை அதிகரித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
 தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளிகள், தனியார் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளுக்கு பாடம் நடத்த இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

பள்ளி வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி மாணவர் பலி

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே பள்ளி வாகனத்திலிருந்து இறங்கும்போது, பின்பக்க சக்கரத்தில் சிக்கி, 2ஆம் வகுப்பு மாணவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
 திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம், சிறுமதுரை கிராமத்தில் உள்ள காலனி பகுதியைச் சேர்ந்தவர் மாயவேல், டாஸ்மாக் மதுக் கடை விற்பனையாளர். இவரது மகன் முகுந்தன்(6). திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்துவந்தார். இவர், கோடை கால விடுமுறைக்குப் பிறகு சனிக்கிழமை பள்ளிக்குச் சென்றார்.

தமிழகத்தில் இருமொழிக்கொள்கையே பின்பற்றப்படும்: மத்திய அரசின் மும்மொழி கொள்கை பரிந்துரை குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து பின்பற்றப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கான வரைவுத் திட்டத்தில் ஒரு அம்சமாக நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த பரிந்துரைக்கப்பட்டு கருத்து கேட்கப்பட்டு வருகிறது, அதில் கூறப்பட்டுள்ள ஒரு அம்சம் சர்ச்சையை எழுப்பியுள்ளது. தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை பின்பற்றப்படும் நிலையில், மீண்டும் இந்தி திணிப்பு முயற்சி நடைபெறுவதாக எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்த பரிந்துரையில் ஒன்றாக மும்மொழிக்கொள்கை குறித்து கூறப்பட்டுள்ளது. அதில் தாய் மொழி, இணைப்பு மொழியாக ஆங்கிலம் மூன்றாவது ஒரு அயல் மொழியை கட்டாயம் படிக்கவேண்டும் என்றும் இந்தி பேசும் மாநிலங்கள் தாய்மொழியான இந்தி இணைப்பு மொழியான ஆங்கிலம் மற்றும் 3 வது மொழியை தாங்களே தேர்வு செய்துக்கொள்ளலாம்.

தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு... அனைத்து ஏற்பாடுகளும் தயார்

கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

ஜுன் 3ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவது ஜூன் 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வரும் நிலையில், பள்ளிக் கல்வித்துறை இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

அதில், 2019 - 20 ஆம் கல்வியாண்டில், மாணவர்களுக்கான பாடத் திட்டங்கள் முழுமையான அளவில் முடிக்கப்பட உள்ளதால், ஜூன் 3 ஆம் தேதியன்று, அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என  தெரிவிக்கப்பட்டது.

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here