Saturday, 3 August 2019

தாமத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: ஹெச்.எம்.,களுக்கு சி.இ.ஓ., கண்டிப்பு

தாமதமாக வரும் ஆசிரியர்கள் மீது, தலைமையாசிரியர்கள், நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க, சேலம் முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், ஜூன் முதல், 'பயோமெட்ரிக்' முறையில், ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்படுகிறது.

காலை, 9:15 மணிக்குள், பள்ளிக்கு வர உத்தரவிட்டிருந்தாலும், பல ஆசிரியர்கள் தாமதமாக வருவது குறித்து, நேற்று முன்தினம், 'காலைக்கதிர்' நாளிதழில் செய்தி வெளியானது.

இப்படி ஒரு பள்ளி எங்கே இருக்கிறது எனத் தெரியுமா?

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கஞ்சனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாவட்ட அளவில் சிறந்த பள்ளி, சிறந்த முன்னுதாரணப் பள்ளி, பசுமைப் பள்ளி, 2014-15 ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ், கல்வி தரத்தில் "யு' கிரேடு, மாநில அளவில் 2014-15  சுற்றுச்சூழல் பாதுகாப்பு பசுமைப் பள்ளிக்கான முதல் பரிசு, மாவட்ட அளவில் சிறந்த பள்ளிக்கான 2015-16 காமராசர் விருது, 2016-17 குழந்தை நேயப் பள்ளி போன்ற விருதுகளை தொடர்ந்து பெற்றுள்ளது.

பொள்ளாச்சி:பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்



கோவை மாவட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி கல்வி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் பொது குழு கூட்டம் நடைபெற்றது. கோவை கல்வி மாவட்டத் தலைவர் கார்த்திகேயன், சர்க்கார்சாமக்குளம் கல்வி மாவட்டத் தலைவர் சபாபதி,மாவட்ட  உயர்மட்டக் குழுத் தலைவர் சிவகண்ணு மற்றும் மாவட்ட தலைவர் அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். 

பேருந்தில் படிக்கட்டுப் பயணம் கூடாது: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுரை

மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்யும் பொழுது படியில் தொங்குவதைத் தவிர்க்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த. விஜயலட்சுமி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
புதுக்கோட்டை பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்ட அவர் மாணவர்களிடம் பேசியது: 
மாணவர்கள் பள்ளியின் நெறிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். பள்ளிக்கு மாணவர்கள் தாமதமாக வருவதைத் தவிர்க்க வேண்டும். ஆசிரியர்கள் கூறும் அறிவுரைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும்.
எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வில் நூறு சதவிகிதத் தேர்ச்சி பெற வேண்டும். அதற்கு மாணவர்களும் ஆசிரியர்களும் ஒத்துழைக்க வேண்டும். மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்யும்போது படியில் தொங்குவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

செஞ்சி:கிளை நூலகத்தில் புரவலராக இணைத்துக் கொண்ட ஆசிரியர்

செஞ்சி கிளை நூலகத்தில் 25-07.19 அன்று பா. முருகானந்தம் ஆசிரியர் (ஊ.ஒ. துவக்கப்பள்ளி, கடுகப்பட்டு ) அவர்கள் செஞ்சி நூலகர் எ. பூவழகன் அவர்களிடம் நூலக வளர்ச்சிக்காக ரூ 1000 .00 செலுத்தி புரவலராக இணைத்து கொண்டார்கள்.த.பன்னீர் ஆசிரியர் & திருமதி இ. பொற்கொடி நூலக பணியாளர் உடனிருந்தனர்.நூலக வளர்ச்சிக்காக நூலக புரவலராக இணைத்து கொண்ட ஆசிரியர் திரு பா. முருகானந்தம் அவர்களுக்கு வாசகர் வட்டம் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.


1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here