Tuesday, 19 July 2022

மாறுதலில் செல்லும் முதன்மைக்கல்வி அலுவலருக்கு பிரிவு உபச்சார விழா

கோயம்புத்தூர் முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த என்.கீதா, கரூர் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பணியிட மாறுதலில் செல்லும் அவருக்கு பிரிவு உபச்சார விழா நடந்தது.இதையடுத்து, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கழகம் சார்பில் பிரிவு உபச்சாரம் வழங்கப்பட்டது.

Wednesday, 13 July 2022

அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திடீர் ஆய்வு

வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி வகுப்பறைகளுக்கு சென்று மாணவர்களிடம் பள்ளி பயிற்சி பற்றியும், ஆசிரியர்கள் பாடம் நடத்துவது பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டு, பின்னர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் பள்ளிக்கு என்னென்ன குறைகள் இருக்கிறது என கேட்டறிந்தார். 


சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளியின் 50-வது பொன்விழா

சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப் பள்ளியின் பொன்விழா
சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளியின் 50-வது பொன்விழா ஆண்டு புதிய நுழைவுவாயில் திறப்பு விழா நேற்று நடந்தது. தனுஷ்குமார் எம்.பி., டாக்டர் சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., சிவகிரி சேனைத்தலைவர் மகாஜன சங்க தலைவர் மாரியப்பன், துணைத் தலைவர் மூக்கையா, பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய பொன்விழா நுழைவு வாயிலை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் பொன்விழா மலரை வெளியிட்டார்.


Tuesday, 10 May 2022

“பள்ளிகளின் தரத்தை உயர்த்த ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும்” - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்

கும்பகோணத்தில் தொண்டு நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.


இதில் வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கன பணி ஆணைகளை அவர் வழங்கினார்.

Thursday, 5 May 2022

மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளை மூட முடிவா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

சென்னை வேளச்சேரியில் உள்ள நட்சத்திர விடுதியில், உலக செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், என்னை பொறுத்தவரை என்னுடைய மாணவர்களும் மாணவிகளும் தான் ராஜா ராணி ஏனெனில் எதிர்காலத்தில் அவர்கள் தான் நாட்டை ஆளப்போகிற ராஜா ராணிகள் என்றும், அவர்களுக்கு சிப்பாய்களாக இருந்து அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் கூறினார்.

Monday, 2 May 2022

பள்ளி மாணவர்களுக்கு கவுன்சிலிங்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளி மாணவர்கள் சாதி மோதல்களில் ஈடுபடுவது வருத்தம் அளிப்பதாக கூறினார். மாணவர்கள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது, இது மாதிரியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும் கட்டாயத்தில் பள்ளிக்கல்வித்துறை உள்ளது என்றார்.




கடந்த காலத்தில் தென்மாவட்டங்களில் இதுமாதிரியான சாதி மோதல்கள் இருந்து வந்தது. தற்போது படிப்பறிவு அதிகரித்த நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது, திருநெல்வேலியில் சாதி கயிறு கட்டியதில் ஏற்பட்ட மோதலில் மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

மன்னர் சரபோஜி அரசு கல்லூரி பட்டமளிப்பு விழா: மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் செந்தமிழ்செல்வி தலைமை தாங்கினார்.




சிறப்பு விருந்தினராக  பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு ஏப்ரல் 2019-ல் நடைபெற்ற பருவத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 1193 இளநிலை, முதுநிலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினார். அப்போது அவர் பேசியதாவது:

Dyslexia instruction For DGE

Dyslexia instruction For DGE - Click Here to Download

1282 பட்டதாரி ஆசிரியர் தற்காலிகப் பணியிடம் ஊதிய கொடுப்பாணை

1282 பட்டதாரி ஆசிரியர் தற்காலிகப் பணியிடம் ஊதிய கொடுப்பாணை - Click Here to Download

Monday, 11 April 2022

“தேர்வு குறித்து மாணவர்கள் பயப்பட வேண்டாம்” - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக நடப்பு கல்வியாண்டில் பள்ளிகளை திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனிடையே ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டன.


இருப்பினும் பொதுத் தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில், மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். அதே சமயம் கால அவகாசம் குறைவாக இருப்பதால், 10, 12-ம் வகுப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டிற்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மேலும் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களை பொதுத்தேர்வுக்கு ஆசிரியர்கள் தயார்ப்படுத்தி வருகின்றனர்.

Friday, 8 April 2022

10, 12-ம் வகுப்புகளின் நடத்தி முடிக்காத பாடத்திலிருந்து பொதுத் தேர்வில் கேள்விகள் இருக்காது - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

பள்ளிக்கல்வி முதன்மை கல்வி அலுவலர்களுடன் இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இரண்டாம் நாளான இன்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.




அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘மத்திய அரசு வகுத்துள்ள புதிய கல்விக் கொள்கை சார்ந்து அதன் அடிப்படையில் மாநிலத்திற்கான கல்விக் கொள்கையை உருவாக்க தேவையில்லை. மாநில கல்வி கொள்கையை உருவாக்குவதற்கு தமிழக அரசு அமைத்துள்ள குழுவில் சிறந்த வல்லுநர்கள் உள்ளனர். எனவே மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழகத்தின் மாநில கல்விக்கொள்கை விளங்கும் என கூறினார்.

2022 Exam Hand Book All chapter

2022 Exam Hand Book All chapter - Click Here to Download

Wednesday, 6 April 2022

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் ஹேப்பி நியூஸ்

கொரொனோ காலகட்டத்தை கருத்தில் கொண்டு பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 30 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டு 70 சதவீத பகுதிகள் மட்டுமே நடத்தப்பட்டன.10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நடத்தி முடிக்கப்பட்ட பாடங்களிலிருந்து மட்டுமே கேள்விகள் கேட்டப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.




கொரொனோ தாக்கம் பல்வேறு பாதிப்புகளை மாணவர்களுடைய கற்றல் பணிகளில் ஏற்படுத்தியுள்ளது. இரண்டு ஆண்டுகாலம் நேரடியாக வகுப்புகள் நடைபெறாத நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் 10, 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டன.

750 பட்டதாரி ஆசிரியர்களின் பணிநீட்டிப்பு ஆணை வெளியீடு

750 பட்டதாரி ஆசிரியர்களின் பணிநீட்டிப்பு ஆணை வெளியீடு - இதனை அழுத்தி தரவிறக்கம் செய்க...

Friday, 4 March 2022

பொதுத்தேர்வு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது என்ன?

சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 10, 11, 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்வுகள் முடிந்தபிறகு 2022-2023 பள்ளி கல்வி ஆண்டுக்காக 1 முதல் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான வழக்கமான வகுப்புகள் 13.6.22 முதல் தொடங்கும்.11-ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் 24.6.2022 முதல் தொடங்க உள்ளது.


பிளஸ்-1 வகுப்புகளுக்கு ரிவி‌ஷன் டெஸ்ட் இப்போது முதல் பொதுத்தேர்வு வரை நடைபெறும்.தேர்வுக்காக மாணவர்கள் மகிழ்ச்சியாக படிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். மன நிறைவோடு தேர்வுகளை எழுத வேண்டும் என்றும் கூறி உள்ளார்.அடுத்தவர்கள் திருப்திக்காக தேர்வு எழுதுவதை காட்டிலும் நான் படிச்சி நான் தேர்வு எழுத இருக்கிறேன் என்ற அளவுக்கு மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என்று சொல்லி உள்ளார்.

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here