Sunday, 29 July 2018

முயற்சியுடன் பயிற்சி இருந்தால் வளர்ச்சி தானாக வரும் என தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் சேவியர் பேச்சு

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு   ஓவியம் மற்றும் பேச்சு போட்டிகள் நடைபெற்றது.மாணவர்கள் பென்சிலால் அப்துல்கலாம் ஓவியத்தை வரைந்து அசத்தினார்கள்.விழாவிற்கு வந்தவர்களை பள்ளி ஆசிரியை முத்து மீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர்  லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.

இனி வாட்ஸ் அப்லேயே ரயில் எங்கு வந்துகொண்டிருக்கிறது என நேரடி நிலை விசாரிக்கலாம்: சூப்பர் சிஸ்டம்

இனி வாட்ஸ் அப் -லேயே ரயில் எங்கு வந்துகொண்டிருக்கிறது என நேரடி நிலை விசாரிக்கலாம்.தற்போது வாட்ஸ் அப் பயன்படுத்தி நீங்கள் செல்ல விரும்பும் ரயிலின் நேரடி நிலையை ஒருநொடியில் விசாரிக்கலாம்.

ஸ்மார்ட் போன் வந்ததிலிருந்து நாம் ஏதேனும் பொருட்களை வாங்குதல், இணையதளத்தில் தேடுதல் என எல்லாமே அதிலேயே செய்துவருகின்றோம். இந்த மேலும் அதிகமாக்கியுள்ளதுதற்போது கிடைத்துவரும் இலவச இணையதளம்.

ஆசிரியர்களின்,தலைமையாசிரியர்களின் கல்விப்பணி திருப்திகரமாக இல்லையெனில் ஆண்டு ஊதிய உயர்வு நிறுத்தம்: முதன்மைக்கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் எச்சரிக்கை


செஞ்சி அருகே உள்ள மட்டப்பாறை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாவட்டக்கல்வி அலுவலர் ஆய்வு

மாவட்ட கல்வி அலுவலர் கோ.கிருஷ்ணன் அவர்கள் PUPS மட்டப்பாறை பள்ளியை காலை 9:00 மணியளவில் பார்வையிட்டார்.அப்போது SMC  Leader கவிதா prayer-ல் கலந்து கொண்டார்.
பிறகு பள்ளியை மாவட்ட கல்வி அலுவலர் பார்வையிட்டார்.அப்போது முதல் வகுப்பு சாதனா கைவீசம்மா கைவீசு பாடலை பாடி காட்டினர்.

Tuesday, 24 July 2018

கோவை புத்தக கண்காட்சியினை திறந்து வைத்தார் தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலர் த.உதயச்சந்திரன் இ.ஆ.ப.,

கோவை கொடிசியா அரங்கில் நூற்றுக்கணக்கான பதிப்பகங்கள், லட்சக்கணக்கான புத்தகங்கள் கொண்ட புத்தக கண்காட்சி வெள்ளியன்று துவங்கியது.இந்த கண்காட்சியினை பள்ளிக்கல்வி துறை செயலாளர் உதயசந்திரன் துவக்கி வைத்தார். இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,இந்த புத்தக கண்காட்சி குழந்தைகளை ஈர்க்கும் வகையில் உள்ளது.

புதிய பாடத் திட்டம் குறித்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதுபோல், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும்: தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலர் த.உதயச்சந்திரன் இ.ஆ.ப.,

புதிய பாடத் திட்டம் குறித்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதுபோல், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும் என்றார் தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலர் த.உதயச்சந்திரன்.நாமக்கல் கோட்டை நகரவை உயர்நிலைப் பள்ளியில் தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலர் த.உதயச்சந்திரன் வெள்ளிக்கிழமை காலை ஆய்வு மேற்கொண்டார். மாணவர்களிடையே பேசிய அவர்,  புதிய பாடத் திட்டங்கள் குறித்து விளக்கங்களைக் கேட்டறிந்தார்.  மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம்,  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பி.உஷா ஆகியோர் உடனிருந்தனர்.இதையடுத்து,  அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:  தமிழக அரசின் பாடத் திட்டத்தைப் பின்பற்றும் அனைத்துப் பள்ளிகளிலும் 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் இந்தப் பாடத் திட்டம் அமைந்துள்ளது. மாணவர்கள் சிந்தனையைத் தூண்டும் வகையில் பாடங்கள் அமைந்துள்ளன.  இழையோடும் தொழில்நுட்பம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

Wednesday, 18 July 2018

பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் மூலம் இளநிலை உதவியாளர் / உதவியாளர்களுக்கு அடிப்படைப் பயிற்சி நடத்துதல் –15.07.2018 நிலவரப்படி பயிற்சி பெறவேண்டி நிலுவையில் உள்ள பணியாளர்களின் பட்டியல் அனுப்பக் கோருதல் பள்ளிக்கல்வி இணை இயக்குநர் பணியாளர் தொகுதி செயல்முறைகள்

பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் மூலம் இளநிலை உதவியாளர் / உதவியாளர்களுக்கு அடிப்படைப் பயிற்சி நடத்துதல் –15.07.2018 நிலவரப்படி பயிற்சி பெறவேண்டி நிலுவையில் உள்ள பணியாளர்களின் பட்டியல் அனுப்பக் கோருதல் பள்ளிக்கல்வி இணை இயக்குநர் பணியாளர் தொகுதி செயல்முறைகள் காண மற்றும் தரவிறக்கம் செய்திட இதனை அழுத்துக... 

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாடத்திட்டம் மாற்றப்படும்" - பள்ளிகல்வித் துறை செயலாளர் உதயசந்திரன் தகவல்

இனி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பள்ளி பாடத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என பள்ளி கல்வித் துறை செயலாளர் உதயசந்திரன் தெரிவித்துள்ளார்.ஒன்று 6, 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு புதிய பாட புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள வகுப்புகளுக்கு, அடுத்த ஆண்டு புதிய பாடப் புத்தகங்கள் அமலுக்கு வர உள்ளன. இந்நிலையில், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாடத் தி்ட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் எனவும், ஆண்டுக்கு ஒருமுறை புதிய தகவல்கள் அனைத்தும் பாடத்திட்டங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கல்வித் துறை பாடத்திட்ட செயலாளர் உதயசந்திரன் தெரிவித்துள்ளார்.

தனியார் பள்ளி மாணவர்களுக்கும் உளவியல் ஆலோசனை தேவை

-தினமலர் 

சிந்தனையை தூண்டும் புதிய பாடத்திட்டம்:பயிற்சி வகுப்பில் கல்வி அதிகாரி தகவல்

-தினமலர்

மழைக்காலத்தில் மாணவர் பாதுகாப்பில்...அலட்சியம் வேண்டாம்!  ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுரை

''மழைக்காலத்தில், பள்ளி வளாகத்தில், மாணவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்,'' என மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், கடந்த, பத்து நாட்களுக்கு மேலாக தொடர்ந்து தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. பருவமழை காலை முதல் இரவு வரை தொடர்ந்து பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Monday, 16 July 2018

கும்பகோணம் தீவிபத்து : 14 ம் ஆண்டு நினைவு தினம்

கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் 94 குழந்தைகள் உடல்கருகி உயிரிழந்த சம்பவத்தின் 14 ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

Sunday, 15 July 2018

புதுமைப்பள்ளி விருது பெற்ற பள்ளிகள் ரொக்கப் பரிசினை பயன்படுத்துதல் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்

கடலூரில் வட்டார கல்வி அலுவலகம் திறப்பு விழா


       கடலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலவலர் அலுவலகம் அருகே கடலூர் வட்டார கல்வி அலுவலகத்திறப்புவிழா,கடலூர் மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ் அவர்கள் தலைமையில் கடலூர் வட்டாரக்கல்வி அலுவலர்கள் செல்வம், இராதாகிருஷ்ணன்,சரளா,அறிவழகி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

பரளி அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா

கோயம்புத்தூர் மாவட்டம்,மேட்டுப்பாளையம் தாலுகாவில் உள்ள பரளி அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.

நல்லாண் பிள்ளை பெற்றாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகாவில் உள்ள நல்லாண் பிள்ளை பெற்றாள் அரசு மேல்நிலைப்பள்ளியில்
இன்று கல்வி வளர்ச்சி நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Saturday, 14 July 2018

தர்மபுரியில் v4house இணையதளம் துவக்க விழா

Volunteers for house trust அமைப்பின் இணையதளம் www.v4house.org அறிமுக விழா தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.மு.இராமசாமி அவர்களின் தலைமையில் மிக எளிமையாக நடைபெற்றது.

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here