Wednesday, 30 January 2019
Tuesday, 29 January 2019
Monday, 28 January 2019
தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கு நெறிமுறை வெளியீடு
தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் சில நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி அந்தந்த பள்ளி அருகே குடியிருக்கும் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும்.
அதிக மாணவர்கள் உள்ள பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர் நியமிக்க முன்னுரிமை மேலும் தற்காலிக ஆசிரியர்கள் அரசு வேலைவாய்ப்பில் எவ்வித உரிமை மற்றும் முன்னுரிமை கோர முடியாது என ஆறு நெறிமுறைகளை வகுத்துள்ளது.
அதிக மாணவர்கள் உள்ள பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர் நியமிக்க முன்னுரிமை மேலும் தற்காலிக ஆசிரியர்கள் அரசு வேலைவாய்ப்பில் எவ்வித உரிமை மற்றும் முன்னுரிமை கோர முடியாது என ஆறு நெறிமுறைகளை வகுத்துள்ளது.
பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக்
வரும் 1 ம் தேதி முதல் தலைமைசெயலக ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். தமிழகம் முழுவதும் சம்பளம், இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆசிரியர் சங்கத்தினர் கூட்டமைப்பான ஜக்டோ ஜியோ அமைப்பினர் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு பணிகள் முடங்கியுள்ளது.
தலைமை செயலாளர்களுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்
லோக்சபா தேர்தல் தொடர்பாக அனைத்து மாநிலக தலைமை செயலாளர்களுக்கும் தலைமை தேர்தல் கமிஷன் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.2019 லோக்சபா தேர்தல் மற்றும் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளதால் அதிகாரிகள் பணியிட மாற்றம் மற்றும் பணி நியமனம் தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலாளர்கள் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் தலைமை தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பி உள்ளது.
Friday, 25 January 2019
ஆசிரியர்களின் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, வால்பாறையில் மகன், மகளுடன் சமூக ஆர்வலர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதாக ஆங்காங்கே புகார் எழுந்துள்ளன. இந்நிலையில், கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சமூக ஆர்வலர் அஜீஸ் மஸ்தான் என்பவர், அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் தன் மகள் அஜ்மிகா மற்றும் 1-ம் வகுப்பு படிக்கும் மகன் அஜ்மல் ஆகியோருடன், ஆசிரியர்கள் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காந்தி சிலை அருகே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
நாளை 70 -வது குடியரசு தின விழா கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு
குடியரசு தின விழா நாளை கொண்டாடப்படு வதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிரவாதி களின் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகள் எச்சரித்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
குடியரசு தினத்தை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப் பது குறித்து விவாதிக்கவும் போலீஸ் அதிகாரி களுடன் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆலோசனை நடத்தினார். அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் பாதுகாப்பு முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது குறித்து அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
Thursday, 24 January 2019
Wednesday, 23 January 2019
மாணவர்களுக்கு பயனுள்ள இணையதளங்கள்...
மாணவர்கள் நீங்க இணையதளம் சென்றால் எங்கு உலவுவீர்கள்? சமூகவலைத் தளங்களில்தானே. அதனால்தான் உங்கள் பெற்றோர் அதிருப்தி அடைகிறார்கள். நீங்கள் உங்கள் கல்வியையும், எதிர்காலத்தையும் வளப்படுத்திக் கொள்ள வழி செய்யும் நிறைய இணையதளங்கள் இருப்பதை நீங்கள் பயன்படுத்த வேண்டும். அவற்றில் முக்கியமான சில இணைய தளங்களை இங்கே பட்டியலிடுகிறோம்...
Saturday, 12 January 2019
தன் குழந்தையை அரசு அங்கான்வாடியில் சேர்த்து முன் மாதிரியாக திகழும் நெல்லை மாவட்ட ஆட்சியர்
தன் சுய கெளரவத்திற்காக தாலி கொடியை அடகு வைத்து தனியார் பள்ளியில் சேர்க்கும் இன்றைய பெற்றோர்கள் மத்தியில் தன் குழந்தையை அரசு அங்கான்வாடியில் சேர்த்த நெல்லை மாவட்ட ஆட்சியர் தி௫மதி.ஷில்பா சதீஷ் பிரபாகர் அவர்கள்.
பெற்றோர்களே தங்களின் பிள்ளைகளை எதை நோக்கி கொண்டு செல்கிறீர்கள், அவர்களுக்கு இந்த சமூகத்தின் வாழ கற்றுக் கொடுங்கள்,மனித நேயத்தை உணர்த்துங்கள், குழந்தை பிறக்கும் முன்பாகவே எந்த தனியார் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று தயாராகி விடுகிறார்கள். நெல்லை மாவட்டம் மட்டும் அல்ல தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்களின் குழந்தைகள் எந்த பள்ளியில் படிக்கிறது என்று ஓர் கணக்கெடுப்பு நடத்தினால், அரசு பள்ளியின் சேர்க்கை 10% கூட தாண்டாது.
பெற்றோர்களே தங்களின் பிள்ளைகளை எதை நோக்கி கொண்டு செல்கிறீர்கள், அவர்களுக்கு இந்த சமூகத்தின் வாழ கற்றுக் கொடுங்கள்,மனித நேயத்தை உணர்த்துங்கள், குழந்தை பிறக்கும் முன்பாகவே எந்த தனியார் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று தயாராகி விடுகிறார்கள். நெல்லை மாவட்டம் மட்டும் அல்ல தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்களின் குழந்தைகள் எந்த பள்ளியில் படிக்கிறது என்று ஓர் கணக்கெடுப்பு நடத்தினால், அரசு பள்ளியின் சேர்க்கை 10% கூட தாண்டாது.
அங்கன்வாடி மையத்தில் கே.ஜி., வகுப்பு!: பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு
அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இருக்கும், அங்கன்வாடி மையங்களில், எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகள் துவங்குவதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்த, வட்டார கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு நடுநிலைப்பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், குழந்தைகளுக்கான அடிப்படை கற்றல் திறன்களை, மேம்படுத்தவும் அங்கன்வாடி மையங்களில், எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகள் துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.இதையடுத்து, நடுநிலைப்பள்ளிகளுடன் இணைந்துள்ள அங்கன்வாடி மையங்கள் குறித்து பட்டியல் அனுப்ப, கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இ
10ம் வகுப்பு தனித்தேர்வு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள், ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிக்கை:மார்ச் மாதம், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு, விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்கள் வரும், 7 முதல், 14ம் தேதி வரை, கல்வி மாவட்ட வாரியாக அமைகப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது.ஆனால், 14ம் தேதி, போகி பண்டிகையை முன்னிட்டு, மாநில அரசால், உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க, 18 மற்றும், 19 ஆகிய தேதிகள் நீட்டிப்பு செய்து வழங்கப்படுகிறது.விரிவான தகவல்களை, www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
Sunday, 6 January 2019
பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு தினமும் மாதிரித் தேர்வு நடத்த உத்தரவு
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தினமும் மாதிரித் தேர்வு நடத்தி பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக பாடத் திட்டத்தில், பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. வரும் மார்ச் 1-இல் பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளன. பெரும்பாலான தனியார் பள்ளிகளில், பத்தாம் வகுப்பு மற்றும், பிளஸ் 2 பாடங்கள் முடிக்கப்பட்டு, பாடங்களின் திருப்புதல் நடைபெற்று வருகிறது.
தமிழக பாடத் திட்டத்தில், பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. வரும் மார்ச் 1-இல் பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளன. பெரும்பாலான தனியார் பள்ளிகளில், பத்தாம் வகுப்பு மற்றும், பிளஸ் 2 பாடங்கள் முடிக்கப்பட்டு, பாடங்களின் திருப்புதல் நடைபெற்று வருகிறது.
Friday, 4 January 2019
Thursday, 3 January 2019
விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறப்பு : உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவர்கள்
அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகள் திறக்கப்பட்டன. 10 நாட்கள் விடுமுறைக்கு பிறகு மாணவர்கள் பள்ளிக்கு மிகவும் உற்சாகமாக வந்தனர். மாணவர்களுக்கு 3-ம் பருவத் தேர்வு புத்தகங்களும், சீருடைகளும் இலவசமாக வழங்கப்பட உள்ளன. இதற்காக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகங்கள் வழியாக புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. பள்ளி வளாகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்தினர்.
Subscribe to:
Posts (Atom)
1282 BT Assistant Post continuation order
1282 BT Assistant Six Month Post continuation order - click here
-
Set lanuage - 9th std - Click Here to Download 9&10 Maths set Relation & Funcions -1 9&10 Maths set Relation & Funcions -2 ...
-
1282 BT Assistant Six Month Post continuation order - click here