Tuesday, 28 April 2020

35 மாணவர்களுக்கு தலா ரூ.1000: சொந்தப் பணத்தை வழங்கிய அரசுப் பள்ளி ஆசிரியர்

 திருச்சி களத்தூர் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக அவர்களின் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ரூ.1000 என 35 பெற்றோர்களுக்கு ரூ.35,000 வழங்கியுள்ளார் அரசுப் பள்ளி ஆசிரியர் குருமூர்த்தி.

நாடு முழுவதும் கரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் வாங்கும் திறனும் கணிசமாகக் குறைந்துள்ளது. குறிப்பாக ஏழை மக்களின் நிலை, சொல்லமுடியாத அளவுக்கு வறுமையுடன் இருக்கிறது.

மாணவர்களுக்குத் தேர்வுகள் எப்போது நடைபெறும்..? மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதில்

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள சூழலில், தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற கேள்விக்கு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதிலளித்துள்ளார்.

கடந்த ஒருமாதமாக நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகள் இயங்காததுடன், பொதுத்தேர்வுகளும், செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த இக்கட்டான காலகட்டத்தில் மாணவர்கள் சந்திக்கும் உளவியல் பிரச்சனைகள் உள்ளிட்டவை குறித்து பெற்றோர்களிடம் காணொளிக்காட்சி மூலமாக உரையாற்றினார் ரமேஷ் பொக்ரியால். இதில் பெரும்பாலான பெற்றோர்களின் கேள்வி, பொதுத்தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பதாகவே இருந்தது.

கேரளாவில் அரசு ஊழியர்களின் ஒரு மாத சம்பளம் பிடித்தம்

கொரோனா நிவாரண பணிகளுக்கு உதவும் வகையில், அரசு ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்தை பிடித்தம் செய்ய, கேரள அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பிரதமர் நிவாரண நிதி மற்றும் மாநில நிவாரண நிதியில் திரட்டப்படும் நன்கொடை மூலம் கொரோனா நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாட்டிலேயே கொரோனாவிலிருந்து மீண்டவர்களை அதிகமாக கொண்ட மாநிலமாக கேரளா உள்ளது. கேரளாவில் இதுவரை 437 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2 பேர் மட்டுமே பலியாகி உள்ளனர். 308 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டும் அரசு கல்லூரி பேராசிரியர்கள்!

புதுச்சேரி தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர்கள் தங்களுடைய கல்லூரியில் பயிலும் ஏழை மாணவர்கள், ஏழைக் குடும்பங்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத்தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளன. இந்த இக்கட்டான சூழலில் ஏழை மக்களுக்கு உதவும் விதமாக புதுச்சேரி லாஸ்பேட்டை தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர்கள் நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகின்றனர்.

Monday, 27 April 2020

அமிர்தா கல்லூரி மாணவர்களின் வீடு தேடி சென்று நிவாரண பொருட்கள்

அமிர்தா கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர்களின் குடும்ப நலன் கருதி வீடுதேடி சென்று நிவாரண பொருட்களை கல்லூரி தாளாளர் ஜி.ஆர்.சபரிக்கு பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் செட்டியபட்டி ஊராட்சியில் செயல்படும் அமிர்தா கல்வி நிறுவனங்கள் சார்பாக அமிர்தா நர்சிங் கல்லூரி, அமிர்தா தொழிற்பள்ளி, அமிர்தா கேட்டரிங் மேனேஜ்மெண்ட், அமிர்தா பேஷன் டிசைனிங் மற்றும் ஹெல்த்கேர் உள்ளிட்ட கல்லூரிகள் செயல்படுகின்றன. இங்கு சுற்றுப்புற கிராமங்களான செம்பட்டி, சித்தையன்கோட்டை, ஆத்தூர், சின்னாளபட்டி, பாளையங்கோட்டை, எஸ்.பாறைப்பட்டி, மதுரை-வாடிப்பட்டி, கன்னிவாடி உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

ஒரு மாத ஊதியத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள 500 போலீசாரின் குடும்பத்திற்கு காய்கறிகளை வழங்கிய கடலூர் டி.எஸ்.பி

கடலூர் டிஎஸ்பி தனது சொந்த ஒருமாத ஊதியத்தில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணியில் இருக்கும் 500 காவலர்களுக்கு காய்கறிகளை வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதல்நால் தொடங்கி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் அவர்களின் அறிவுரையின்பேரில் கொரானா தடுப்பு பாதுகாப்பு பணியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு மாதம் ஊதியம் ரூ.70,603 வழங்கி மின்வாரிய ஊழியர் நெகிழ்ச்சி

கொரோனாவை ஒழிக்க முதல்வர் நிவாரண நிதிக்கு மதுரையைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர் தனது ஒரு மாதம் ஊதியம் ரூ.70,603-ஐ வழங்கி நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளார்.

தமிழ்நாடு மின்சவாரியம் மதுரை பெருநகர் வட்டத்தில் செல்லூர் மின்பிரிவில் முதல்நில முகவராக பணிபுரிபவர் மெ.பாலராமலிங்கம்.

தன்னார்வலராக களமிறங்கிய சி.இ.ஓ கணேஷ்மூர்த்தி


பள்ளி மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கிய தலைமை ஆசிரியர்


கொரோனா நோய் தடுப்பு பணிகளில் தன்னார்வலர்களாக மாறிய அரசு பள்ளி ஆசிரியர்கள்

சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் கொரோனா நோய் தடுப்பு பணிகளில் தன்னார்வலர்களாக செயல்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்று காலை வரை மாநிலம் முழுவதும் 411 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து, ஊரடங்கு உத்தரவை மதித்து, பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, கொரோனா நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Leave Rules, 1933 - Periodical surrender of Earned Leave and payment of leave salary - Suspended for a year Order Issued

Friday, 17 April 2020

ஏப்ரல் - 2020 மாத ஊதியப் பட்டியல் தயார் செய்து கருவூலத்தில் சமர்ப்பித்தல் சார்பாக தலைமையாசிரியர் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அலுவலக தலைமையிடம் சென்று வர அனுமதி சார்ந்து திண்டுக்கல் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்

Corona Virus - Tamilnadu Health Department Instructions

பள்ளி மாற்றுச் சான்றிதழ்கள் அனைத்தும் கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் (EMIS) ஏற்படுத்தப்பட்டுள்ள வசதியை பயன்படுத்தி அச்செடுத்து வழங்கப்படுதல் சார்ந்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்

Compassionate Ground Appointment Guidelines Regards CEO Letter With Govt Order Copy

Non Teaching Staffs Retirement Permission Forms

Thursday, 9 April 2020

கல்லுாரி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை

கல்லுாரி மாணவர் களுக்கு, பேராசிரியர்கள் உளவியல் ஆலோசனை வழங்க வேண்டுமென, பல்கலைக்கழக மானிய குழு அறிவுறுத்தியுள்ளது.'கொரோனா' வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு முன்னதாகவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், அவர்களின் மனநிலையை கண்காணித்தும், அவர்களுக்கான உளவியல் ஆலோசனை வழங்கவும், பல் கலைக்கழக மானியக்குழு இணையதளம் மூலமாக அறிவுறுத்தியுள்ளது.

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு: கூடுதல் கால அவகாசம் தர வலியுறுத்தல்

அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில் எடுக்கப்படும் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு, இயல்பான சூழல் திரும்பியதும் கூடுதல் கால அவகாசம் அளித்து நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.உடுமலை கல்வி மாவட்டத்தில் உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் ஒன்றியங்களைச் சேர்ந்த பள்ளிகள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு கல்வியாண்டிலும், ஆறு முதல் 14 வயது வரை, பள்ளிக்கு செல்லாமல் உள்ள குழந்தைகள் குறித்து, மத்திய அரசின் சார்பில் அனைவருக்கம் கல்வி இயக்ககம் மூலம் கணக்கெடுப்பு நடக்கிறது.

சென்னை மாவட்டத்தில் நிவாரணத் தொகை பெற, வங்கி கணக்கை அளிக்காத உறுப்பினர்கள் பதிவு செய்திட அறிவுறுத்தல்

சென்னை மாவட்டத்தில் நிவாரணத் தொகை பெற, வங்கி கணக்கை அளிக்காத உறுப்பினர்கள், தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.தமிழ்நாடு கட்டுமான மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்கள் நலவாரியம் மற்றும் அமைப்பு சாரா ஓட்டுனர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு, 1,000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்க, தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: முதல்வர் முடிவு எடுப்பார் என பள்ளிக்கவி அமைச்சர் அறிவிப்பு

'பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து, முதல்வர் தான் முடிவு செய்வார்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், கோபி நகராட்சி மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில், கோபி பஸ் ஸ்டாண்டில் அமைக்கப்பட்ட, கிருமி நாசினி சுரங்கம் மற்றும் நடமாடும் காய்கறி விற்பனை வாகனத்தை, அமைச்சர் செங்கோட்டையன் நேற்று துவக்கி வைத்தார்.பின், அமைச்சர் அளித்த பேட்டி:

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here