Wednesday, 27 October 2021

பள்ளிகள் திறப்பு; அரை நாள் மட்டுமே வகுப்பு... வருகை பதிவு கட்டாயமில்லை- புதுச்சேரி அமைச்சர்

புதுச்சேரியில் நவம்பர் 8ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் நமசிவாயம் தெரிவித்துள்ளார். அரை நாள் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்றும் வருகைப் பதிவு கட்டாயமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

புதுச்சேரி, கல்வி துறை வளாகத்தில் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,கொரோனா காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன.

மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டியது கட்டாயமில்லை - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சென்னை அருகே உள்ள கூடுவாஞ்சேரியில் தீபம் மருத்துவமனை அதிதீவிர சிகிச்சை பிரிவு தனியார் மருந்துவமனையின் துவக்க விழா நேற்று நடைபெற்றது. ஊரக தொழில்கள் மற்றும் குடிசை மாற்று வாரிய அமைச்சர் தா.மோ அன்பரசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தீவிர சிகிச்சை பிரிவை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். அதன்பின் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:


Friday, 17 September 2021

6- ஆம் வகுப்பு முதல் 8- ஆம் வகுப்பு வரை பள்ளி திறப்பு எப்போது?

சென்னையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தற்போது காணொளி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில், பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.


Monday, 13 September 2021

பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று: பெற்றோர்கள் கவலை

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. பெருந்தொற்று காலத்தில் பள்ளிகள் செயல்படுவதால் முன்னெச்சரிகையாக மாணவர்கள், ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய நோய் தடுப்பு விதிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது. அதனை முறையாக பின்பற்றும் படி உத்தரவிட்டது. அதன்படி பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல வகுப்புகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.

1400 BT & PET POST CONTIUNIATION ORDER

 1400 BT & PET POST CONTIUNIATION ORDER - click here to download

Samagra Shiksha - Opening of New Canara Bank Account & SPD Instructions

Letter to all ceo"s - click here to download


Letter to canara bank - click here to download


New Account - Proceeding - click here to download


SNA Account Opening DPC BRC School - click here to download

Wednesday, 14 July 2021

தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியரின் ஏழை மாணவர்களுக்கு உதவும் முயற்சி - ஆன்லைன் கல்வி ரேடியோ

ஏழை மாணவர்கள் ஆன்லைன் கல்வி கற்கும் வகையில், தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர்களின் கூட்டு முயற்சியால் ஆன்லைன் கல்வி ரேடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரேடியோ மூலம் ஸ்மார்ட் போன் வசதி இல்லாத மாணவர்களும் சாதாரண 2ஜி அலைவரிசையில் இயங்கக்கூடிய அலைபேசியில் ஆன்லைன் கல்வி கற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஸ்மார்ட் போன் மூலமாக ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில் போதுமான இணையம் அல்லது ஸ்மார்ட்போன் வசதி இல்லாத கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவர்கள் ஆன்லைனில் கல்வி கற்பது மிகவும் சிரமமாக இருந்தது.‌ இதனைக் கருத்தில் கொண்டு ரேடியோ மூலம் ஆன்லைனில் பாடமெடுக்கும் புதிய முயற்சியை கடலூர் மாவட்டம், புவனகிரி பகுதிக்கு உட்பட்ட கத்தாழை ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஆ.கார்த்திக்ராஜா மேற்கொண்டுள்ளார்.

தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேருவதற்கான வசதிகள்; விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்: மருத்துவர் ராமதாஸ்

தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேருவதற்கான வசதிகள் குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜூன் 20) வெளியிட்ட அறிக்கை:

"கரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் நிலையில், அக்குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வி எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.பொருளாதாரச் சூழல்களால் தனியார் பள்ளிகளில் படிப்பைத் தொடர முடியாத குழந்தைகள், அரசு பள்ளிகளில் படிக்கலாம் என்றாலும், அது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாதது வருத்தமளிக்கிறது.


Thursday, 17 June 2021

திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்க காலணிகள் வருகை

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு அரசு சார்பில் புத்தகப்பை, காலணி, சீருடை போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் இவை மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் நீண்ட நாட்களாக மூடப்பட்டுள்ளன. இருப்பினும் தமிழக அரசின் நடவடிக்கையின் காரணமாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. 

Wednesday, 16 June 2021

அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம் தயார்

பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் மாணவர்கள் வீட்டில் இருந்து படிப்பதற்கு வசதியாக இந்த மாத இறுதியில் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது.தமிழக அரசு சார்பில் விலையில்லா பாடப்புத்தகம் அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இதனை இலவசமாக பெற்று பயனடைந்து வருகிறார்கள்.

நகராட்சிப் பள்ளியில் மூன்றே நாட்களில் இருக்கைகளைத் தாண்டி 2 மடங்கு குவிந்த மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 3 நாட்களில் இருக்கைகளை தாண்டி 2 மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளதால், அரசிடம் கூடுதல் வகுப்பறைகள், ஆசிரியர்களை கேட்டுப் பெற நிர்வாகம் முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும்நிலையில், அரசு உத்தரவுப்படி ஜூன் 14 முதல் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளன.


தனியார் பள்ளி மோகத்தால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வரும் இக்காலக்கட்டத்தில் ஆச்சரியப்படுத்தும் விதமாக காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

தொழிற்கல்வி படிப்பில் அரசு பள்ளி மாணவர் சேர்க்கை: ஆராய ஒருநபர் ஆணையம் அமைப்பு

தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை குறித்து ஆராய ஒரு நபர் ஆணையம் அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை குறித்து ஆராய ஒரு நபர் ஆணையம் அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி முருகேசன் தலைமையில் இந்த ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.


இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "2020- 2021 ஆம் கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.

கோவில் நிலத்தில் பள்ளி: அறநிலையத்துறை ஏற்று நடத்த முடிவு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள, தொண்டு நிறுவன பள்ளி, இனி அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும்,'' என, அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான 141 கிரவுண்ட் நிலம், சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கத்தில் உள்ளது.

இதில், தனியார் தொண்டு நிறுவனம் வசமிருந்த 32 கிரவுண்டில் செயல்பட்டு வந்த சீதா கிங்ஸ்டன் மெட்ரிகுலேஷன் பள்ளியை, அறநிலையத்துறை சுவாதீனமாக பெற்றது.அப்பள்ளி அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் நேற்று கொண்டு வரப்பட்டது. பள்ளியை பார்வையிட்ட, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:

Monday, 14 June 2021

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை இன்று தொடங்கியது

கொரோனா சூழலைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இன்று (14.06.2021) மாணவர் சேர்க்கை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட மாணவர்களை அழைத்துச் சேர்க்கைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. 

அதன்படி, முதலில் அந்தந்தப் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி படித்தவர்களுக்கு அதே பள்ளியில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதன்பிறகு மற்ற பள்ளிகளிலிருந்து வருவோருக்கு மாணவர் சேர்க்கை நடக்கும். 11ஆம் வகுப்புக்கான சேர்க்கை முழுவதும் முடிந்த பிறகு, பிற வகுப்புகளுக்கான சேர்க்கை துவங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பதால், பத்தாம் வகுப்பு மாணவர்களின் ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்றுவருகிறது. 

விறுவிறுப்பாக நடந்த பிளஸ் 1 மாணவர் சேர்க்கை- மருத்துவ, வணிகவியல் பிரிவுக்கு கடும் போட்டி

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி இருப்பதால் பெரும்பாலான மாணவ-மாணவிகள் முதல் குரூப்பை தேர்வு செய்கிறார்கள்.கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு இடையே தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்கியது.அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்பில் சேருவதற்கு மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் குவிந்தனர்.

10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இன்னும் வழங்கப்படாத நிலையில் மாணவர்கள் கேட்கும் பாடப்பிரிவுகளை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கையை ஒத்திவைக்க தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை

தமிழ்நாட்டில் பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கையை ஒத்திவைக்க வேண்டும் என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமாக பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. சமீப நாள்களாக பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்று ஜூன் 14 ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்குவர வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது. பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்கலாம் என்றும் மாணவர்கள் பள்ளிக்கு நேரில் சென்று புத்தங்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

மாணவர் சேர்க்கை இந்த இடங்களில் கிடையாது: அமைச்சர் திட்டவட்டம்!

மாணவர் சேர்க்கை, பள்ளிகள் திறப்பு, புத்தகம் வழங்குதல் என பல்வேறு விஷயங்கள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியுள்ளார்.சென்னை அசோக் நகர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் தளர்வுகள் அளிக்கப்பட்ட 27 மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. மீதமுள்ள 11 மாவட்டங்களில் தளர்வுகள் வழங்கியதும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

பள்ளி, கல்லூரி திறப்புக்கான போக்குவரத்துக்கு அனுமதி: ஊரடங்கில் தளர்வுகள் கொடுத்து அரசு உதவி

 கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், பள்ளி, கல்லுாரிகள் திறப்புக்காக, ஆசிரியர்கள், பணியாளர்கள் போக்குவரத்துக்கு, அரசு அனுமதி அளித்துள்ளது. புதிய கல்வி ஆண்டுக்கான நிர்வாக பணிகளை துவங்க, பள்ளி, கல்லுாரிகளுக்கு, ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த தளர்வுகள், நாளை முதல் அமலுக்கு வருகின்றன.

கொரோனா பெருந்தொற்றால், தமிழகத்தில் ஒன்றரை ஆண்டுகளாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.முதல் அலையின் பாதிப்புகள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்தது. அதனால், மே 24 முதல் முழு ஊரடங்கு அமலானது. அந்த மூன்று வார ஊரடங்கு நாளை முடிகிறது.இந்நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டு, நாளை முதல் அமலுக்கு வருகிறது.

இன்று முதல் மாணவர் சேர்க்கை, பாடப் புத்தகங்கள் வழங்கும் பணி: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

 அரசுப் பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், நாளை முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல் முதல் அலை காரணமாகக் கடந்த ஆண்டு பள்ளிகள் இயங்கவில்லை. ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன. இடையில் அலை ஓய்ந்திருந்தபோது 9,10,11,12ஆம் வகுப்புகள் திறக்கப்பட்டுச் செயல்பட்டன. ஆனால் பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தொற்று பரவியதை அடுத்து பள்ளிகள் மூடப்பட்டன.

Tuesday, 27 April 2021

சேலம் பள்ளியில் விதிகளை மீறி பிளஸ்1 சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு: சிஇஓ கணேஷ்மூர்த்தி எச்சரிக்கை

கரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறி, சேலத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில், கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் வேகமெடுத்துள்ள நிலையில், நாள்தோறும் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நோய்த்தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். கரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. 


கொரோனாவால் பள்ளிகள் திறக்கப்படாததால் வருமானம் இன்றி தவிப்பு: தினக்கூலியாக வேலை செய்யும் தனியார் பள்ளி ஆசிரியர்கள்

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓரண்டாக தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


கல்வி கட்டண சலுகைகள்; தனியார் பள்ளிகள் தாராளம்!

கொரோனா தொற்றால் பள்ளிகளில், 'ஆன்லைன்' வகுப்புகள் மட்டும் நடத்தப்படும் நிலையில், மாணவர் சேர்க்கைக்காக, பல தனியார் பள்ளிகள் சலுகைகளை அறிவித்துள்ளன.கொரோனா தொற்றின் காரணமாக, உலகின் பெரும்பாலான நாடுகளில், பள்ளி, கல்லுாரிகளில் நேரடி வகுப்புகள் நடக்கவில்லை. சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட சில நாடுகளில் மட்டும், வழக்கம் போல, கல்வி நிறுவனங்கள் இயங்குகின்றன. நம் நாட்டிலும், தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில், ஓர் ஆண்டாக நேரடி வகுப்புகள் நடக்கவில்லை. அதனால், பள்ளிகளில் மாணவர்கள் படிப்பை பாதியில் விடுவதும், பள்ளி விட்டு பள்ளி மாறுவதும் அதிகரித்துள்ளது.

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு தொடர் பணி: கல்வித் துறை அதிகாரிகள் தகவல்

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வந்து, அலுவல் பணிகளை கவனிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.தமிழகத்தில் கரோனா பரவலால் தற்போது பள்ளிகள் மூடப்பட்டு, கல்வி தொலைக்காட்சி மற்றும் இணைய வழியில் பாடங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. மேலும், பிளஸ் 2 தவிர்த்து, இதர வகுப்புகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


Tuesday, 20 April 2021

தினமும் பள்ளிக்கு சென்று மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றும் அரசு பள்ளி மாணவர்கள்

கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையே கொரோனா கட்டுக்குள் வந்ததையடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டன. கல்லூரி வகுப்புகளும் படிப்படியாக தொடங்கப்பட்டன.


இந்த நிலையில் மீண்டும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடத்தொடங்கியுள்ளதால் திறக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போதைய நிலையில் பிளஸ்-2 வகுப்புகளுக்கு மட்டுமே வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன.

அரசு பள்ளி மாணவர்கள் கொரோனா விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் " நிழல் இல்லா நாள் " அனுசரிக்கப்படுகிறது . அன்றைய தினத்தில் சூரியன் உச்சிக்கு வருகின்ற பொழுது பூமியின் மீது உருவங்களின் நிழல்கள் விழாது அதாவது பொருள்களின் கீழ் நிழல்கள் அடங்கிவிடும் . இந்த நாளை "நிழலில்லா நாள் " என்று அழைப்பர். இதே போல் மணப்பாறை வட்டத்தில் இந்த வருடம் ஏப்ரல் 17ஆம் நாளான நேற்றைய தினம் நிழல் இல்லாத நாள் அனுசரிக்கப்பட்டது.


பொதுத் தேர்வு ஒத்தி வைப்பு - செய்முறை தேர்வு நடத்துதல் சார்ந்து அரசு தேர்வு இயக்குனர் அவர்களின் அறிவுரைகள்

 பொதுத் தேர்வு ஒத்தி வைப்பு - செய்முறை தேர்வு நடத்துதல் சார்ந்து அரசு தேர்வு இயக்குனர் அவர்களின் அறிவுரைகள் - Click Here to Download

பத்தாம் வகுப்புவகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை திட்டம்?


தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் தேர்வு ஒன்றை பள்ளி அளவில் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.அதன்படி, தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 35 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகின்றது.

Monday, 19 April 2021

பிளஸ்-2 செய்முறை தேர்வு:பள்ளிக்கல்வி இணை இயக்குனர் ஆய்வு


அரசு பொதுத்தேர்வு எழுதும் பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த செய்முறை தேர்வுகள் வருகிற 23-ந் தேதி வரை நடைபெறுகிறது. 2-வது நாளான நேற்றும் செய்முறை தேர்வு நடைபெற்றது. இந்தநிலையில் குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற செய்முறை தேர்வினை பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சசிகலா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் தேர்வு மையங்களில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா எனவும் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.


கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி ஏடுகள்

 கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவர் களுக்கு பயிற்சி ஏடுகள் வழங்கப்பட்டன.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை 57,659 மாணவர்கள் பயின்று வருகின்றனர். கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு, ஆன்லைனில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் நிலையில், மாணவர்களுக்கு பயிற்சி ஏடுகள் மற்றும் இணைப்பு புத்தக ஏடு வழங்கப்படுகிறது. இதற்கான பயிற்சி ஏடுகள் மற்றும் இணைப்பு புத்தக ஏடுகள் மாவட்டத்தில் உள்ள 4 கல்வி மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டன.

Friday, 19 March 2021

டெல்லி மாநிலத்திற்கு தனியாக பள்ளிக்கல்வி வாரியம் பதிவு: விரைவில் அரசாணை வெளியிட முடிவு

டெல்லி மாநிலத்திற்கு என்று தனியாக பள்ளிக்கல்வித்துறை வாரியம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்தனர்.  டெல்லி பள்ளிக்கல்வித்துறையை சீரமைக்க கடந்த ஆண்டு ஜூலைமாதம் ஆம்ஆத்மி அரசு முடிவு செய்தது. இதற்கான கட்டமைப்பை உருவாக்க இரண்டு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. மேலும் டெல்லி மாநிலத்திற்கு என்று தனியாக பள்ளிக்கல்வித்துறை வாரியம் அமைக்கவும், பாடத்திட்டம் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்பை டெல்லி அரசு முறைப்படி வெளியிட்டு, அதற்கு அமைச்சரவை கூட்டத்திலும் ஒப்புதல் பெறப்பட்டது. இதுபற்றி சமீபத்தில் பேட்டி அளித்த முதல்வர் கெஜ்ரிவால், தற்போதைய கல்வி முறை மனப்பாடம் செய்து படிப்பை மட்டுமே கொண்டுள்ளது.


கோவிட் - 19 விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காதவர்களிடம் அபராதம் விதிப்பது தொடர்பாக கடலூர் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்

கோவிட் - 19 விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காதவர்களிடம் அபராதம் விதிப்பது தொடர்பாக கடலூர் முதன்மைக்கல்வி அலுவலரின்  செயல்முறைகள் - Click Here Download

Thursday, 11 March 2021

தடையில்லா சான்றிதழ் அங்கீகாரம் பெறாத பள்ளிகள் மீது நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

குழந்தைகளுக்கான கட்டாய கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2009ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. இந்நிலையில்,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு  என்ஓசி மற்றும் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். சென்னை நகரில் ஆலந்தூர் பகுதியில் இயங்கி வரும் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் அந்த பள்ளிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பிறகும் பள்ளிகள் செயல்பட்டால் அந்த பள்ளிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.




பரீட்சைக்கு பயமேன் போட்டியில் பங்குபெற பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு

மாணவர்கள் பொதுத்தேர்வை நம்பிக்கையுடனும், பயமின்றியும் எழுதும் வகையில் பரீட்சைக்கு பயமேன்-2021 என்னும் நிகழ்ச்சி மூலம் பாரதப் பிரதமர் அவர்கள் பள்ளி மாணவர்களுடன் மார்ச்-2021 மூன்றாவது வாரத்தில் காணொலி காட்சி மூலம் உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




Wednesday, 20 January 2021

Temporary Posts High School & Higher Secondary School Non- Teaching Staff Sanctioned (5000) - Now working person 1299 - 3 Month Pay Order

Temporary Posts High School & Higher Secondary School Non- Teaching Staff Sanctioned (5000) - Now working person 1299 - 3 Month Pay Order - Click Here to Download

19.01.2021 அன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு உடல் நலம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த பதிவேடுகள் பள்ளிகளில் பராமரிக்க சுற்றறிக்கை

 19.01.2021 அன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு உடல் நலம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த பதிவேடுகள் பள்ளிகளில் பராமரிக்க சர்க்கார் சாமக்குளம் மாவட்டக் கல்வி அலுவலரின் சுற்றறிக்கை - Click Here to Download

மழை பாதிப்பால் 12 பள்ளிகள் திறக்கப்படவில்லை

தூத்துக்குடி மாவட்டத்தில் 316 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. தூத்துக்குடியில் மழைவெள்ளம் தேங்கி நிற்பது உள்ளிட்ட காரணங்களால் 12 பள்ளிகள் இன்று திறக்கப்படவில்லை. 10 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியர் உற்சாகமாக காணப்பட்டனர்.

பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் உற்சாகம்

தமிழகத்தில், 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள், நேற்று திறக்கப்பட்டன. 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் துவங்கின.


ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து, 2020 டிச., 2ல், கல்லுாரிகள் திறக்கப்பட்டன. பள்ளிகளையும் திறக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று, நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி, நேற்று முதல், பள்ளிகளில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகள் துவங்கின. 10 மாதங்களாக, வீடுகளில் முடங்கிய மாணவ -மாணவியர் ஆர்வத்துடன், காலை, 9:00 மணிக்கே, தங்கள் பெற்றோருடன், பள்ளிக்கு வந்தனர்.

Tuesday, 19 January 2021

அரசு பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேரில் ஆய்வு

அவிநாசி அருகேயுள்ள சேவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வித்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் இன்று நேரில் ஆய்வு செய்தார். 

தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் என பல்வேறு பணியிடங்களுக்கு ஊதிய தொடர் நீட்டிப்பு ஆணை வெளியீடு

 தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் என பல்வேறு பணியிடங்களுக்கு ஊதிய தொடர் நீட்டிப்பு ஆணை - click here to download

Thursday, 7 January 2021

நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பிரித்து மயிலாடுதுறை மாவட்டத்தை உருவாக்குதல் - அரசாணை வெளியீடு

வருவாய் நிர்வாகம் - அதிகார வரம்பு - நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பிரித்து மயிலாடுதுறை மாவட்டத்தை உருவாக்குதல் - அரசாணை வெளியீடு - GO MS NO.796 Dt. 28.12.2020 - Click Here to  Download

மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் போது பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் - தமிழில் வெளியீடு

மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் போது பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் - தமிழில் வெளியீடு - Click Here to Download

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here