Saturday, 27 May 2017

முன்னோர்களின் தியாகம்! பிளஸ் 2 தேர்வில் முதலிடத்தில் விருதுநகர் மாவட்டம்!

பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி விகிதத்தில், தமிழகத்தில் தொடர்ந்து 28 ஆண்டுகள் முதலிடத்தைப் பிடித்து வந்தது விருதுநகர் மாவட்டம். 2014, 2016 ஆகிய இரண்டு கல்வியாண்டுகளில் 3-வது இடத்துக்குத்
தள்ளப்பட்டது. ஆனாலும், 2015-இல் விருதுநகர் மாவட்டத்துக்கே முதலிடம். இந்தக் (2017) கல்வியாண்டிலும் 97.85 சதவீத தேர்ச்சி பெற்று, முதலிடத்தைப் பிடித்திருக்கிறது இந்த மாவட்டம்.

மேல்நிலைப் பொதுத்தேர்வு-2017 மாவட்ட வாரியாக தேர்ச்சி விபரம்

மாவட்ட வாரியாக தேர்ச்சி விபரம்
01. கன்னியாகுமரி - 95.75
02. திருநெல்வேலி - 96.08
03. தூத்துக்குடி- 96.44
04. ராமநாதபுரம்- 96.77
05.சிவகங்கை-96.18
06. விருதுநகர்-97.85
07. தேனி 95.93
08 மதுரை- 93.61
09.திண்டுக்கல் -92.80
10. ஊட்டி-92.06
11. திருப்பூர்-96.05
12. கோவை-95.83

Minister S.P Velumani Press meet regarding Plus Two Results


பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு | முழு விவரம்


+2 தேர்வு முடிவு வெளியானதைத் தொடர்ந்து திருவண்ணாமலை முதன்மைக்கல்வி அலுவலர் பத்திரிகையாளர் சந்திப்பு


முதன்மைக்கல்வி அலுவலர்கள் பணியிட மாறுதலைத் தொடர்ந்து பணியேற்பு/பணிவிடுவிப்பு பிரிவு உபச்சார நிகழ்வுகள்



Wednesday, 17 May 2017

அரசு பள்ளிகளை உதாசீனப்படுத்தாதீங்க

                                                            தினமலர் 

19 பள்ளி வாகனங்களுக்கு நோட்டீஸ்


                                                                தினமலர் 

அசோகபுரம் அரசு பள்ளியில் மாணவர்களிடம் கட்டாய வசூல்

                                                                   தினமலர் 

பயிற்சி வகுப்பில் பங்கேற்காதது ஏன்?


பழைய பாடத்திட்டத்தை மாற்ற குழு அமைப்பு

                                                             தினமலர் 

வேளாண் பல்கலையில் மாணவர் சேர்க்கை

                                                      தினமலர் 

ஆசிரியர் 'வாட்ஸ்அப்' குழுவில் ஆபாசப்படம்! அதிர்ச்சியால் பெண் ஆசிரியர்கள் விலகல்


வீட்டில் கழிப்பறை இல்லையா அரசு வேலை பறிபோகும்

                                                                      தினமலர்          

'நீட்' தேர்வு அத்துமீறல்: 4 ஆசிரியைகள் 'சஸ்பெண்ட்'

                                                                 தினமலர் 

பெண்களுக்கு யோகம் தருவது 'யோகா' மட்டுமே!


Thursday, 11 May 2017

+2 RESULT QUICK LINKS

பிளஸ் 2 தேர்வு முடிவு எஸ்.எம்.எஸ்.,சில் வருகிறது!

பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நாளை வெளியிடப்படுகின்றன. முதல்முறையாக, மதிப்பெண் விபரங்கள், மாணவர் அல்லது பெற்றோர் மொபைல் போன் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., என்ற, குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்பட உள்ளன.மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழிலும், புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது. நாளை வெளியாகும் முடிவுகளை அறிய, தேர்வு எழுதிய, 9.3 லட்சம் மாணவர், மாணவி யர் காத்திருக்கின்றனர்.

மார்ச் மாதத்தில் நடந்த, பிளஸ் 2 பொதுத் தேர்வின் முடிவுகள், சென்னை, நுங்கம்பாக்கம், பள்ளிக் கல்வி வளாகத்தில், நாளை காலை, 10:00 மணிக்கு வெளியிடப்படுகின்றன.இந்த முறை, தேர்வு முடிவுகளை, மொபைல் போனிலேயே தெரிந்து கொள்ளலாம். முடிவு கள் வெளியிடப்பட்ட, 10 நிமிடங்களில், எஸ்.எம். எஸ்., வரும் என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது, உறுதிமொழி படிவத்தில், மாணவர் குறிப்பிட்ட மொபைல் போன் எண்ணுக்கும், தனித் தேர்வர் கள் வழங்கிய மொபைல் போன் எண்ணுக்கும், எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும்.
மேலும், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களிலும், காலை, 10:00 மணிக்கு பின், தேர்வு முடிவுகளை பார்க்கலாம்.

ஆதாருடன் பான்(PAN) எண்ணை இணைக்க புது வசதி


பான்(PAN)  எண்ணை ஆதாருடன் வருமான வரித்துறை இணையதளம் மூலம் இணைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையில், https://incometaxindiaefiling.gov.in ,  https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/LinkAadhaarHome.html இணையதளத்தில் இதற்காக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அதில், பான்(PAN) எண், ஆதார் எண், மற்றும் ஆதார் கார்டில் உள்ளது போன்றே பெயரை குறிப்பிட வேண்டும். UIDAIயிடம், விவரங்கள் சரிபார்த்த பின்னர், இணைப்பு உறுதி செய்யப்படும். பெயரில் ஏதேனும் பிரச்னை இருந்தால், ஒருமுறை கடவு சொல் அனுப்பப்படும். இந்த கடவு சொல், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் இமெயிலுக்கு அனுப்பப்படும். ஆதார் எண் மற்றும் பான் எண்ணில் வழங்கப்பட்ட பிறந்த தேதி ஒன்றாக இருக்க வேண்டும். அப்போது தான் இணைப்பு சரியாக இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவி பேராசிரியர் பணிக்கு: 187 பேருக்கு பணி நியமன ஆணை

அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 187 பேருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இன்று (11.05.17) பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

பொதுத்தேர்வில் ரேங்க் முறை இல்லை: முதல் 3 இடம் அறிவிப்பு இனி வராது

பிளஸ் 2 முடிவுகள் இனி ரேங்க் முறையில் வெளியிடப்படாது என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.மேலும் அவர், முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்கள் பெயர் வெளியிடப்பட மாட்டாது. மாநில அளவில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் பெயரும் வெளியாகாது. சி.பி.எஸ்.இ., முறை போல் மாநில அரசு கடைபிடிக்கும்.மாணவர்களின் மனஅழுத்தம் குறைக்கப்படும் உயர் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகை,சான்றிதழ் வழங்கப்படும். +1மற்றும் +2 பாட திட்டம் குறித்து அரசு பரிசீலனை நடத்தி வருகிறது. மதிப்பெண் கொண்டு சிறந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட மாட்டாது. எனகூறினார்.

‘NEET’ தேர்வு விதிமுறைகள் கட்டுப்பாடா? கெடுபிடியா? | 08.05.17 | Kelvi Neram


NEET கேள்வித்தாளில் மொழிப்பாகுபாடு வெடிக்கும் சர்ச்சைகள்...கொதிக்கும் மாணவர்கள் | Kelvi Neram


வணிகமாகிறதா நீட் தேர்வு? | பிம்பம் | BIMBAM


நீச்சல் போட்டியில் சாதனை படைக்கும் நெல்லை மாணவி


குழந்தை நீதிபதியாக பாரீஸ் செல்லும் புதுவை அரசு பள்ளி மாணவி


தருமபுரியில் குழந்தைகள் பாராளுமன்றம் உருவாக்கிய புதிய நுாலகம்


குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கை தடுக்க சொட்டு மருந்து வழங்க தமிழக அரசு திட்டம்


ரத்தானது ரேங்க் முறை... உயருமா தரம்? குறையுமா வணிகம்? | காலத்தின் குரல் | 11-05-2017


பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு:ரேங்க் முறை நீக்கத்திற்கு உளவியல் நிபுணரின் கருத்து


பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு:ரேங்க் முறை நீக்கத்திற்கு கல்வியாளர் வரவேற்பு


பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர் சந்திப்பு


இனி ரேங்க் முறை இல்லை:பள்ளிக்கல்வி அமைச்சர்


Wednesday, 10 May 2017

அரசு திரைப்படக் கல்லூரியில் சேர இன்று(10.04.2017) முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள்தொடர்புத்துறையின் கீழ் இயங்கி வரும் ஒரு கல்வி நிறுவனம் ஆகும்.
இங்கு ஒளிப்பதிவு, டிஜிட்டல் இன்டர்மீடியேட், ஒலிப்பதிவு, இயக்கம் மற்றும் திரைக்கதை எழுதுதல், படத்தொகுப்பு (எடிட்டிங்), அனிமேஷன் மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த படிப்புகளில் 2017-18-ம் கல்வி ஆண்டில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கலைத்துறையில் ஆர்வம் கொண்ட மாணவ-மாணவிகள் இப்படிப்புகளில் சேரலாம். இதற்கான விண்ணப்பப் படிவங்களை தமிழக அரசின் இணையதளத்தில் 10-ம் தேதி (இன்று) முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

ஆங்கில வழி கல்வி தொடரும்: பள்ளிக்கல்வி அதிகாரிகள் விளக்கம்

அரசுப் பள்ளிகளில் ஆங்கிலத்தை பயிற்று மொழியாகக் கொண்ட வகுப்புகள் தொடர்ந்து நடை பெறும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.அரசுப் பள்ளிகளிலும் ஆங்கிலத்தை பயிற்று மொழியாகக் கொண்ட வகுப்புகளை தொடங்க சில ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து ஏராளமான அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன.

விமான படையில் ஆட்கள் சேர்ப்பு முகாம்

'திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில், இந்திய விமான படையில் குரூப் ஒய் பிரிவுக்கான ஆட்கள் சேர்ப்பு முகாம், வரும், 20 மற்றும், 22 ல் நடக்கிறது. இதில், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தகுதியானவர்கள் பங்கேற்று பயனடையலாம்' என, கலெக்டர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில், வரும், 20 மற்றும், 22ல், காலை, 6:00 மணி முதல், 10:00 மணி வரை, இந்திய விமான படையில், குரூப் ஒய் பிரிவில் பணி புரிய, ஆட்கள் சேர்ப்பு முகாம் நடக்க உள்ளது. 1997 ஜூலை, ஏழு முதல், 2000 டிச., 20க்குள் பிறந்த, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற, திருமணம் ஆகாத இளைஞர்கள் இதில் பங்கேற்கலாம். ஆட்கள் சேர்ப்பு முகாமில் பங்கேற்க, உடல், கல்வி, தொழிற் கல்வி தகுதி மற்றும் உரிய நேரத்தில் ஆஜராவது குறித்த விபரங்களை, www.airmenselection.gov.in என்ற இணையதள முகவரியிலும், 044-22390561, 044-22395553 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இந்த வாய்ப்பை, தர்மபுரி மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் 

பி.ஆர்க்., விதிகளில் மாற்றம்: தனியார் கல்லூரிகள் தவிப்பு

பி.ஆர்க்., கல்லுாரிகளுக்கான விதிமுறைகள், திடீரென மாற்றப்பட்டு உள்ளதால், தனியார், 'ஆர்க்கிடெக்' கல்லுாரிகளை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. அண்ணா பல்கலை இணைப்பில், தேசிய, 'ஆர்க்கிடெக்' கவுன்சில் அங்கீகாரத்தில், 90 பி.ஆர்க்., கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், 6,000 இடங்களுக்கு, அரசு ஒதுக்கீட்டில், அண்ணா பல்கலை கவுன்சிலிங் மூலம், மாணவர்கள் சேர்க்கப்படுவர். இந்தக் கல்லுாரிகள், 2015ல், அமலான விதிகளை பின்பற்றுகின்றன. இந்த ஆண்டு, 1983ல், அமலான விதிகளை பின்பற்ற வேண்டும் என, தேசிய ஆர்க்கிடெக் கவுன்சில், கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. தற்போது, ௮௦ மாணவர்களை சேர்க்கும் கல்லுாரிகளில், ௨௫ ஆசிரியர்கள் உள்ளனர். புதிய விதிகளின்படி, ஆசிரியர்களை, ௫௦ ஆக உயர்த்துவதோடு, கல்லுாரியின் பரப்பளவையும், 50 சதவீதம் அதிகரிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை, ஏப்ரல், 19ல் வெளியிட்ட, ஆர்க்கிடெக் கவுன்சில், 'புதிய விதிகளின்படி, இன்றைக்குள், கல்லுாரிகள் தயாராக வேண்டும்' என, தெரிவித்துள்ளது.

இன்ஜி., 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை அறிவிப்பு

இன்ஜினியரிங் கல்லுாரிகளில், இரண்டாம் ஆண்டு இன்ஜி., படிப்புக்கு, மே, 17 முதல் விண்ணப்பிக்கலாம். அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள அரசு, தனியார் இன்ஜி., கல்லுாரிகளில், டிப்ளமோ மற்றும் பி.எஸ்சி., முடித்தோர், இரண்டாம் ஆண்டு, இன்ஜி., படிப்பில் சேர்க்கப்படுகின்றனர். இதற்கான தமிழக அரசின் கவுன்சிலிங், காரைக்குடி அழகப்பா செட்டியார் இன்ஜி., கல்லுாரி மூலம் நடத்தப்படுகிறது. வரும் கல்வி ஆண்டில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில், இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, மே, 17 முதல், ஜூன், 14 வரை, http://www.accet.co.in/, http://www.accet.edu.in/ ஆகிய இணையதளங்களில், ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப நகல்களை, ஜூன், 14, மாலை, 5:00 மணிக்குள், காரைக்குடி அழகப்ப செட்டியார் கல்லுாரி முகவரிக்கு அனுப்ப வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
-தினமலர் 

Tuesday, 9 May 2017

அரசு பாலிடெக்னிக்குகளில் இரண்டாமாண்டு சேர்க்கை: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

அரசு பாலிடெக்னிக்குகளில் நேரடி இரண்டாமாண்டு சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் புதன்கிழமை (மே 10) முதல் வழங்கப்படவுள்ளன.
தமிழகத்தில் 2017-2018-ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 தேர்ச்சி, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 2 ஆண்டு ஐடிஐ தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி இரண்டாமாண்டு (‌la‌t‌e‌r​a‌l​ ‌e‌n‌t‌r‌y) சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் புதன்கிழமை (மே 10) முதல் மே 30-ஆம் தேதி வரை அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் வழங்கப்படவுள்ளன.
விண்ணப்பத்தின் விலை ரூ.150. தமிழகத்தைச் சேர்ந்த பட்டியல், பழங்குடி இனத்தவருக்கு விண்ணப்பக் கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்படுகிறது. அவர்கள் விண்ணப்பதைப் பெற ஜாதிச் சான்றிதழின் சான்றொப்பமிட்ட நகல் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை w‌w‌w.‌t‌n‌d‌t‌e.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் அந்தந்த பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் மே 30.

-தினமணி 

பள்ளிகளின் பணவேட்டை: தினமணி கட்டுரை


'நீட்' தேர்வில் மற்றொரு சர்ச்சை : ஹிந்தி, ஆங்கில மொழியில் தேர்வெழுதியவர்களுக்கு 'சலுகை'

நீட் தேர்வில், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி வினாத்தாள்களும், மற்ற மொழி வினாத்தாள்களும் வேறுபட்டு, மதிப்பெண் வழங்கும் முறையிலும் வித்தியாசம் இருந்ததும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவில் தேர்வெழுதிய மாணவ, மாணவிகள் மூலமாக இந்த விஷயம் தெரிய வந்துள்ளது. நீட் தேர்வெழுதிய பெங்காலி மாணவர்களுக்கு, ஆங்கில வினாத்தாளும், பெங்காலி வினாத்தாளும் ஒன்று போல இல்லாததது கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஐடிஐ மாணவர் சேர்க்கை: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: இணையதளத்தில் விளக்கக் கையேடு வெளியிடப்படும்

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் ஐடிஐ-க்களில் மாணவர்கள் சேர புதன்கிழமை (மே 10) முதல் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள், சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரவும் மாவட்ட கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்    http://skilltraining.tn.gov.in/DET/ என்ற இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன.

பள்ளிக் கல்வித்துறையில் 14 இணை இயக்குநர்கள்; 25 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம்;4 மாவட்டக்கல்வி அலுவலர் அதையொத்த பணியிடத்தில் பணிபுரிபவர்கள் முதன்மைக்கல்வி அலுவலர் உயர்வு

                                                                      தினமணி

Monday, 8 May 2017

ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அதிகாலை வரை ஆலோசனை நடத்திய பள்ளிக்கல்வி அமைச்சர்: புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன், துறையின் செயலர் த.உதயச்சந்திரன் ஆகியோர் சென்னையில் நேற்று அதிகாலை வரை ஆலோசனை நடத்தினர். இதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையின்போது ஏராளமான புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், துறை யின் செயலர் உதயச்சந்திரன் ஆகி யோர் சென்னை தி.நகரில் உள்ள சர் பி.டி.தியாகராயர் அரங்கில் செவ்வாய்க்கிழமை கலந்துரை யாடினர். இதில், 69 சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், பொறுப் பாளர்கள் கலந்துகொண்டனர்.

5 ஆண்டாக முடங்கியுள்ள பள்ளிக்கல்வி இணையதளம்

பள்ளிக்கல்வி இயக்குனரகத்தின், அதிகாரப்பூர்வ இணைய தளம் முடங்கி, ஐந்து ஆண்டுகளாகியும், இன்னும் உயிர் பெறவில்லை. தற்போதைய கணினி யுகத்தில், இணையதளமே இல்லாமல், கல்வித்துறை செயல்படுகிறது.
ஆளுமை விருது : அனைத்து மாநிலங்களும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இணைய வழியில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில், கணினி வழியே, நிர்வாக பணிகளை மேற்கொள்ளும் அரசு துறைகளுக்கு, 'மின்னணு ஆளுமை விருது' வழங்கப்படுகிறது. ஆனால், கணினி பாடத்தை மாணவர்களுக்கு கற்று கொடுக்கும், தமிழக பள்ளிக் கல்வித்துறையோ, இணையதளமே இன்றி தள்ளாடுகிறது. பள்ளி கல்விக்காக, தனியாக இணையதளம் துவங்க, தமிழக அரசு, 2009ல், அரசாணை பிறப்பித்தது. பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில், www.pallikkalvi.in என்ற இணையதளத்தை, மார்க் மேக்லின் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனம் வடிவமைத்தது.

பள்ளிக்கல்வித்துறையில் மாவட்டக்கல்வி அலுவலர்கள் பதவியுயர்வு/முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் மாறுதல் ஆணை வெளியீடு

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அண்ணா பல்கலைக் கழக மறுமதிப்பீடு மூலம் கிடைக்கப்பெற்ற தொகை விவரம்


அண்ணா பல்கலைக் கழக மறுமதிப்பீடு:ஒரு செய்தித் தொகுப்பு/Exclusive: Anna University Revaluation Process Problems | 8/05/17 | Puthiya Thalaimurai TV


நீட் தேர்வு கெடுபிடிகளுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்


பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் அமைச்சு பணியாளருக்கு பதவியுயர்வு அரசாணையை அமல்படுத்த உத்தரவு


அரசு அலுவலர் பயிற்சி நிலையம் இளநிலை உதவியாளர்கள் / உதவியாளர்களுக்கான அடிப்படைப்பயிற்சி 37 பணி நாட்கள் கொண்ட சுருக்கப்பட்ட அடிப்படைப் பயிற்சி - நான்காம் கட்டப் பயிற்சி – 11ஆம் அணி சேலம் மையத்தில் (ஆண்கள்) 08.05.2017 திங்கள்கிழமை முதல் 19.06.2017 திங்கள்கிழமை முடிய நடைமுறைப்படுத்துதல் – பணியாளர்களைப் பயிற்சிக்கு அனுப்புதல் செயல்முறைகள்

PROVIDENT FUND– General Provident Fund (Tamilnadu) – Rate of interest for the period 01.04.2017 to 30.06.2017 – Order issued

கருணை அடிப்படையில் பணி நியமனம் பணியிடையே மரணமடைந்த அரசு ஊழியர்களின் திருமணமான பெண் வாரிசுதாரர்களுக்கும் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குதல் ஆணை வெளியீடு

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாக ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்தல் பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

Sunday, 7 May 2017

நீட் தேர்வு எழுத சென்ற மாணவிகள் துப்பட்டா அணியக் கூடாது என்ற கட்டுப்பாட்டால் பெற்றோர்கள் குமுறல்


நீட் பொது நுழைவுத் தேர்வு நிறைவு : கடினமாக இருந்ததாக கருத்து


டி.எம்.எஸ் வளாகத்தில் மருத்து மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்


தேசிய அளவில் யோகாசனத்தில் சாதனை புரிந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவர்


முழுக்கை சட்டையை கிழித்து அரைக்கை சட்டையாக்கி நீட் தேர்வெழுதிய மாணவர்கள்


நீட் தேர்வு:எதிர்பாராத கெடுபிடிகளால் மாணவர்கள் திகைப்பு


கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக 'நோ நீட்' என இரத்தத்தால் எழுதி மாணவர்கள் போராட்டம்


சேலத்தில் நீட் தேர்வெழுத ஐந்து நிமிடம் கால தாமதமாக வந்த மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு


Friday, 5 May 2017

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு பணியிடங்களுக்கு ஊதியம் பெற பணியிடம் தொடர் நீட்டிப்பு ஆணைகள் வெளியீடு

மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு புதிய தலைவர் நியமனம்

மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.பி.நிர்மலா தேர்வு செய்யப்பட்டுள்ளார்

இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''குழந்தைகளுக்கெதிரான வன்கொடுமைகளுக்கு தீர்வு காணவும், குழந்தை உரிமை மீறல் மற்றும் அதுதொடர்பான பிரச்சினைகளை களைந்திடவும் தமிழ்நாட்டில் மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உருவாக்கப்பட்டது.

உத்தமபாளையம்:மாவட்ட அறிவியல் கண்காட்சி மாணவர்களுக்கு அழைப்பு

                                                                     தினமலர்

ஆடு மேய்த்த பள்ளி மாணவர் மீட்பு

                                                                       தினமலர்  

தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கும் பி.எட்., - சுந்தரனார் பல்கலையில் வாய்ப்பு

                                                                       தினமலர்    

அரசு பள்ளி மாணவர்களுக்கே இனி பரிசும் பதக்கமும் கிடைக்கும்

                                                                         தினமலர் 

அமைச்சர் முன்னிலையில் ஆசிரியர்கள் கண்ணீர்:அதிகாரிகள் சமாதானம்

 தினமலர் 

பள்ளி கோடை விடுமுறையில் மாற்றம் இல்லை:கல்வித்துறை

                                                                        தினமலர் 

நர்சரி வகுப்பு சேர்க்கை:சி,பி.எஸ்.இ., பள்ளிகள் விதிமீறல்

                                                                    தினமலர் 

ஆசிரியர்களின் இரட்டிப்பு உழைப்பு செயலாளர் உதயச்சந்திரன் அழைப்பு

                                                                        தினமலர் 

கோடை விடுமுறையில் பயிற்சி ஆசிரியைகள் கொந்தளிப்பு

                                                                       தினமலர் 

Thursday, 4 May 2017

கல்விக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுக்கும் நாமக்கல் மாவட்டத்தின் நிலை என்ன?


கல்வி உரிமை சட்டம் குறித்த விழுப்புணர்வு மக்களிடம் உள்ளதா?


சுனாமியால் உருக்குலைந்த நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் பள்ளி இன்று ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்றிருக்கிறது


கோவை மாவட்டம் காரமடையில் படிப்புக்காக காட்டு வழியில் பயணிக்கும் பழங்குடியின மாணவிகள்


Wednesday, 3 May 2017

மாணவர்கள் விரும்பும் அறிவியல் பூங்கா..ஆர்வம் காட்டும் மாணவர்கள்


பாடத்தை கதையாக மாற்றும் கற்றல்முறை | மகிழ்சியான சூழலில் படிப்பு


ஏழைக்குழந்தைகளுக்காக நாட்டிய பள்ளி நடத்தும் திருநங்கை


மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் விதமாக பள்ளிகளில் பொம்மலாட்ட கலை குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு


2000 த்துக்கும் மேற்பட்ட ஆங்கில வினைச்சொற்களை சரளமாக தமிழ் விளக்கத்துடன் அசத்தும் பள்ளி மாணவி


விஞ்ஞானியாக மாறிய 6ம் வகுப்பு மாணவன்


தனியார் பள்ளியை மிஞ்சிய கடலூர் அருகே உள்ள தொட்டி அரசு துவக்கப் பள்ளி... தலைமை ஆசிரியை முயற்சியால் சாதனை


சொந்த நகைகளை விற்று அரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்திய ஆச்சரிய ஆசிரியர் அன்னபூர்ணா! / Teacher Sells Her Jewellery to Give Students a Better Classroom!


அரசுப் பள்ளி மாணவர்களின் ஆங்கில வழிக் கல்வியை மேம்படுத்துவதற்காக ஆசிரியர் அன்னபூர்ணா சொந்த நகைகளை விற்று பணம் தந்திருப்பது அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது.ஸ்மார்ட் போர்டுகள், மாணவர்கள் சௌகர்யமாக அமர்ந்து பயில சொகுசு நாற்காலி, ஆங்கிலத்திறனை மேம்படுத்த புத்தகங்கள் என ஹைஃபையாக இருக்கும் அந்த இடத்திற்கு சென்றதும் நாம் எங்கே இருக்கிறோம் என்ற வியப்பு தன்னை அறியாமலேயே தொற்றிக் கொள்ளும். ஆம்! விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுகாவில் உள்ள கந்தாடு அரசு தொடக்கப்பள்ளியில் தான் இந்த உயர்தர கல்வி அம்சங்கள்.இந்த அரசுத் தொடக்கப்பள்ளியில் 3ம் வகுப்பு மாணவர்கள் பேசும் ஆங்கிலம் தனியார் பள்ளி மாணவர்களையே மிஞ்சிவிடும் வகையில் அமைந்துள்ளது. இந்த பெருமைகளுக்கெல்லாம் சொந்தக் காரரான அன்னபூர்ணா மோகனிடம் நேர்காணல் கண்ட போது, அதன் விவரங்கள்....

5 மணி நேரமாக கோரிக்கை வைத்த ஆசிரியர்கள் : கலந்துரையாடலில் அதிகாரிகள் தவிப்பு

தமிழகத்தில், 2011ல், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தனியாகவும், ஒன்றாக இணைந்தும் போராட்டங்கள் நடத்தினர். ஆனாலும், அமைச்சரையும், செயலரையும் சந்திக்க முடியாததால் அதிருப்தியடைந்தனர்.
ஆறு ஆண்டுகளுக்கு பின், பள்ளிக்கல்வி துறையின் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, செங்கோட்டையன்,ஆசிரியர் சங்க நிர்வாகிகளை குளிர்விக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சென்னை, தி.நகரில், தன் சொந்த செலவில், நேற்று கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தினார்.

இந்த ஆண்டு பிளஸ் 1 பாடத்திட்டத்தில் மாற்றம் இல்லை: பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உறுதி


வழிகாட்டி முகாமில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்களின் மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்புக்கு உதவும் வழிகாட்டி கையேட்டை பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட்டார். உடன் நிதியமைச்சர் டி.ஜெயக்குமார், பள்ளிக்கல்வித்துறை செயலர் டி.உதயச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் வி.அன்புச்செல்வன் உள்ளிட்டோர் | படம்: க.ஸ்ரீபரத்                                  

இந்த ஆண்டு பிளஸ் 1 பாடத் திட்டத்தில் மாற்றம் இல்லை என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறி உள்ளார்.

அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சங்க நிர்வாகிகள் - அமைச்சர் இடையேயான நேரடி கலந்துரையாடல் கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட ஆசிரியர் மற்றும் ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

ஓய்வூதியத்தில் திருத்தம் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஓய்வூதியத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி தலைமையில் இன்று மே-3 அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தம்பதா என்ற புதிய திட்டம் மூலம் வேளாண் துறையை நவீனமாக்க ரூ. 6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 7-வது ஊதிய குழுவின் பரிந்துரை படி ஓய்வூதியத்தில் திருத்தம் கொண்டு வரவும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளி வாகனங்கள் ஆய்வு மே 30க்குள் அறிக்கை

'பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து, வரும், 30க்குள் அறிக்கை அளிக்க வேண்டும்' என, வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. பள்ளி வாகனங்களின் பாதுகாப்பை, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உறுதி செய்த பின்னே, அந்த வாகனங்களை இயக்க அனுமதிக்கப்படுகிறது. குறைபாடுகள் உள்ள பள்ளி வாகனங்களுக்கான உரிமம் ரத்துசெய்யப்படுகிறது.

இன்ஜி., ஆன்லைன் பதிவில் குளறுபடி

அண்ணா பல்கலையின், இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கான, 'ஆன் லைன்' பதிவில், விளையாட்டு பிரிவு விதிகளுக்கான பதிவில், குழப்பம் ஏற்பட்டுள்ளது. இன்ஜி., கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கு, தமிழக அரசின் சார்பில், அண்ணா பல்கலை மூலம், ஒற்றை சாளர கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, நேற்று முன்தினம் துவங்கியது.

சி.இ.ஓ., - டி.இ.ஓ.,க்களுக்கு 'டென்ஷன் பிரீ' முகாம்

மதுரையில் அனைத்து மாவட்ட சி.இ.ஓ.,க்கள், டி.இ.ஒ.,க்களுக்கு புத்தாக்க மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் இன்று (மே 3) துவங்குகிறது.
இதுகுறித்து அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு, விடைத்தாள் திருத்தம், ஆய்வக உதவியாளர் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு என அடுத்தடுத்த பணிகளில் ஈடுபட்ட கல்வி அதிகாரிகளின் பணிச்சுமை மற்றும் மனச்சுமையை தவிர்க்கவும், கல்வியாண்டை உத்வேகத்துடன் துவங்கும் வகையிலும் இம்முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

தமிழக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், அனுபவம் மிக்க பேராசிரியர்களைக் கொண்டு இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். கல்லூரி மாணவர்களின் திறமையை வளர்ப்பதற்காக தமிழக பாரம்பரிய கலைகள் குறித்த கலாச்சார போட்டிகள் நடத்தப்படும். எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா இளைஞர்களின் திருவிழாவாக கொண்டாடப்படும் என தெரிவித்துள்ளார்.

போராட்டம் தொடரும்: மருத்துவ மாணவர்கள்

50 சதவீதம் இட ஒதுக்கீடு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என மருத்துவ மாணவர்கள் தெரிவித்தனர்.
தலைமை செயலகத்தில் அமைச்சர் விஜய பாஸ்கரை சந்தித்துபேசிய பின்னர் மாணவர்கள் சங்கத்தினர் கூறியதாவது: மருத்துவ மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு பெற்று தர அரசு முயன்று வருவதாக அமைச்சர் கூறியுள்ளார். அதே நேரத்தில் மக்களுக்கான மருத்துவ சேவைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன என மருத்து கல்லூரி மாணவர்கள் கூறினர்.
-தினமலர் 03-05-2017

பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு செய்ய ஏற்பாடு - பள்ளிக்கல்வி இயக்கம்| DIGITAL TAMILNADU


Tuesday, 2 May 2017

மாணவர்களின் அடிப்படை விவரங்கள் கொண்ட ஸ்மார்ட் கார்ட் விரைவில் அறிமுகம்


தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்:பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்


கல்வித்துறையில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகமே முன்னோடி-மாண்புமிகு அமைச்சர் செங்கோட்டையன்


ஏற்கெனவே பணிபுரிந்து வரும் ஆசிரியர்களை தகுதித் தேர்வில் ஒரே வாய்ப்பில் தேர்ச்சி பெற நிர்ப்பந்திக்க கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏற்கெனவே பணிபுரிந்து வரும் ஆசிரியர்களை ஒரே வாய்ப்பில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என தமிழக அரசு நிர்ப்பந்திக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் ஆர்.சத்தியமூர்த்தி, ஏ.ரமேஷ், வெங் கடடேஷ்வரன், புவனேஸ்வரி, மணிமாலா, பத்மா உள்ளிட்ட பலர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here