Tuesday, 25 December 2018
Monday, 17 December 2018
Sunday, 16 December 2018
அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்பு: பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
திருப்பூரில் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி: வரும் ஜனவரி மாதம் இறுதிக்குள் அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் மடிக்கணினி மற்றும் மிதிவண்டி வழங்கப்படும்.
மத்திய அரசுடன் இணைந்து தமிழகத்தில் உள்ள 671 பள்ளிகளில் தலா ரூ.20 லட்சம் மதிப்பில் அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படவுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசியர்கள் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் ஆங்கிலத்திறனை வளர்க்கும் வகையில் விரைவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
மத்திய அரசுடன் இணைந்து தமிழகத்தில் உள்ள 671 பள்ளிகளில் தலா ரூ.20 லட்சம் மதிப்பில் அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படவுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசியர்கள் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் ஆங்கிலத்திறனை வளர்க்கும் வகையில் விரைவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
அரசுப்பள்ளிகளில் 3,000 அலுவலக உதவியாளர், இரவு காவலர் பணியிடம் காலி:தொடரும் 10 ஆண்டு அவல நிலைக்கு முற்றுப்புள்ளி எப்போது?
தமிழகத்தின் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேல் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் மாநகராட்சி நகராட்சி, அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 7,728 பள்ளிகள் உள்ளன. 6 ஆயிரம் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில், உயர்நிலைப் பள்ளிகளில் 17 லட்சத்து 19 ஆயிரத்து 322 மாணவர்களும், மேல்நிலைப் பள்ளிகளில் 68 லட்சத்து 12 ஆயிரத்து 953 மாணவர்களும், நடுநிலைப் பள்ளிகளில் 8 லட்சத்து 95 ஆயிரத்து 29 மாணவர்களும், ஆரம்ப பள்ளிகளில் 29 லட்சத்து 10ஆயிரத்து 351 மாணவர்கள் தொடக்கப்பள்ளி, அரசு நிதி உதவிப்பள்ளி, தனியார் பள்ளிகள் என மொத்தம் 1 கோடியே 31 லட்சத்து 85 ஆயிரத்து 526 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
Thursday, 13 December 2018
Tuesday, 4 December 2018
வெளியூர், வெளி மாநிலங்களில் மையம் இருப்பதால் நீட் தேர்வுக்கு ஆர்வம் காட்டாத அரசு பள்ளி மாணவர்கள்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், அரிமளம் பகுதியில் 11 அரசு, 4 அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் 12ம் வகுப்பில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் 12ம் வகுப்பு முடித்த பின்னர் மருத்துவம் படிக்க மத்திய அரசு நடத்தும் நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும். கடந்தாண்டு நீட் தேர்வு எழுத சென்ற கிராமப்புற மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டனர். இதன் விளைவாக தற்போது நீட் தேர்வு பற்றிய ஆர்வம் மாணவர்களிடம் மட்டுமல்ல பெற்றோர்களிடமும் குறைந்து விட்டது.
இதனால் மாணவர்கள் எப்படியும் 12ம் வகுப்பு முடித்த பின்னர் பொறியியல், கலை, அறிவியல் கல்லூரியில் சேர போகிறோம் இந்த படிப்புகளில் ஏராளமான காலியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ஏன் உடலை வருத்தி படிக்க வேண்டும் என்ற மன நிலைக்கு வந்துள்ளதாகவும், மேலும் நீட் தேர்வு எதிர்கொள்ள நகரத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும் என அரசு பள்ளி மாணவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையை போக்க அரசு பாடத்திட்டத்தில் பல்வேறு மாறுதல்களை கொண்டு வந்தாலும் அது ஆசிரியர், மாணவர்களிடம் எடுபடவில்லை என்று தான் கூற வேண்டும்.
இதனால் மாணவர்கள் எப்படியும் 12ம் வகுப்பு முடித்த பின்னர் பொறியியல், கலை, அறிவியல் கல்லூரியில் சேர போகிறோம் இந்த படிப்புகளில் ஏராளமான காலியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ஏன் உடலை வருத்தி படிக்க வேண்டும் என்ற மன நிலைக்கு வந்துள்ளதாகவும், மேலும் நீட் தேர்வு எதிர்கொள்ள நகரத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும் என அரசு பள்ளி மாணவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையை போக்க அரசு பாடத்திட்டத்தில் பல்வேறு மாறுதல்களை கொண்டு வந்தாலும் அது ஆசிரியர், மாணவர்களிடம் எடுபடவில்லை என்று தான் கூற வேண்டும்.
'வாட்ஸ் ஆப்' வதந்தியை தடுக்க விளம்பர படங்களில் விழிப்புணர்வு
சமூக வலைதளமான, 'வாட்ஸ் ஆப்'பில் பரவிய வதந்திகளால், 25க்கும் மேற்பட்டோர், கும்பல் தாக்குலில் கொல்லப்பட்டனர். இந்த விவகாரத்தில், உரிய நடவடிக்கையை எடுக்கும்படி, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
Tuesday, 27 November 2018
Friday, 23 November 2018
Monday, 19 November 2018
பிஞ்சுகளின் புயல் நிவாரணம்: உண்டியல் சேமிப்பை கஜா புயல் பாதிப்புக்கு அரிசி மூட்டைகளாக அனுப்பிய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்
தேவகோட்டை-
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும்
ஆசிரியர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண
உதவியாக அரசி மூட்டைகளை அனுப்பினார்கள்.
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்
நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு கஜா புயலால் பாதிப்பு ஏற்பட்டுள்ள
செய்தியை பள்ளி காலை வழிபாட்டு கூட்டத்தில் தலைமை ஆசிரியர் லெ
.சொக்கலிங்கம் விளக்கமாக கூறினார்.இதனை கேட்ட மாணவர்கள் தாங்கள்
தினம்தோறும் பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உண்டியலில்
"சமுதாயத்திற்கு உதவவும் வகையில் பயன்படுத்தி கொள்வதற்காக இந்த காசை
போடுகிறோம் "என்று கூறி போடும் காசை மொத்தமாக சேர்த்து கஜா புயல்
பாதிப்புக்கு கொடுப்பது என முடிவெடுத்தனர்.
Friday, 16 November 2018
காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் கேசவன் அறிவித்துள்ளார். கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பையடுத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் நாளை வழக்கம் போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கஜா புயல் பாதிப்புகள் குறைப்பு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
கஜா புயலை எப்படி எதிர்கொள்வது என ஏற்கனவே திட்டமிட்டு அரசு செயலாற்றியதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வானிலை மையத்தின் அறிவுறுத்தலின் படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக கூறினார்.
புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் குழு ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிப்பார்கள் என்றார். கடலோர மாவட்டங்களில் நிவாரண பணிகளை பார்வையிட அமைச்சர்கள் செல்ல உள்ளதாக கூறினார். புயல் பாதிப்பினால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றார். படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றார்.
புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் குழு ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிப்பார்கள் என்றார். கடலோர மாவட்டங்களில் நிவாரண பணிகளை பார்வையிட அமைச்சர்கள் செல்ல உள்ளதாக கூறினார். புயல் பாதிப்பினால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றார். படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றார்.
ரத்தான ரயில்கள் மீண்டும் நாளை வழக்கம் போல் இயங்கும்: தெற்கு ரயில்வே
கஜா புயலால் ரத்து செய்யப்பட்டிருந்த ரயில்கள் நாளை காலை முதல் வழக்கம் போல் இயங்கும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் குல் ஷேஸ்தா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறி யிருப்பதாவது: கஜா புயல் காரணமாக 9 விரைவு ரயில்கள் மற்றும் 14 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. திருச்சி, மதுரை ரயில்வே கோட்டங்கள் கஜா புயலால் அதிகளவில் பாதிப்பை சந்தித்துள்ளன. புயல் காரணமாக தண்டவாளங்களில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. புயல் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த ரயில்கள் வழக்கம் போல் நாளை காலை முதல் இயங்கும் என கூறினார்.
திருவாரூர், தேனி பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
கஜா புயல் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (நவ.17) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் வெளியிட்டுள்ளார்.
கஜா புயல் காரணமாக, தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை(நவ.17) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கஜா புயல் காரணமாக, தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை(நவ.17) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Thursday, 15 November 2018
ஆசாரிப்பள்ளம்: Agni's Ignite India Innovation Conference 2018 துவக்க விழா
ஆசாரிப்பள்ளம் Belfield Matriculation Higher Secondary School-ல் நடைபெற்ற Agni's Ignite India Innovation Conference 2018 துவக்க விழா நிகழ்வில் பத்மநாபபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டார்.இளம் மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான கண்காட்சி மற்றும் போட்டி நிகழ்வினை துவக்கி வைத்து அவர்களது படைப்புகள் குறித்து சிறிது நேரம் மாணவர்களுடன் உரையாடினார்.மாணவர்கள் தங்களது வித்தியாசமான படைப்புகள் குறித்து உற்சாகமாக விளக்கிக் கூறினார்கள்.
தாளவாடி: பள்ளி மாணவர்களிடையே மோதலில் ஒருவருக்கு கத்திக்குத்து
புயல், மழை, வெள்ளம், பேரிடர் நேரங்களில் உதவும் ‘TN SMART’APP : தேசியப் பேரிடர் மேலாண்மையின் கீழ் வழிகாட்டும் மொபைல் ஆப்
புயல், மழை, வெள்ளம் போன்றவற்றின் நிலை, வானிலை உள்ளிட்ட பல்வேறு தகவல்களைப் பொதுமக்கள் அறியும் வண்ணம் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கீழ் டிஎன் ஸ்மார்ட் எனும் செயலி உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.
அரசின் தொலைநோக்குத் திட்டம் தயாரிக்கப்பட்டு, அதன்படி வரும் வடகிழக்குப் பருவமழையின் போதே அபாயக் குறைப்புக்கான நடவடிக்கைகளை எடுக்கும் பணியை வருவாய்த் துறை தொடங்கியுள்ளது. அதே நேரம் பொதுமக்கள், சமூக எண்ணம் கொண்ட செயற்பாட்டாளர்கள், மாணவர்கள், பேரிடர் மேலாண்மை குறித்த ஆர்வம் உள்ளவர்கள் பேரிடர் காலத்தில் உரிய தகவலைப் பெறும் வண்ணம் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
அரசின் தொலைநோக்குத் திட்டம் தயாரிக்கப்பட்டு, அதன்படி வரும் வடகிழக்குப் பருவமழையின் போதே அபாயக் குறைப்புக்கான நடவடிக்கைகளை எடுக்கும் பணியை வருவாய்த் துறை தொடங்கியுள்ளது. அதே நேரம் பொதுமக்கள், சமூக எண்ணம் கொண்ட செயற்பாட்டாளர்கள், மாணவர்கள், பேரிடர் மேலாண்மை குறித்த ஆர்வம் உள்ளவர்கள் பேரிடர் காலத்தில் உரிய தகவலைப் பெறும் வண்ணம் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
கஜா புயல்: தற்போதைய தகவல்கள்
பேருந்து போக்குவரத்து - தவிர்க்க அறிவுறுத்தல்
* கஜா புயல் கரையை கடக்கும் நேரத்தில் பொதுமக்கள் பயணத்தை தவிர்க்க வேண்டும்.
அரசு, தனியார் பேருந்துகளின் இயக்கத்தை தவிர்க்க அறிவுறுத்தல்
கஜா புயலால் 7 மாவட்டங்களில் இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பேருந்து சேவையை நிறுத்துவது பற்றி ஆலோசனை
*சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நாளை (16-11-2018) வெள்ளிக்கிழமையன்று நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் கஜா புயல் காரணமாக ஒத்திவைப்பு.
மறு தேர்வுத்தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் க.ஆறுமுகம்(பொ) அறிவிப்பு.
Tuesday, 13 November 2018
Sunday, 11 November 2018
பெற்றோர்களே எச்சரிக்கையாக வண்டி ஓட்டுங்கள்; 'குட்டி போலீஸ்' உங்களைக் கண்காணிக்கிறது
'இத்தனை நாட்களாக ப்ரோக்ரஸ் கார்டைப் பார்த்து மாணவர்கள்தான் பயப்பட்டார்கள். இனி பெற்றோர் பயப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது'
அரசுப் பள்ளி மாணவர்கள் தங்களுடைய பெற்றோர் எப்படி வண்டி ஓட்டுகிறார் என்பதைக் கவனித்து சான்றிதழ் அளிக்கின்றனர். அவை மாதக் கடைசியில் மாவட்ட ஆட்சியரிடம் அனுப்பப்படும். நல்ல மதிப்பெண்கள் வாங்கிய பெற்றோருக்குப் பரிசுகளும், குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்படும்.
அரசுப் பள்ளி மாணவர்கள் தங்களுடைய பெற்றோர் எப்படி வண்டி ஓட்டுகிறார் என்பதைக் கவனித்து சான்றிதழ் அளிக்கின்றனர். அவை மாதக் கடைசியில் மாவட்ட ஆட்சியரிடம் அனுப்பப்படும். நல்ல மதிப்பெண்கள் வாங்கிய பெற்றோருக்குப் பரிசுகளும், குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்படும்.
Saturday, 10 November 2018
நாளை குரூப் 2 தேர்வு எழுதுபவர்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை எவை?- டிஎன்பிஎஸ்சி விளக்கம்
தமிழகம் முழுவதும் நாளை குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. லட்சக்கணக்கானோர் எழுதும் இந்தத் தேர்வில் எதைச் செய்யலாம், எதை செய்யக்கூடாது என்ற வழிகாட்டுதல்கள் தேர்வாணையத்தால் அளிக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் சார் பதிவாளர், வருவாய்த் துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட 1199 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கு குரூப் 2 தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிக்கையை டின்பிஎஸ்சி வெளியிட்டது.
தமிழகம் முழுவதும் சார் பதிவாளர், வருவாய்த் துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட 1199 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கு குரூப் 2 தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிக்கையை டின்பிஎஸ்சி வெளியிட்டது.
Friday, 9 November 2018
வேலூர் மாவட்ட அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 2017-18ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12 ம் வகுப்புகளில் 100 சதவீதம் தேர்ச்சி அளித்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு விழா மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் 11.11.2018 காலை 10.30 மணியளவில் வி.ஐ.டி. நிகர்நிலை பல்கலைகழக அரங்கத்தில் நடைபெறுகிறது
வேலூர் மாவட்ட அரசு/ அரசு நிதியுதவி உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 2017-18ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி அளித்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு விழா மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் 11.11.2018 காலை 10.30 மணியளவில் வி.ஐ.டி. நிகர்நிலை பல்கலைகழகத்தில் உள்ள டாக்டர் எம்.சென்னாரெட்டி அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
அனைத்து வேலூர் மாவட்ட அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அனைத்து வேலூர் மாவட்ட அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு பெற்ற மாணவர்கள்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேவகோட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாமில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கு பெற்று கை கழுவும் முறையை பொதுமக்களுக்கு விளக்கினார்கள்.மாணவர்களின் விழிப்புணர்வு பேச்சு சிறப்பாக இருந்ததாக மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.
Tuesday, 6 November 2018
01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியர்களாக பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியீடு
01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியர்களாக பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியீடு - இணை இயக்குநர் மேல்நிலைக்கல்வி முகப்புக் கடிதம் காண மற்றும் தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக...
CHMISTRY BOTANY ZOO - Click Here to Download
COM,ECO SM &_ CM, GEO SM &CM - Click Here to Download
Maths and Physics - Click Here to Download
TAMIL, ENG SM & CM - Click Here to Download
CHMISTRY BOTANY ZOO - Click Here to Download
COM,ECO SM &_ CM, GEO SM &CM - Click Here to Download
Maths and Physics - Click Here to Download
TAMIL, ENG SM & CM - Click Here to Download
Thursday, 1 November 2018
Wednesday, 31 October 2018
கோ. இராமநாதபுரம் அ.மே.நி.பள்ளி மாணவர்கள் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற மண்டல போட்டிகளில் பங்கேற்று இரண்டு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் என நான்கு பரிசுகளை வென்றனர்
கோ. இராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற மண்டல போட்டிகளில் பங்கேற்று இரண்டு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் என நான்கு பரிசுகளை வென்று சாதனை படைத்தனர்.
மாணவி அனிதா 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார். மாணவி பிரமிளா பத்து கிலோமீட்டர் ரோடு சைக்கிளிங் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். மாணவிகள் சவுந்தர்யா, கனிமொழி ஆகியோர் பத்து கிலோமீட்டர் ரோடு சைக்கிளிங் போட்டியில் தங்கம் வென்றார்கள்.
மாணவி அனிதா 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார். மாணவி பிரமிளா பத்து கிலோமீட்டர் ரோடு சைக்கிளிங் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். மாணவிகள் சவுந்தர்யா, கனிமொழி ஆகியோர் பத்து கிலோமீட்டர் ரோடு சைக்கிளிங் போட்டியில் தங்கம் வென்றார்கள்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பூத்தாம்பட்டியில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் நடைபெற்றது
ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி அருகேயுள்ள வெங்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு விருது
ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி அருகேயுள்ள வெங்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியரின் சமூக சேவைகளைப் பாராட்டி விடியல் ஐகான்ஸ் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.இந்த விருது பெற்ற தலைமையாசிரியர் திருமதி சு.வாசுகி அவர்களை பள்ளி ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
Subscribe to:
Posts (Atom)
1282 BT Assistant Post continuation order
1282 BT Assistant Six Month Post continuation order - click here
-
Set lanuage - 9th std - Click Here to Download 9&10 Maths set Relation & Funcions -1 9&10 Maths set Relation & Funcions -2 ...
-
1282 BT Assistant Six Month Post continuation order - click here