Sunday, 30 September 2018
விளையாட்டு முறையில் ஆங்கில இலக்கணம் கற்பிக்கும் முறையை புகுத்திய அரசு பள்ளி ஆசிரியருக்கு கற்பித்தலுக்கான தேசிய விருது
விளையாட்டு முறையில் ஆங்கில இலக்கணம் கற்பிக்கும் முறையை புகுத்திய சத்தியமங்கலம் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியருக்கு தேசிய அளவிலான விருது வழங்கி உள்ளனர்.
மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் சார்பில் ஆண்டு தோறும் கற்பிக்கும் முறையில் புதுமையை புகுத்தி மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள், பேராசிரியர்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகின்றனர்.இந்த ஆண்டுக்கு தேசிய அளவில் நடந்த தேர்வில் நாடு முழுவதும் இருந்து பேராசிரியர்கள், ஆசிரியர்கள் என 240 பேர் தங்களின் கற்பிக்கும் முறையை சமர்ப்பித்தனர்.
மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் சார்பில் ஆண்டு தோறும் கற்பிக்கும் முறையில் புதுமையை புகுத்தி மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள், பேராசிரியர்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகின்றனர்.இந்த ஆண்டுக்கு தேசிய அளவில் நடந்த தேர்வில் நாடு முழுவதும் இருந்து பேராசிரியர்கள், ஆசிரியர்கள் என 240 பேர் தங்களின் கற்பிக்கும் முறையை சமர்ப்பித்தனர்.
2022-க்குள் கல்வித்துறையில் ஒருலட்சம் கோடி முதலீடு! - பிரதமர் மோடி
அடுத்த நான்காண்டில் கல்வித்துறையில் ஒருலட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என பாரத பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், இதனை தெரிவித்தார்.
டெல்லியில் விஞ்ஞான் பவனில் கல்வி மாநாடு நடைபெற்றது. இதில் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த துணை வேந்தர்கள் மற்றும் இயக்குநர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டை பிரதமர் மோடி, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், ``நாடு முழுவதும் கல்விக்கான உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு அதிக அளவில் முதலீடு செய்து வருகிறது.
Saturday, 29 September 2018
சூலூர்: அடடே... சொல்ல வைக்கும் அரசு பள்ளி! தனியாருக்கு நிகராக தரம் உயர்ந்த அதிசயம்
ஆசிரியர்களும் ஊர்மக்களும் தொழிலதிபர்களும் இணைந்து, அரசு பள்ளியை தரம் உயர்த்தி அதிசயம் நிகழ்த்தியுள்ளனர். 80 மாணவர்கள் கூடுதலாக சேர்ந்து, எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.கோவை மாவட்டம், சூலுார் தாலுகாவில் உள்ளது வடுகன்காளிபாளையம்.
இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ஓட்டுக்கூரையில், 1909ல் தொடக்கப் பள்ளியாகத் தொடங்கிய இந்தப் பள்ளி.முழுக்க கிராமப்பகுதியில், அதுவும் கோவை - திருப்பூர் மாவட்ட எல்லையில் உள்ள இந்தப்பள்ளிக்கு, அரசு அதிகாரிகளின் கடைக்கண் பார்வை கிடைப்பது அரிதாகவுள்ளது. ஆனால், கடந்த 2013 முதல் இந்தப்பள்ளிக்கு வசந்த காலம் துங்கியது.ஊரின் முக்கியஸ்தர்கள், பள்ளியின் கிராமக்கல்விக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் சில தனியார் நிறுவனங்களின் முன்முயற்சி இப்பள்ளிக்கு கிடைத்தது.
இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ஓட்டுக்கூரையில், 1909ல் தொடக்கப் பள்ளியாகத் தொடங்கிய இந்தப் பள்ளி.முழுக்க கிராமப்பகுதியில், அதுவும் கோவை - திருப்பூர் மாவட்ட எல்லையில் உள்ள இந்தப்பள்ளிக்கு, அரசு அதிகாரிகளின் கடைக்கண் பார்வை கிடைப்பது அரிதாகவுள்ளது. ஆனால், கடந்த 2013 முதல் இந்தப்பள்ளிக்கு வசந்த காலம் துங்கியது.ஊரின் முக்கியஸ்தர்கள், பள்ளியின் கிராமக்கல்விக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் சில தனியார் நிறுவனங்களின் முன்முயற்சி இப்பள்ளிக்கு கிடைத்தது.
'மாணவர்களை மதிப்பெண்ணால் ஒப்பிடக்கூடாது' :பள்ளிக்கல்வி இணை இயக்குனர் பொன்னையா
கல்வியாளர் சங்கமம் சார்பில், 'கல்வி சமுதாயத்துக்கானது' என்ற தலைப்பில், ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தது.
பள்ளிக்கல்வி இணை இயக்குனர் பொன்னையா பேசுகையில், ''கற்பிப்பவர்கள் எல்லாம் ஆசிரியர்களாகி விட மாட்டார்கள். யாரிடம் இருந்து மாணவன் கற்கிறானோ, அவரே ஆசிரியர். வெறும் மதிப்பெண்களை கொண்டு, மாணவர்களை தரம் பிரிப்பதோ, ஒப்பிடுவதோ சரியான அளவுகோல் அல்ல. வாழ்க்கை கல்வியை கற்றுக்கொடுக்க வேண்டிய இடம் பள்ளிக்கூடம். இதற்கு, தினமும் பலதரப்பட்ட தகவல்களை அளிப்பவராக ஆசிரியர்கள் மாற வேண்டும்,'' என்றார்.ஒருங்கிணைப்பாளர் சதிஷ்குமார், பாரதிதாசன் பல்கலை பேராசிரியை முருகேஷ்வரி, கல்லுாரி முதல்வர் பொன்னுசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பள்ளிக்கல்வி இணை இயக்குனர் பொன்னையா பேசுகையில், ''கற்பிப்பவர்கள் எல்லாம் ஆசிரியர்களாகி விட மாட்டார்கள். யாரிடம் இருந்து மாணவன் கற்கிறானோ, அவரே ஆசிரியர். வெறும் மதிப்பெண்களை கொண்டு, மாணவர்களை தரம் பிரிப்பதோ, ஒப்பிடுவதோ சரியான அளவுகோல் அல்ல. வாழ்க்கை கல்வியை கற்றுக்கொடுக்க வேண்டிய இடம் பள்ளிக்கூடம். இதற்கு, தினமும் பலதரப்பட்ட தகவல்களை அளிப்பவராக ஆசிரியர்கள் மாற வேண்டும்,'' என்றார்.ஒருங்கிணைப்பாளர் சதிஷ்குமார், பாரதிதாசன் பல்கலை பேராசிரியை முருகேஷ்வரி, கல்லுாரி முதல்வர் பொன்னுசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Source:Dinamalar
Friday, 28 September 2018
அவலூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி கல்வி மாவட்டம், அவலூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமிகு.முனுசாமி அவர்கள் ஆணைப்படி, நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் 24.09.2018 முதல் 30.09.2018 வரை கடப்பனந்தல் கிராமத்தில் நடைபெற உள்ளது. திட்ட தொடக்க விழா பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.P.M.ரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வுரை நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் தாழை.மு.தேவராசன் (முதுகலை விலங்கியல் ஆசிரியர்) வழங்கினார். நாட்டு நலப் பணித் திட்ட உதவி அலுவலர் திரு.மாரி(முதுகலை தமிழ் ஆசிரியர்) நன்றி நவிழ தொடக்க நாள் விழா சிறப்புடன் நிறைவுற்றது.
வறுமையில் வாடிய குடும்பத்திற்கு உதவிய மனிதநேயமிக்க மாவட்ட ஆட்சியர் கந்தசாமி
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஊராட்சி ஒன்றியம், கனிகிலுப்பை கிராமத்தை சேர்ந்த தாய், அனிதா தந்தை வெங்கடேசன் ஆகியோரை இழந்து மிகவும் ஏழ்மையான நிலையில் தனது தங்கை மற்றும் தம்பியுடன் வாழ்ந்து வரும் ஆனந்தி என்பவருக்கு கருணை அடிப்படையில் கனிகிலுப்பை அரசு நடுநிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கே.எஸ்..கந்தசாமி அவரது வீட்டிற்கு நேரடியாக சென்று வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆனந்தி மற்றும் அவரது தங்கை, தம்பியுடன் சேர்ந்து அவரது வீட்டில் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, புதிய மிதிவண்டி மற்றும் பழங்கள் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் ஆனந்தி மற்றும் அவரது சகோதர,சகோதரிக்கு திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் பிரசாதம் வழங்கினார். மேலும், மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆனந்தி மற்றும் குடும்பத்தினர் தற்போது வசித்து வரும் வீடு மிகவும் பழுதடைந்து உள்ளதால், பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டு கட்டுமானப் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆனந்தி மற்றும் அவரது தங்கை, தம்பியுடன் சேர்ந்து அவரது வீட்டில் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, புதிய மிதிவண்டி மற்றும் பழங்கள் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் ஆனந்தி மற்றும் அவரது சகோதர,சகோதரிக்கு திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் பிரசாதம் வழங்கினார். மேலும், மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆனந்தி மற்றும் குடும்பத்தினர் தற்போது வசித்து வரும் வீடு மிகவும் பழுதடைந்து உள்ளதால், பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டு கட்டுமானப் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டது.
ரோட்டரி சங்கத்தின் சார்பாக நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு ஒரு நாள் அவர்களது உணவிற்காக பொருட்கள் வழங்கப்பட்டது
சேத்துப்பட்டு எலைட் ரோட்டரி சங்கத்தின் சார்பாக NSS முகாமின் 6 வது நாளில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு ஒரு நாள் அவர்களது உணவிற்காக பொருட்கள் வழங்கப்பட்டது.உடன் சங்கத்தின் மேனாள் தலைவர் Rtn.A. விஜயகுமார்,தலைவர் Rtn.பெ.தங்கமணி
மற்றும் முகாம் திட்ட அலுவலர்கள் ஜோசப் பிரடரிக் மற்றும் செல்வகுமார் ஆகியோரோடு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
மற்றும் முகாம் திட்ட அலுவலர்கள் ஜோசப் பிரடரிக் மற்றும் செல்வகுமார் ஆகியோரோடு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
மாணவர்களைப் பார்த்து பொறாமைப்படாத ஒரே ஜீவன் ஆசிரியர்களே! - தினமலர் சிறப்பு கட்டுரை
'கார்த்திக் பத்திரிக்கை அனுப்பியிருக்கிறான்; புதுச்சேரியில திருமணம். அவுங்க அம்மா கையை பிடிச்சபடி, பள்ளியில் சேர வந்த முகம்தான் நினைவுக்கு வருது. பிஎச்.டி., படித்துக் கொண்டிருப்பதாக, போனில் சொன்னான்,'' என, முகம் முழுக்க பரவசம் பரவ, சக ஆசிரியர்களிடம் பேசிக் கொண்டிருந்தார், சிறப்பு ஆசிரியர் அன்புசெல்வம்.நினைவுகளின் நீட்சியில் இருந்து மீளாதவருடன், சிறிய அறிமுகத்துக்கு பின், 'சிறப்பு ஆசிரியர் பணி சற்று சிரமமானது தானே' என்றதும், ஏறிட்டு பார்த்து, நம்மிடம் பேச ஆரம்பித்தார்.
கடந்த, 1990ல், பணியில் சேர்ந்தேன்; 28 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. சாதாரண குழந்தைகளின் உலகத்தில் இருந்து வேறுபட்டவர்கள் சிறப்பு குழந்தைகள். குறைபாடுகளுக்கு ஏற்ப, அவர்களது எண்ணம், சூழல், மனஓட்டம் என, அனைத்திலும் வேறுபாடு இருக்கும். கடவுள் உங்கள் முன் தோன்றி, கண், காது இரண்டில் எது இல்லாமல், இருக்கவே முடியாது என்று கேட்டால், பதிலென்ன கூறுவீர்கள் என்றார்.
கடந்த, 1990ல், பணியில் சேர்ந்தேன்; 28 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. சாதாரண குழந்தைகளின் உலகத்தில் இருந்து வேறுபட்டவர்கள் சிறப்பு குழந்தைகள். குறைபாடுகளுக்கு ஏற்ப, அவர்களது எண்ணம், சூழல், மனஓட்டம் என, அனைத்திலும் வேறுபாடு இருக்கும். கடவுள் உங்கள் முன் தோன்றி, கண், காது இரண்டில் எது இல்லாமல், இருக்கவே முடியாது என்று கேட்டால், பதிலென்ன கூறுவீர்கள் என்றார்.
பந்தலூர்:நாயக்கன்சோலை அரசுப்பள்ளியை மேம்படுத்த வேண்டும்
பந்தலுார் அருகே, சேரம்பாடி நாயக்கன்சோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மூடும் நிலையில் உள்ளது.சேரம்பாடி அருகேயுள்ள நாயக்கன்சோலை கிராம மக்கள் பயன்பெறும் வகையில், கடந்த, 1998 ஜூன் 6ல் அரசு நடுநிலைப்பள்ளி திறக்கப்பட்டது, வாகன வசதிகள் இல்லாத இந்த பகுதியில் பள்ளி வந்ததால், மாணவர்கள் பயன்பெற்றனர். ஆரம்பத்தில் இங்கு, 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்துள்ளனர்.தொடர்ந்து, இங்கு போதிய ஆசிரியர்கள் நியமிக்காததால், மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தது. தற்போது, இந்த பள்ளிக்கு பெரியசோலை பள்ளியின் தலைமை ஆசிரியர் மாற்றுப்பணியில் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வாரத்தில் சில நாட்கள் மட்டுமே வரும் நிலையில், 17 மாணவர்கள், 18 மாணவியர் என 35 மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
Subscribe to:
Posts (Atom)
1282 BT Assistant Post continuation order
1282 BT Assistant Six Month Post continuation order - click here
-
Set lanuage - 9th std - Click Here to Download 9&10 Maths set Relation & Funcions -1 9&10 Maths set Relation & Funcions -2 ...
-
1282 BT Assistant Six Month Post continuation order - click here