Thursday, 28 February 2019

2019 ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பு வெளியீடு

2019 ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு

தமிழக அரசால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு வரும் மார்ச்.15-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 மற்றும் 2 ஆகியவற்றினை எழுதுவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்விச் சட்டம் 2009 மற்றும் தேசிய ஆசிரியர் கவுன்சில் ஆகியவை தகுதிகளை வரையறுத்துள்ளது. அதன்படி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

27 உண்டு உறைவிட பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட நிதியை கொடுக்க லஞ்சம் கேட்டதாக புகார்: நீலகிரி மாவட்ட பழங்குடியின நலத்துறை அலுவலகத்தில் ரெய்டு

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 27 உண்டு உறைவிட பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட நிதியை கொடுக்க, லஞ்சம் கேட்பதாக, பழங்குடியினர் நலத்துறை அலுவலக அதிகாரிகள் மீது புகார் கூறப்பட்டது. இதனையடுத்து அந்த அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத ரூ.6,35,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து மணிவேலன் என்ற அதிகாரியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-தினமலர்

Proceedings for NIOS for D.El.Ed. Exams

GOVT EXAM FORMS 1 TO 6 AND 8

டிஸ்லெக்சியா பாதிப்பு உள்ள தேர்வர்கள் இடைநிலை/மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள், மார்ச் 2019 விடைத்தாளில் சிவப்பு மையில் குறிப்பு எழுதுதல் குறித்த அறிவுரை

Tuesday, 26 February 2019

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மைச் செயலாளர் திருமதி த.சபிதா, இ.ஆ.ப., அவர்கள் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவியுயர்வு

மாண்புமிகு தமிநாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று முகாம் அலுவலகத்தில்,கூடுதல் தலைமைச் செயலாளர்களாக பதவியுயர்வு பெற்ற டாக்டர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., டாக்டர் அதுல்ய மிஸ்ரா,இ.ஆ.ப., திருமதி த.சபிதா, இ.ஆ.ப., ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


Friday, 22 February 2019

2019 Public Examination - DGE Instructions Book let (Custodian, Chief, Deptl, Route, Hall supervisors,& Flying squad )

X Private Hall Ticket Download Instructions

HSC +2 - HALL TICKET - DOWNLOADING GENERAL - INSTRUCTION

HSE II year March 2019 - Language Sufficiency - Deatils

Sunday, 17 February 2019

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் போக்குவரத்துதுறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.பத்திரப்பதிவுத்துறை ஐ.ஐ., குமரகுருபரன் பேரிடர் மேலாண்மை, மற்றும் வருவாய் நிர்வாக ஆணையராக மாற்றம் செய்யப்பட்டார். வணிகவரித்துறை முதன்மை செயலாளர் பாலசந்திரன் பத்திரப்பதிவுத்துறை கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நகராட்சி நிர்வாக ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு கல்விசீர் வழங்கிய நன்கொடையாளர்களுக்கு பாராட்டு விழா

புன்செய் புளியம்பட்டி அடுத்துள்ள வகுத்துக்கவுண்டன்புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு கல்விசீர் வழங்கிய நன்கொடையாளர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆனந்தலட்சுமி தலைமை தாங்கினார். இடைநிலை ஆசிரியர் அருள்முருகன் வரவேற்றார். வட்டார வளமைய பயிற்றுனர் நிர்மலாதேவி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சின்னசாமி, ஊர்கவுண்டர் சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் வீரமரணம் அடைந்த துணை ராணுவ வீரர்களுக்கு குமரி மாவட்ட காவல் துறை சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பங்கேற்று அங்கு வைக்கப்பட்டு இருந்த துணை ராணுவ வீரர்களின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து போலீஸ் அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினர்.

01.01.2019 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு / பணிமாறுதல் மூலம் நியமனம் செய்யத் தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல் பொருட்டு விவரங்கள் கோரிய பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்

Friday, 15 February 2019

அரசு பள்ளியில் துவங்கிய மழலையர் வகுப்பு ஆரம்பத்திலேயே அதிருப்தி! ஆசிரியர்கள் இல்லாததால் பெற்றோர் கடுப்பு

அன்னுார் வட்டாரத்தில், அரசு பள்ளிகளில், மழலையர் வகுப்புகள் துவக்கப்பட்டு, 25 நாட்களாகியும் எந்த பணியும் நடக்கவில்லை. இதனால், பெற்றோர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.அரசு பள்ளிகளில், ஆண்டுக்கு ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
அன்னுார் வட்டாரத்தில், மூன்று துவக்கப் பள்ளிகளில், ஒற்றை இலக்கத்தில் தான் மாணவர்கள் உள்ளனர். 25 பள்ளிகளில், 25 மாணவர்களுக்கு குறைவாக உள்ளனர். பல நடுநிலைப் பள்ளிகளில், ஒன்று முதல் 8ம் வகுப்புகள் வரை, மொத்தமாக, 100 மாணவர்களுக்கு குறைவாகவே உள்ளனர்.

RTI: கோவையில் இரண்டாம் நாளாக தகவல் ஆணையர் விசாரணை

கோவையில் இரண்டாம் நாளாக நேற்றும், தகவல் ஆணையம் சார்பில் விசாரணை நடந்தது.தகவல் கோரி வரும் மனுக்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்காமல் தாமதம் செய்தாலோ, தவறான தகவல்களை அளித்தாலோ, மாநில தகவல் ஆணையத்தில் மேல் முறையீடு செய்யலாம்.
அவ்வாறு மேல் முறையீடு செய்யப்பட்ட மனுக்களின் மீது, கோவையில் நேற்று முன்தினம், தகவல் ஆணையர் முருகன் விசாரணை நடத்தினார்.இரண்டாம் நாளாக நேற்றும் விசாரணை நடந்தது.

விவசாய குடும்பத்தைச் சார்ந்த மாணவர்களும் தெரிந்துகொள்ளலாம் 'கிஷான் நிதி' திட்டத்தில் ஊக்கத்தொகை 6 ஆயிரம் ரூபாய் பெற வி.ஏ.ஓ., அலுவலகத்தில் விண்ணப்பிப்பது எப்படி என்று

மத்திய அரசின், 6 ஆயிரம் ரூபாய் திட்டத்தில் பயன்பெற, சிறு, குறு விவசாயிகள், கிராம நிர்வாக அலுவலகத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய இடைக்கால பட்ஜெட்டில், சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில், ஆண்டுக்கு, 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. மூன்று தவணையாக, தலா, 2 ஆயிரம் வீதம், விவசாயி வங்கி கணக்கில் வழங்கப்பட உள்ளது.

பள்ளி மாணவர்களின் நிலை பார்த்து நெஞ்சு பதறுது:பஸ் ஓட்டுனர்கள் திருந்துவது எப்போது?

போக்குவரத்து நெரிசல் மிகுந்த காலை, மாலை நேரங்களில், குறைந்த அரசுப்பேருந்துகளே இயக்கப்படுவதோடு, அவசர கதியில் செல்வதால், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.
கோவை மாவட்டத்தில், 2 ஆயிரத்து 10 அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள் இயங்கு கின்றன. பெரும்பாலான தனியார் பள்ளிகளில், வாகன வசதி உள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், இலவச பஸ் பாஸ் மூலம், அரசு பேருந்துகளில் பயணிக்கின்றனர்.

காலை 8:30 மணி அளவிலும், மாலை 5:00 மணிக்கு பின்பும், இப்பேருந்துகளில் ஏற மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இந்நேரங்களில், அதிக அரசுபேருந்துகள் இயக்க வேண்டுமென்ற, நீண்டநாள் கோரிக்கை நிலுவையில் உள்ளது.குறிப்பாக, நகரின் மையப்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு, பேருந்து மூலம் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பு, நாளுக்கு நாள் கேள்விக் குறியாகி வருகிறது.

மார்ச் 10ல் போலியோ சொட்டு மருந்து முகாம்

தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. இதற்காக 43,051 மையங்கள் அமைக்கப்பட உள்ளன. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள தமிழக அரசு, இதற்காக பஸ், ரயில், விமான நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் மொத்தம் 1,652 மையங்களை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tuesday, 12 February 2019

BT to PG Promotion panel as on 01.01.2019 JD HS Instructions

Teachers and Office Staffs 1132 posts - Post Continuation Order

P.G. Teacher - 900 posts - Post Continuation Order

P.G Assistant 90 Posts - Post Continuation Order

Computer science -117 Posts - Post Continuation Order

Computer Instructor 1880 Posts - Post Continuation Order

CEO to PA 31 posts - Post Continuation Order

B.T.Assistant 193 posts - Post Continuation Order

B.T&P.G.Assistant 8462 Posts - Post Continuation Order

Agriculture - 100 posts - Post Continuation Order

Monday, 11 February 2019

Coimbatore District Prematric Matric Postmatric Scholarship Online Process Instructions

அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு ஆதாருடன் இணைந்த தொட்டுணர் கருவி (AEBAS-Aadhar enabled Bio-metric attendance system) முறையிலான வருகைப் பதிவேடு முறை அமல்படுத்துதல் – அரசு/ அரசு உதவி பெறும் உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரால்லாத பணியாளர்களின் எண்ணிகை விபரம் கேட்பு

அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு ஆதாருடன் இணைந்த தொட்டுணர் கருவி (AEBAS-Aadhar enabled Bio-metric attendance system) முறையிலான வருகைப் பதிவேடு முறை அமல்படுத்துதல் – அரசு/ அரசு உதவி பெறும் உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரால்லாத பணியாளர்களின் எண்ணிகை விபரம் கேட்பு - Click Here to Letter

SSLC NR correction final Quick Links

+1 GOVT EXAM NR Downloading instructions

SSLC NR correction final DGE Letter

Sunday, 10 February 2019

ஓட்டு சரிதானா! ஒப்புகைச்சீட்டு மெஷினில் உறுதி:அரசு பணியாளர்களுக்கு பயிற்சி!

வரும் லோக்சபா தேர்தலில், யாருக்கு ஓட்டு அளித்தோம் என்பதை உறுதிசெய்யும் இயந்திரத்தின், செயல்பாடுகள் குறித்து, தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் முகாம், கோவையில் நேற்று துவங்கியது.லோக்சபா தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை, தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும், மின்னணு ஓட்டு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இம்முறை, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், ஒப்புகைச்சீட்டு அளிக்கும் இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.

கோவை மாவட்டத்தில் மாவட்டத்தில் 110 ஊர் பெயர்கள் தமிழுக்கு மாற்றம்!

ஊர்களின் பெயரை, தமிழ் உச்சரிப்பில் இருப்பதுபோல், ஆங்கிலத்திலும் மாற்றலாம்' என்று அரசுக்கு, தமிழ் வளர்ச்சித்துறை பரிந்துரைத்துள்ளது. இதன்படி, கோவை மாவட்டத்தில், 110 ஊர்களின் பெயரை மாற்ற, தமிழ் வளர்ச்சித்துறை பரிந்துரை செய்துள்ளது.சில ஊர் மற்றும் வீதிகளின் பெயர்கள், தமிழில் ஒன்றாகவும், ஆங்கிலத்தில் வேறாகவும் இருக்கும். தமிழ் பெயர்களை சரியாக உச்சரிக்கத் தெரியாத, ஆங்கிலேயர் ஏற்படுத்திய குழப்பமே, இதற்கு காரணம்.

கோவை மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் விபரம்

வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில், அரசு வேலைக்கு ஆட்தேர்வு செய்த காலம் மாறி, இப்போது, அரசு பணியாளர் தேர்வாணயமான டி.என்.பி.எஸ்.சி., போட்டித்தேர்வு மூலமே, ஆட்தேர்வு நடக்கிறது.இதனால், வேலை தேடுவோரை, போட்டித்தேர்வுகளுக்கு தயார் செய்யும் பணியில் வேலைவாய்ப்பு அலுவலகம் ஈடுபட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளிக்கவும், மாதிரி நேர்காணல் நடத்தவும், வேலைவாய்ப்புத்துறை ஏற்பாடு செய்கிறது.

Friday, 1 February 2019

680 Vocational Teacher Post January Pay Order Released

01.01.2019 ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்குத் தகுதி வாய்ந்த முதுகலைப் பாட ஆசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் (நிலை-1) /அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்- தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்யக் கருத்துருக்கள் கோரியது திருத்தம் வெளியீடு

01.01.2019 ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்குத் தகுதி வாய்ந்த முதுகலைப் பாட ஆசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் (நிலை-1)  /அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்- தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்யக் கருத்துருக்கள் கோரியது திருத்தம் வெளியீடு - CLICK HERE TO Download

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here