Tuesday, 19 May 2020

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: புதிய அட்டவணையை வெளியிட்டார் பள்ளிக்கல்வி அமைச்சர்

தமிழகத்தில் ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு ஜூன் 15 ஆம் தேதி தொடங்கும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.முன்னதாக, ஜூன் 1 ஆம் தேதி தொடங்க இருந்த 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை திட்டமிட்டபடி நடத்தலாமா? அல்லது ஒத்திவைக்கலாமா என்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின் நிறைவில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், ஜூன் 1 ஆம் தேதி நடைபெறவிருந்த பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், அதற்கு மாற்றாக ஜூன் 15 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய அட்டவணை.

பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்- பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று  பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சானிடைசர், சோப், கை கழுவுவதற்கான நீர் ஆகிய வசதிகளை ஏற்படுத்தி  வைத்திருக்க வேண்டும். 

Monday, 18 May 2020

கொரோனா தடுப்பு பணியாற்றியோர் குழந்தைகளுக்கு கல்விக்கட்டணத்தில் 50 % தள்ளுபடி - சிவகங்கை தனியார் பள்ளி அறிவிப்பு

அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் வியாபார நோக்கமின்றி கல்வி கட்டணத்தை குறைக்க முன்வர வேண்டும் என்பது பெற்றோர்களின் வேண்டுகோளாக உள்ளது.கொரோனா தடுப்பு பணியாற்றியோர் குழந்தைகளுக்கு கல்விக்கட்டணத்தில்  50 சதவீத சிறப்புச்சலுகை என்று  தனியார் பள்ளி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவி

ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட அரசு பள்ளி மாணவர்களின் குடும்பங்களுக்கு, தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள் உதவி செய்தனர்.கோவை, சூலுார் ஒன்றியத்துக்குட்பட்ட பட்டணம்புதுார் தொடக்க பள்ளியில், 35 மாணவர்கள் படித்து வருகின்றனர். ஊரடங்கு காரணமாக மாணவர்களின் பெற்றோர், வேலை கிடைக்காமல் சிரமப்பட்டனர். இதனால் அவர்களின் குழந்தைகள் பாதிக்கப்பட்டனர்.இதையறிந்த பள்ளி தலைமை ஆசிரியை பிரமிளாதேவி மற்றும் ஆசிரியை கவிதா ஆகியோர், தலா ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகைப்பொருட்களை, மாணவர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கினர்.கொரோனா தொற்றின் அபாயம் மற்றும் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு விளக்கினர்.

-தினமலர் 

பள்ளி மாணவர்களுக்கு மாஸ்க் வழங்கப்படும்: சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா

''பள்ளி மாணவ, மாணவியர், 35 லட்சம் பேருக்கு, முகக் கவசங்கள் தயாரித்து வழங்கப்படும்,'' என, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா கூறினார். இதுகுறித்து, மேலும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நாமக்கல் மாவட்டம், கொரோனா இல்லாத மாவட்டமாக அறிவிப்பதற்கு, துறை செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக முகக் கவசம் இன்றியமையாதது.

பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்றா?

'தமிழகத்தில், பள்ளி மாணவர்கள் எவருக்கும், கொரோனா தொற்று ஏற்படவில்லை,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன்கூறினார்.

ஈரோடு மாவட்டம், கோபியில் அவர் கூறியதாவது: கொரோனா தொற்றுள்ள பகுதிகளில், அரசு பள்ளிகள் இருந்தால், அங்கும், பத்தாம் வகுப்பு தேர்வெழுத ஏற்பாடு செய்யப்படும். தமிழகத்தில், பள்ளி மாணவர்கள் எவருக்கும், கொரோனா தொற்று ஏற்படவில்லை. தேர்வெழுதும் மாணவர்கள், எந்த அச்சமுமின்றி வந்து செல்ல, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. பக்கத்து மாநிலம் சென்றுள்ள மாணவர்கள், தேர்வெழுத வசதியாக, 'இ - பாஸ்' பெற, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு

கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் தீவிரமடைந்த நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மத்திய அரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.  இவற்றில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.

Sunday, 3 May 2020

கொரோனா நிதிக்கு ஒருமாத ஊதியத்தை கொடுத்த முதன்மைக்கல்வி அலுவலர்

சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் து.கணேஷ்மூர்த்தி  தனது ஒருமாத ஊதியத்தை கொரானா நிவாரண பணிக்காக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வழங்கியுள்ளார்.போட்டித்தேர்வு மூலம் நேரடியாக கல்வி அலுவலர் பணியில் சேர்ந்த இவர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டார்.

கரோனா நிவாரணமாக மே மாத ஊதியத்தை வழங்குங்கள்: பகுதிநேர ஆசிரியர்கள் முதல்வருக்கு உருக்கமான வேண்டுகோள்

'இதுவரை உள்ள நிலைமை வேறு, இப்போதுள்ள நிலைமை வேறு என்பதால் பேரிடர் கால உதவியாக பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளத்தைக் கொடுக்க முதல்வர் ஆணையிட வேண்டும்' என தமிழ்நாடு அனைத்துப் பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 26-8-2011 ஆம் ஆண்டில் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் 16,549 பகுதிநேர ஆசிரியர்களை 5 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிக்கவிருப்பதாக அறிவித்தார். இந்த ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக ஆண்டுக்கு 99 கோடியே 29 லட்சம் நிதியும் ஒதுக்கப்படுவதாக அறிவித்தார்.

ஊத்தங்கரை அருகே அரசு பள்ளி மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆசிரியர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களில் 53 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலனவர்கள் விவசாய கூலி தொழில் செய்து வருகின்றனர். தற்போது, கரோனா தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு பிற்பிக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் இல்லங்களுக்கு ரூ.600 மதிப்புள்ள மளிகை பொருட்கள், கிருமிநாசினி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்க பள்ளி ஆசிரியர்கள் முடிவு செய்தனர்.

பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களின் குடும்பங்களுக்கும் உதவிக்கரம்; சொந்த செலவில் வழங்கிய அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

புதுச்சேரியில் அரசு நடுநிலைப் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களின் குடும்பங்களுக்கும், பள்ளியின் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து தங்கள் சொந்த செலவில் அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.

புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு புதுக்குப்பம், நல்லவாடு, பூரணாங்குப்பம், தானாம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மொத்தம் 101 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 10 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

தனியார் பள்ளிகளில் கட்டாயக்கல்வி சட்டம்: மாணவர் சேர்க்கைக்கான அட்டவணை வெளியிடும் தேதி ஒத்திவைப்பு


வீட்டில் இருந்தே ஆன்லைனில் பாடம் படிக்கும் மாணவர்கள் - கேந்திரிய வித்யாலயா பள்ளி சிறப்பு ஏற்பாடு


திருப்பத்தூர்: பள்ளி மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கிய தலைமை ஆசிரியர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் சின்னகம்மியம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக  சித்ரா முருகன் மற்றும் ஆசிரியராக திருமதி உஷா ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர் இப்பள்ளியில் 49 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

ராமநாதபுரம்: பள்ளி மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் நிவாரணம் வழங்கி அரசு பள்ளி தலைமை ஆசிரியை

ராமநாதபுரம், பரமக்குடி கீழபெருங்கரையில், பள்ளி மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் நிவாரணம் வழங்கி அரசு பள்ளி தலைமை ஆசிரியை அசத்தியுள்ளார். கீழபெருங்கரை அரசு பள்ளியில் 40 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.இவர்களின் குடும்பங்கள் ஊரடங்கால், வருமானம் இன்றி தவித்து வருகிறது. இந்நிலையில், பள்ளி தலைமை ஆசிரியையாக உள்ள உமா மகேஸ்வரி, தனது சொந்த செலவில், 40 பள்ளி மாணவர்களுக்கும் தலா 5 கிலோ அரிசி p, முக கவசம் மற்றும் வைட்டமின் மாத்திரைகளை வழங்கினார். இது மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.

-ஜெயா பிளஸ் 

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here