Wednesday, 18 December 2019

டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத 1747 ஆசிரியர்கள்: பணிநீக்கம் செய்ய தமிழக அரசு முடிவு?

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1747 ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டப்படி ஆசிரியர்களாக பணியாற்ற கூடியவர்கள் ஆசிரியர்  தகுதித் தேர்வினை முடிக்க வேண்டும் என்பது விதியாகும்.
அதன் அடிப்படையில் அரசு பள்ளிகளை பொறுத்தவரை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்தவர்கள் ஆசிரியர்களாக நியமனம்  செய்யப்படுகிறார்கள்.

ஈரோடு: சத்தியமங்கலம் பற்றி அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவரின் அற்புதமான கவிதை


மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு, மார்ச் 2020 – தனித் தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்றல் - அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செய்திக்குறிப்பு வெளியீடு

March 2020 Exam - +2 Discontinued Students admission Regards instructions

March 2020 Exam - G.O. 217 Dated:06.12.2019 Communication - Old syllabus/ CBSE/ Other state students Exam admission

March 2020 Exam - HSE I Year - NR Correction/ Addition Date extension instructions

Private Candidate Instructions for HSE I year Mar 2020 / Private Candidate Instructions for HSE II year Mar 2020

Tuesday, 17 December 2019

பள்ளி வளாகங்களில் திருடுபோன இலவச லேப்டாப்கள் எத்தனை...? விபரமளிக்க பள்ளிக்கல்வி துறைக்கு உத்தரவு

பள்ளி வளாகங்களில் இருந்து கடந்த 8 ஆண்டுகளில் எத்தனை லேப்டாப்கள் திருடப்பட்டது என்பது குறித்து விவரங்களை அளிக்க தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் துறை, பள்ளிக்கல்வித்துறையை கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் படிக்கக்கூடிய அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு அரசின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன
.

கொள்முதல் செய்யப்படும் லேப்டாப்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்படுவது வழக்கம். அவ்வாறு அனுப்பப்படும் லேப்டாப்கள், குறிப்பிட்ட மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளின் போது அந்த மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள் லேப்டாப்களை மாணவர்களுக்கு வழங்குவார்கள்.

கிருஷ்ணகிரி அருங்காட்சியக வெள்ளி விழாவில் முதன்மைக்கல்வி அலுவலர்


கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்ட இரா.முருகன் அவர்களுடன் சந்திப்பு


Monday, 2 December 2019

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி - பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு

பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஆங்கில பேச்சுத்திறனை மேம்படுத்துவதற்காகவும், ஆங்கில பேச்சுத்திறன் விருப்பத்திற்காகவும் தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் விரும்புகின்றனர். அதனை குறைத்து அரசு பள்ளிகளின் மாணவர்கள் சேர்க்கையினை அதிகரிக்கும் நோக்கில் ஆங்கில பேச்சுத்திறன் வளர்ப்பு பயிற்சி மாணவர்களுக்கு அளிக்கப்பட உள்ளது.


இதற்காக கற்றல் கற்பித்தல் பணிகளை சிறந்த முறையில் ஆங்கில ஆசிரியர்கள் மேற்கொள்ளவும், மாணவர்களை ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதற்கு பயிற்சி அளிக்கவும் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்ட பட்டியலை தயாரித்து இருக்கிறது.

மழையால் புத்தகங்களை இழந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

மழையால் புத்தகங்களை இழந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுக்க கடந்த கடந்த வாரத்திலிருந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

Sunday, 10 November 2019

பெரம்பலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பணியேற்பு

பெரம்பலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பணியேற்பு
தமிழகத்தில் நான்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்தும், மாவட்டக்கல்வி அலுவலர் ஒருவருக்கு முதன்மைக்கல்வி அலுவலராக பதவி உயர்வு அளித்தும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.

கோயம்புத்தூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பணியேற்பு

தமிழகத்தில், நான்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. கோயம்புத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகப் பணிபுரிந்து வந்த  இரா.முருகன் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு  இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். இவர் பள்ளி மாணவர்களுக்கு தினசரி, வார, மாதத்தேர்வுகளை அறிமுகப்படுத்தியதோடு நேர்மை அங்காடி என்ற திட்டத்தையும், அரசுப்பள்ளிகளில் துவக்கி வைத்து, பாராட்டுக்களைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைக்கேறிய போதையுடன் வகுப்பறையில் மாணவர்கள் கலாட்டா..! அதிர்ச்சியடைந்த ஆசிரியர்..!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி காந்தி சாலையில் அரசு மேல்நிலைய பள்ளி இருக்கிறது. பிளஸ் 2 வரை இருக்கும் இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் இங்கு பயின்று வருகின்றனர். நேற்று வழக்கம் போல மாணவ மாணவிகள் வகுப்பறையில் இருந்தனர். அவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்திக்கொண்டிருந்தனர்.

அரியலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பணியேற்பு

தமிழகத்தில், நான்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. அதில் கரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சி.முத்துகிருஷ்ணன் அவர்களுக்கு அரியலூர் மாவட்டத்திற்கு மாறுதல் அளிக்கப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

Wednesday, 9 October 2019

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள்-11 மற்றும் 12ம் வகுப்பு மாணவிகளுக்கான Sensitization Programme - Women in Mechanical- 5 மாவட்டங்களில் நடைபெறுதல் பள்ளிக்கல்வி இயக்குநரின் அறிவுரைகள்

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள்-11 மற்றும் 12ம் வகுப்பு மாணவிகளுக்கான Sensitization Programme - Women in Mechanical- 5 மாவட்டங்களில் நடைபெறுதல் பள்ளிக்கல்வி இயக்குநரின் அறிவுரைகள் - Click Here to Download

Tuesday, 8 October 2019

Celebration of the birthday of former President lateDr. A.P.J.Abdul Kalam as Youth Awakening Day on 1StnOctober 2019 Regarding Letter

18 RMSA Model School Teaching And Non Teaching Total 1132 Post August - 2019 Pay authorization Letter

2011-12-100 GHSS- 100HM and 900 PG August 2019 Pay Authorization Letter

New 52 DEO Office July 2019 Pay Authorization Letter

1590 PG 6872 BT TOTAL 8462 POST August 2019 Pay Authorisation Letter

RMSA 18 Model schools Pay Authorization Letter

52 New DEO Office Septemper 2019 Pay Authorisation Letter

IEDSS - 58 BT Teachers Pay IEDSS - 58 BT Teachers Pay Order

1590 PG 6872 BT TOTAL 8462 POST September 2019 Pay Authorisation Letter

Saturday, 28 September 2019

Single Use Plastic Regards Director of Matriculation Instructions

Fit India Plogging Run on 2nd October, 2019 - Arrangements Regards SPD Instructions

02.10.2019 காந்தி ஜெயந்தி அன்று பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பள்ளிகளுக்கு கடலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுற்றறிக்கை

5 , 8 ம் வகுப்பு பொதுத்தேர்வு உண்டா? இல்லையா?

5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வு உண்டா, இல்லையா என்பதில், குழப்பம் நீடிக்கிறது.இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. இதன்படி, 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என, மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இதையடுத்து,5 மற்றும் 8 வகுப்பு மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல், பொதுத் தேர்வு நடத்தப்படும் என, தமிழக பள்ளி கல்வித்துறை அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணை, அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு, தேர்வுக்கு தயாராகும்படி கூறப்பட்டுள்ளது.

PAN எண் உடன் ஆதார் எண்ணை இணைப்பது டிச.,31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

PAN எண் உடன் ஆதார் எண்ணை இணைப்பது டிச.,31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்து இருப்பதாவது: பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் செப்.,30ம் தேதியுடன் நிறைவடைவதாக இருந்தது. இந்நிலையில் பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால கெடுவை வரும் டிச.,31 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

நீட் தேர்வுக்கு பயோமெட்ரிக்: மத்திய அரசுக்கு தமிழகம் கடிதம்

நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கைரேகையை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்ய மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் அடுத்தாண்டு முதல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு வரும் மாணவர்களிடம் &'பயோமெட்ரிக்&' முறையில் கைரேகை பதிவு செய்யப்படும். இந்த முறையை செயல்படுத்தும்படி &'நீட்&' நுழைவு தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமைக்கு கடிதம் எழுதப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

நீட் ஆள்மாறாட்டம் : மேலும் 3 மருத்துவ மாணவர்கள் கைது

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் மேலும் 3 மருத்துவ மாணவர்கள் மற்றும் அவர்களின் தந்தையை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரம் தொடர்பாக உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று டாக்டர் வெங்கடேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கிடையில் ஆள் மாறாட்ட விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் காஞ்சிபுரத்தை சேர்ந்த 3 மருத்துவ மாணவர்கள் நேற்று சிக்கிய நிலையில், இன்று மேலும் 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வு ஆள்மாறாட்டம்: தர்மபுரி மருத்துவ கல்லூரியில் விசாரணை

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து கைதான உதித் சூர்யா, முகமது இர்பான் என்ற மாணவரும் ஆள்மாறாட்டம் செய்ததாக சிபிசிஐடி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில், தர்மபுரி மருத்துவ கல்லூரியில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். புகாருக்கு உள்ளான முகமது இர்பான் கடந்த சில நாட்களாக கல்லூரிக்கு வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

நீட் தேர்வு மையங்களுக்கு சிபிசிஐடி நோட்டீஸ்

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீட் தேர்வு பயிற்சி மையங்களுக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் கடிதம் அனுப்பி உள்ளனர்.
நீட் தேர்வுக்காக தமிழகத்தில் இருந்து விண்ணப்பித்தவர்களின் விபரங்களை அனுப்பி வைக்க வேண்டும் என தேசிய முகமைக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் கடிதம் அனுப்பி உள்ளனர். மேலும் ஒரே பெயர், முகவரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய மாணவர்களின் விபரங்களை அனுப்பி வைக்க வேண்டும். என கடிதத்தில் தெரிவித்து உள்ளனர்.

நீட் பாணியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு மையங்கள் (TRBPG Exams).. விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சி

நீட் பாணியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு மையங்கள் தொலைதூர மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால் விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2,144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்பட்டன.

Friday, 27 September 2019

TRUST EXAM SEPT -2019: முதன்மைக்கல்வி அலுவலரின் கூடுதல் அறிவுரைகள்

தமிழ் வளர்ச்சித் துறை 2019 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பெருந்தலைவர் காமராசர் மற்றும் பேரறிஞர் அண்ணா விருதுகளுக்கு தகுதியான நபர்களின் பெயர் விவரங்களை அனுப்பி வைக்க உத்தரவு

01.01.2018 HSS HM Regularisation Order

Saturday, 3 August 2019

தாமத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: ஹெச்.எம்.,களுக்கு சி.இ.ஓ., கண்டிப்பு

தாமதமாக வரும் ஆசிரியர்கள் மீது, தலைமையாசிரியர்கள், நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க, சேலம் முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், ஜூன் முதல், 'பயோமெட்ரிக்' முறையில், ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்படுகிறது.

காலை, 9:15 மணிக்குள், பள்ளிக்கு வர உத்தரவிட்டிருந்தாலும், பல ஆசிரியர்கள் தாமதமாக வருவது குறித்து, நேற்று முன்தினம், 'காலைக்கதிர்' நாளிதழில் செய்தி வெளியானது.

இப்படி ஒரு பள்ளி எங்கே இருக்கிறது எனத் தெரியுமா?

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கஞ்சனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாவட்ட அளவில் சிறந்த பள்ளி, சிறந்த முன்னுதாரணப் பள்ளி, பசுமைப் பள்ளி, 2014-15 ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ், கல்வி தரத்தில் "யு' கிரேடு, மாநில அளவில் 2014-15  சுற்றுச்சூழல் பாதுகாப்பு பசுமைப் பள்ளிக்கான முதல் பரிசு, மாவட்ட அளவில் சிறந்த பள்ளிக்கான 2015-16 காமராசர் விருது, 2016-17 குழந்தை நேயப் பள்ளி போன்ற விருதுகளை தொடர்ந்து பெற்றுள்ளது.

பொள்ளாச்சி:பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்



கோவை மாவட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி கல்வி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் பொது குழு கூட்டம் நடைபெற்றது. கோவை கல்வி மாவட்டத் தலைவர் கார்த்திகேயன், சர்க்கார்சாமக்குளம் கல்வி மாவட்டத் தலைவர் சபாபதி,மாவட்ட  உயர்மட்டக் குழுத் தலைவர் சிவகண்ணு மற்றும் மாவட்ட தலைவர் அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். 

பேருந்தில் படிக்கட்டுப் பயணம் கூடாது: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுரை

மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்யும் பொழுது படியில் தொங்குவதைத் தவிர்க்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த. விஜயலட்சுமி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
புதுக்கோட்டை பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்ட அவர் மாணவர்களிடம் பேசியது: 
மாணவர்கள் பள்ளியின் நெறிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். பள்ளிக்கு மாணவர்கள் தாமதமாக வருவதைத் தவிர்க்க வேண்டும். ஆசிரியர்கள் கூறும் அறிவுரைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும்.
எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வில் நூறு சதவிகிதத் தேர்ச்சி பெற வேண்டும். அதற்கு மாணவர்களும் ஆசிரியர்களும் ஒத்துழைக்க வேண்டும். மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்யும்போது படியில் தொங்குவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

செஞ்சி:கிளை நூலகத்தில் புரவலராக இணைத்துக் கொண்ட ஆசிரியர்

செஞ்சி கிளை நூலகத்தில் 25-07.19 அன்று பா. முருகானந்தம் ஆசிரியர் (ஊ.ஒ. துவக்கப்பள்ளி, கடுகப்பட்டு ) அவர்கள் செஞ்சி நூலகர் எ. பூவழகன் அவர்களிடம் நூலக வளர்ச்சிக்காக ரூ 1000 .00 செலுத்தி புரவலராக இணைத்து கொண்டார்கள்.த.பன்னீர் ஆசிரியர் & திருமதி இ. பொற்கொடி நூலக பணியாளர் உடனிருந்தனர்.நூலக வளர்ச்சிக்காக நூலக புரவலராக இணைத்து கொண்ட ஆசிரியர் திரு பா. முருகானந்தம் அவர்களுக்கு வாசகர் வட்டம் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.


Thursday, 25 July 2019

ரேசன் கார்டை தொலைத்தவர்களுக்கு ஆகஸ்டு 15 முதல் மாற்று கார்டுகள்

ரேசன் கார்டை தொலைத்தவர்களுக்கு ஆகஸ்டு 15 முதல் மாற்று கார்டுகள் வழங்கப்படும் என உணவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஆதார் கார்டை பதிவு செய்து அதன் அடிப்படையில் கையடக்க வடிவில் ‘ஸ்மார்ட்’ ரேசன் கார்டு குடும்பம் தோறும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கார்டில் உறுப்பினர் சேர்த்தல், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை செய்த பிறகு இ-–சேவை மையங்களில் 30 ரூபாய் கட்டணத்தில் மாற்று ரேசன் கார்டுகள் வழங்கப்பட்டு வந்தது. ரேசன் கார்டை தொலைத்தவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இ -சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்ததால் 2018 முதல் மாற்று கார்டு வழங்குவது நிறுத்தப்பட்டது.

Tuesday, 23 July 2019

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய கடைசி தேதி வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது

2018-19ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமானவரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் சென்ற ஏப்ரல் மாதம் முதல் தொடங்கியது. ஆண்டுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் உச்சவரம்பைத் தாண்டும் அனைவரும் கட்டாயமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
வரி ஆதாயத்திற்காக வீட்டுக்கடன், சேமிப்புகள் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருமான வரி உச்சவரம்புக்கு குறைவாக இருந்தாலும் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது கடந்த ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி 2018-19ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கு சம்பளம், மற்ற வருவாய், வீடு, விவசாயத்தில் ஆண்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் என ஆண்டு வருவாய் 50 லட்சத்திற்குள் உள்ள தனிநபர், ITR 1 என்ற படிவம் மூலம் வருமானவரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்‌.

Pay authorization 1564 Computer instructors

Pay Authiorisation for 18 Model Schools Teachers

MINORITY SCHOLARSHIP-2019-20-INSTRUCTIONS

Coimbatore District Road Safety Iinstructions

Coimbatore District 1st MID TERM TEST TIME TABLE – JULY- 2019 11 & 12

Monday, 1 July 2019

பழங்குடியின மாணவர்களுக்கு யோகா பயிற்சி

வால்பாறையில் உள்ள  உண்டு உறைவிடப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பழங்குடியின மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டன.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தினமணி நாளிதழ் சார்பில் ஒரு வார காலத்துக்கு பல்வேறு பள்ளிகளில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

வேலைவாய்ப்பு மற்றும் கல்வி குறித்த அறிவிக்கைகள்



Tuesday, 11 June 2019

வேலைவாய்ப்பு:அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிக்கைகள்


தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு வட்டிச் சலுகை வழங்கப்படுகிறது: மாவட்ட ஆட்சியர் தலைவர் தகவல்


ஏழைப்பெண்களுக்கு மாவட்ட சமூக நலத்துறையின் மூலமாக மின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்குவதற்கு தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படும்: மாவட்ட ஆட்சியர் பத்திரிகை செய்தி வெளியீடு


சிறுபான்மையின பள்ளிகளுக்கு உட்கட்டமைப்பு ஏற்படுத்த நிதி: மாவட்ட ஆட்சியர் பத்திரிகை செய்தி வெளியீடு


SSA கூடுதல் திட்ட அலுவலராக பொறுப்பேற்றுள்ள தலைமையாசிரியருக்கு ஆசிரியர்கள் வாழ்த்து

மேல்மலையனூர்:அவலூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் விழுப்புரம் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் (SSA) கூடுதல் திட்ட அலுவலராக பொறுப்பேற்றுள்ளமைக்கு ஆசிரியர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Monday, 10 June 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு: கேள்விகள் மிகவும் நீளமாக இருந்ததாகப் புகார்

தேர்வு எழுதியவர்களில் பலர் கணித கேள்விகள் பல நீளமாக இருந்தன எனவும் கல்விசார் உளவியல் தொடர்பான கேள்விகள் கடினமாக இருந்தன எனவும் தெரிவித்தனர்.ஆசிரியர் தகுதித் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் கணிதம், கற்பித்தல் மற்றும் குழந்தை மேம்பாடு குறித்த கேள்விகள் கடினமாக இருந்தன என பலர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு இன்றும் நாளையும் (ஜூன் 9 மற்றும் 10) இரண்டு தாள்களாக நடைபெறுகிறது. இந்த ஆண்டு சுமார் 6 லட்சம் பேர் டெட் தேர்வை எழுத விண்ணப்பித்தனர். 1,081 தேர்வு மையங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்தது.

Sunday, 2 June 2019

2032-க்குப் பிறகு கல்லூரிகளே பட்டங்களை வழங்கும் நடைமுறை: வரைவு கல்விக் கொள்கை-2019 வெளியீடு

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் புதிய கல்விக் கொள்கை 2019-க்கான வரைவை வெளியிட்டுள்ளது.
 நாடு முழுவதும் தரமான உயர் கல்வி, ஆராய்ச்சிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளும், திட்டங்களும் இந்த வரைவு கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன.

தேசிய தரவரிசை: சென்னை பல்கலை. முன்னேற்றம்

தேசிய தரவரிசையில் 2 ஆண்டுகளுக்கு முன் 41-வது இடத்தில் இருந்த சென்னை பல்கலைக்கழகம் தற்போது முதல் 20 இடங்களுக்குள் முன்னேற்றியிருப்பதாக துணைவேந்தர் துரைசாமி தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ''பல்கலைக்கழகத்தில் தொழில்முனைவோர் மற்றும் சுய வேலைவாய்ப்பு பயிற்சி மண்டலம் அமைக்க மத்திய அரசிடம் 15 கோடி ரூபாய நிதி கோரப்பட்டுள்ளது. பி.எச்.டி. மாணவர்களின் சிறப்பான செயல்பாட்டிற்காக, பிழை கண்டறிதல் மற்றும் உண்மைத்தன்மை பரிசோதிக்கும் முறை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

பிளஸ் 2 முடித்தவர்கள் நேரடியாக சேரும் வகையில் 5 ஆண்டு எம்.ஏ. தமிழ் இலக்கியம் படிப்பு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அறிமுகம்

பிளஸ் 2 முடித்தவர்கள் நேரடியாக சேரும் வகையில் ஒருங்கிணைந்த 5 ஆண்டுகால எம்.ஏ. தமிழ் இலக்கியம் படிப்பை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் சேர ஜூன் 15 வரை விண்ணப்பிக்கலாம்.

இதுதொடர்பாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கோ.விஜயராகவன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் வரும் நாட்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அந்தமானில் பருவமழை தொடங்கியுள்ளது. இதனால், கடலோரப் பகுதிகளில் 45 கி.மீ வரை பலத்த காற்று வீசக்கூடும்.  எனவே, மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் போது பாதுகாப்புடன் செல்லவேண்டும்.

பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸில் பயணிக்கலாம்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு

கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் அரசு, தனியார் பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்படவுள்ளன.தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்து வரையிலான வகுப்புகளுக்கு மே மாதம் மட்டுமே விடுமுறை விடப்படும். ஆனால், இந்த ஆண்டு, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளைப் போன்றே ஏப்ரல் இரண்டாவது வாரம் முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. கோடை விடுமுறை ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வருகிறது.

இதையடுத்து அனைத்துப் பள்ளிகளும் திங்கள்கிழமை (ஜூன் 3) திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறந்த முதல் நாளிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பாடநூல்கள், சீருடைகள் வழங்கப்படவுள்ளன.

ஆசிரியர் தகுதித் தேர்வை கட்டாயப்படுத்தக் கூடாது: உயர்நீதிமன்றத்தில் மனு

கடந்த 2012-ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களை, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது எனக்கூறி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 சென்னை உயர்நீதிமன்றத்தில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பார்த்திபன் உள்ளிட்ட 5 ஆசிரியர்கள் தாக்கல் செய்த மனுவில், "அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் நாங்கள் கடந்த 2010-ஆம் ஆண்டு ஆசிரியராக நியமிக்கப்பட்டோம்.
அந்த சமயத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற வேண்டும் என நிபந்தனைகள் எதுவும் இல்லை. இந்த நிலையில் கடந்த 2009-ஆம் ஆண்டு கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் மத்திய அரசால் இயற்றப்பட்டது. இந்த சட்டம் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. இதன்படி ஆசிரியர்கள் பணி நியமனம் மற்றும் பணி விதிகள் உருவாக்கப்பட்டன. இந்தச் சட்டத்தை கடந்த 2011-ஆம் ஆண்டு தமிழக அரசு அமல்படுத்தி அறிவிப்பாணை வெளியிட்டது.

ஜிப்மர் மருத்துவக்கல்லூரி நுழைவுத் தேர்வு: ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

புதுச்சேரி ஜிப்மர் கல்லூரியின் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.200 எம்பிபிஎஸ் இடங்களுக்கான நுழைவுத் தேர்வானது, 25 மாநிலங்களில் உள்ள 280 மையங்களில் காலை, மாலை என 2 பிரிவுகளாக நடைபெறுகிறது.

இந்த தேர்வில் நாடு முழுவதிலுமிருந்து 1,84,272 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் சேர நீட் தேர்வு அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


நன்றி:தினமணி 

ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்புக்கு மதிப்பெண் அதிகரிப்பு: அரசாணை வெளியீடு

ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூலம் நடத்தப்படும், பட்டயப் படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மதிப்பெண்களை அதிகரித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
 தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளிகள், தனியார் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளுக்கு பாடம் நடத்த இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

பள்ளி வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி மாணவர் பலி

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே பள்ளி வாகனத்திலிருந்து இறங்கும்போது, பின்பக்க சக்கரத்தில் சிக்கி, 2ஆம் வகுப்பு மாணவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
 திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம், சிறுமதுரை கிராமத்தில் உள்ள காலனி பகுதியைச் சேர்ந்தவர் மாயவேல், டாஸ்மாக் மதுக் கடை விற்பனையாளர். இவரது மகன் முகுந்தன்(6). திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்துவந்தார். இவர், கோடை கால விடுமுறைக்குப் பிறகு சனிக்கிழமை பள்ளிக்குச் சென்றார்.

தமிழகத்தில் இருமொழிக்கொள்கையே பின்பற்றப்படும்: மத்திய அரசின் மும்மொழி கொள்கை பரிந்துரை குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து பின்பற்றப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கான வரைவுத் திட்டத்தில் ஒரு அம்சமாக நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த பரிந்துரைக்கப்பட்டு கருத்து கேட்கப்பட்டு வருகிறது, அதில் கூறப்பட்டுள்ள ஒரு அம்சம் சர்ச்சையை எழுப்பியுள்ளது. தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை பின்பற்றப்படும் நிலையில், மீண்டும் இந்தி திணிப்பு முயற்சி நடைபெறுவதாக எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்த பரிந்துரையில் ஒன்றாக மும்மொழிக்கொள்கை குறித்து கூறப்பட்டுள்ளது. அதில் தாய் மொழி, இணைப்பு மொழியாக ஆங்கிலம் மூன்றாவது ஒரு அயல் மொழியை கட்டாயம் படிக்கவேண்டும் என்றும் இந்தி பேசும் மாநிலங்கள் தாய்மொழியான இந்தி இணைப்பு மொழியான ஆங்கிலம் மற்றும் 3 வது மொழியை தாங்களே தேர்வு செய்துக்கொள்ளலாம்.

தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு... அனைத்து ஏற்பாடுகளும் தயார்

கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

ஜுன் 3ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவது ஜூன் 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வரும் நிலையில், பள்ளிக் கல்வித்துறை இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

அதில், 2019 - 20 ஆம் கல்வியாண்டில், மாணவர்களுக்கான பாடத் திட்டங்கள் முழுமையான அளவில் முடிக்கப்பட உள்ளதால், ஜூன் 3 ஆம் தேதியன்று, அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என  தெரிவிக்கப்பட்டது.

Wednesday, 29 May 2019

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதில் தொடர் சிக்கல் என தேர்வர்கள் புகார்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஹால் டிக்கெட்டை http://trb.tn.nic.in  என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்வதில் தொடர் சிக்கல் என தேர்வர்கள் புகார் தொவிமத்துள்ளனர்.

மேலும் டெட் தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கு மே 26-ல் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2019-2020 ஆம் கல்வியாண்டில் அரசு/அரசு உதவி பெறும் தொடக்க/நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு மற்றும் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு புதிய சீருடைகள் அறிமுகப்படுத்தல் - தலைமையாசிரியர்களுக்கு அறிவுரைகள்

Friday, 17 May 2019

அரசுப் பள்ளிகளில் 100 சேர்க்கை- முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு

தமிழக அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுவது குறித்த விழிப்புணர்வை பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே ஏற்படுத்தி, வரும் கல்வியாண்டில் முழுமையான சேர்க்கை நடைபெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தொடக்கக் கல்வி இயக்குநர் கருப்பசாமி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் அரசுப் பள்ளியில் தீவிர மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Thursday, 16 May 2019

தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீடு: மே 18ல் விண்ணப்ப பதிவு நிறைவு

தனியார் பள்ளிகளில், 25 சதவீத இட ஒதுக்கீட்டில், குழந்தைகளை சேர்ப்பதற்கான விண்ணப்ப பதிவு, மே, 18ல் நிறைவடைகிறது. இதுகுறித்து, சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் து.கணேஷ்மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில், தொடக்க நிலை வகுப்புகளில் உள்ள மொத்த இடங்கள், 25 சதவீத இடங்கள் ஆகிய விபரங்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பங்கள், கடந்த, 20 முதல், ஆன்லைனில் பதிவு செய்யப்படுகிறது. விண்ணப்பிக்கும் பள்ளி, குழந்தையின் இருப்பிடத்திலிருந்து, 1 கி.மீ., தொலைவுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க, அனைத்து வட்டார வள மையங்கள், வட்டார கல்வி, மாவட்ட கல்வி, முதன்மை கல்வி அலுவலகங்களில், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மே, 18 வரை மட்டும் விண்ணப்பிக்க முடியும் என்பதால், மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

பி.எட். தேர்வினை ஜூன் 13ஆம் தேதிக்கு மாற்றியது உயர்கல்வித்துறை


ஜூன் 8-ந்தேதி நடைபெற இருந்த பி.எட் தேர்வு தேதி மாற்றம் – உயர்கல்வித்துறை

‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் கடந்த மார்ச் 15-ந்தேதி முதல் ஏப்ரல் 5-ந்தேதி வரை ஆன்லைன் பதிவு செய்யலாம் என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு ஆணையம் அறிவித்திருந்தது.

இணையதளம் சரியாக வேலை செய்யவில்லை என விண்ணப்பதாரர்கள் கோரிக்கை வைத்ததையடுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை ஏப்ரல் 12-ந்தேதி வரை நீட்டித்தது.

Wednesday, 15 May 2019

TET தேர்வுக்கு DATE சொல்லியாச்சு: ஆசிரியர் தகுதித்தேர்வு வரும் ஜூன் மாதம் 8, 9 தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2019-க்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் கடந்த 28-ம் தேதி வெளியிடப்பட்டது. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாளுக்கான தேர்வு வரும் ஜூன் -8 ம் தேதி காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும், இரண்டாம் தாளுக்கான தேர்வு வரும் 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும் எழுத்துத்தேர்வு நடைபெறும் என்ற தகவல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1500 ஆசிரியர்களுக்கு பயிற்சி

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆயிரத்து 500 ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத காரணத்தால் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 1500 ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, 1500 ஆசிரியர்களின் பணிநீக்கத்தைத் தவிர்க்க ஜூனில் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித்தேர்வில், 1500 ஆசிரியர்களும் தேர்ச்சி பெறுவதற்கு ஏதுவாக பயிற்சி வழங்க  பள்ளிக்கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியிருந்தது.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 6 லட்சம் பேருக்கு மேல் விண்ணப்பம்

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத 6 லட்சத்து 4 ஆயிரம் பேருக்கும் மேல் விண்ணப்பித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நடக்கவிருக்கும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 12ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டது.இரண்டு தாள் அடங்கிய இந்த தேர்வுக்கு மொத்தமாக 6 லட்சத்து 4 ஆயிரத்து 156 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் கூறும் போது, முதல் தாள் எழுத 1 லட்சத்து 83 ஆயிரத்து 341 பேரும், இரண்டாம் தாள் எழுத நான்கு லட்சத்து 20 ஆயிரத்து 815 பேரும் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Sunday, 12 May 2019

பணி விவரங்களை கணினிமயமாக்கும் திட்டத்தால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல்

தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய மற்றும் பணி விவரங்களை கணினி மயமாக்கும் திட்டம் அடுத்த மாதம் முதல் அனைத்து ஊழியர்களுக்கும் அமல்படுத்தப்பட உள்ள நிலையில், அதில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப பிரச்சினையால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான நிதி மேலாண்மை மற்றும் மனித வளமேலாண்மை ஆகியவற்றை இணைத்து ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டம் (IFHRMS - Integrated Financial and Human Resource Management System) நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தனியார் நிறுவனம் ஒன்று தேர்வு செய்யப்பட்டுள்ளது.

படை வீரர்களின் வாரிசுகளுக்கு, மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு

பணியில் உள்ள படை வீரர்களின் வாரிசுகளுக்கு, மருத்துவப் படிப்பில் ஒதுக்கீடு மறுத்து, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்தது.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த, குறளரசன் தாக்கல் செய்த மனு: பணியில் உள்ள படை வீரர்களின் வாரிசுகளுக்கு, மருத்துவப் படிப்பில், ஒதுக்கீடு மறுத்து, தமிழக சுகாதாரத்துறை, 2018 ஜூன், 1ல் அரசாணை வெளியிட்டது. அதை ரத்து செய்து, பணியில் உள்ள படைப்பிரிவு வீரர்களின் வாரிசுக்கும், ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கோரியிருந்தார்.

Sunday, 5 May 2019

சென்னையில் இப்படி ஒரு அரசு பள்ளியா? ஆச்சர்யம் அளிக்கக் கூடிய தகவல்கள்

சென்னை அசோக்நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டதையொட்டி அங்கு அதிகளவில் மாணவிகளும், பெற்றோர்களும் குவிந்தனர்.சென்னை அசோக் நகரில் இயங்கி வரும் அரசு பெண்கள்மேல்நிலைப்பள்ளியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். சென்னையில் தனியார் பள்ளிகள் ஏராளமாக இயங்கி வந்தாலும் கூட, இந்த அரசு பள்ளியில் மட்டும் மாணவிகள் எண்ணிக்கை குறையவே இல்லை. தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில், இந்த பள்ளியில் கல்வித்தரம் உள்ளதாக பெற்றோர்கள் கருதுவதால் இங்கு அட்மிஷன் பெற கடும் போட்டி நிலவுகிறது.

எட்டாண்டுகள் படித்து முடித்து செல்லும் மாணவர்களுக்கு கவிதையால் வாழ்த்தி வழியனுப்பிய ஊ.ஒ.ந.நி.பள்ளி

பிரிவுபசாரம்

எட்டாண்டுண்டுகள்
இங்கு படித்து,
சொல்படி நடந்து,
ஒழுக்கம் ஒரு கண்
கல்வி ஒரு கண் என
இங்கு வாழ்ந்து,
இரு கண்ணிலும்
இப்போது நீரென..
எங்களைப் பிரியும்
எங்களின் முத்துக்களுக்கு
வழியனுப்பு விழா....

Thursday, 25 April 2019

HSE Second Year (+2) March 2019 - TML Down loading - Statement of Marks -RV/RT Application Instructions to All H.M's

ஆசிரியர்கள் வயது முதிர்வு காரணமாக கல்வியாண்டின் இடையே ஓய்வு பெறுதல் கல்வியாண்டின் இறுதி வரை மறுநியமனம் வழங்குதல் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணையை பின்பற்ற எஸ்.எஸ்.குளம் மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவு

26.04.2019 அன்று கோவை சி.இ.ஓ. தலைமையில் அரசு / அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி/ உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம்

IFHRMS செயல் விளக்க பயிற்சி கூட்டம்:அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களும்(DDO) தங்கள் பள்ளி/ அலுவலக IFHRMS பணி மேற்கொள்ளும் பணியாளர்களுடன் கலந்துகொள்ள கோவை சி.இ.ஓ. உத்தரவு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வி இயக்குநர் ஆணையை மேற்கோள்காட்டி முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவு

6 முதல் 9 ஆம் வகுப்புகள் தேர்ச்சி முடிவுகள் ஒப்புதல் வழங்குதல் சார்ந்து தலைமையாசிரியர் கூட்டம்

Tuesday, 23 April 2019

10ம் வகுப்பு, பிளஸ் 2 வரை சிறப்பு தேர்வு அறிவிப்பு

பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான, சிறப்பு துணை தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, மார்ச்சில் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்களுக்கும், ஏற்கனவே முந்தைய ஆண்டுகளில் நடந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும், ஜூனில் சிறப்பு துணை தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

புதுச்சேரி பல்கலை நுழைவுத் தேர்விற்கான விண்ணப்ப தேதி நீட்டிப்பு

புதுச்சேரி பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி, வரும் மே மாதம் 6ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, புதுச்சேரி பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரி மகேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:புதுச்சேரி பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளுக்கு இணைய தளம் மூலம் விண்ணப்பிப்பது நேற்றுடன் (ஏப்ரல் 22ம் தேதி) முடிவு பெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. புதுச்சேரி பல்கலைக்கழகத்தில், நடப்பு கல்வியாண்டிற்கான (2019-20) நுழைவுத் தேர்வு, வரும் ஜூன்மாதம் 7, 8 மற்றும் 9ஆகியதேதிகளில் நாடு முழுவதும் நடக்க உள்ளது.

Thursday, 4 April 2019

வயிற்று வலியால் போராடிய 10-ம் வகுப்பு மாணவியைக் காப்பாற்றி தேர்வு எழுத வைத்த ராணுவ மருத்துவர்கள்

வயிற்று வலியால் போராடிக் கொண்டிருந்த மாணவிக்கு உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்து, அவரை பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வையும் எழுத வைத்த சம்பவம் பஞ்சாபில் நடந்துள்ளது. இந்த உதவியை பதான்கோடு ராணுவ மருத்துவமனை மருத்துவர்கள் செய்தனர்.

அண்ணா பல்கலைக் கழக தேர்வு முடிவுகள் செல்லாது- பல்கலை அதிரடி..!

அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பருவத் தேர்வு முறைகேடு விவகாரத்தில், குற்றம்சாட்டப்பட்டுள்ள 130 மாணவர்களின் தேர்வு முடிவுகள் செல்லாது என அறிவித்துள்ள அண்ணா பல்கலைக் கழக நிர்வாகம் அந்த மாணவர்களின் பட்டங்களையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 2017, 2018-ம் ஆண்டுகளில் நடைபெற்ற பருவத் தேர்வுகளில் அப்பல்கலைக் கழக பணியாளர்கள் விடைத்தாள்களை மாற்றி வைத்து முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதில், அலுவலக உதவியாளர்களாக தற்காலிகமாக பணியாற்றிய ஊழியர்கள் துணையுடன் இந்த முறைகேடு நடந்துள்ளது என கூறப்பட்டது.

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here