Tuesday, 26 December 2017

ஓய்வூதியம் மீட்பு இயக்கம் அறிவிப்பு

27.12.17 அன்று ஒய்வூதியம் மீட்பு இயக்கம் சார்பில் திண்டுக்கலில் நடைபெற இருந்த மாநில ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தொடக்கக்கல்வி  இயக்குனர் உத்தரவுப்படி 27.12.2017 முதல் 30.12.2017 வரை போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சிகள் நடைபெறும் காரணத்தினால் 27.12.17 ம் தேதிய கூட்டம் ஆசிரியர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.
ஆலோசனைக் கூட்டம் எதிர்வரும் 07.01.2018 (ஞாயிறு)  அன்று திண்டுக்கலில் நடைபெறும்.

அனைத்து மாவட்டங்களிலும் இளைஞர் அறிவியல் திருவிழா தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முடிவு

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இளைஞர் அறிவியல் திருவிழா நடத்தப்படும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் பணியாற்றி வரும் இளைஞர்களை ஒருங்கிணைத்து மாநில அளவிலான இளைஞர்கள் அறிவியல் கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கவுசல்யா தலைமை வகித்தார்.   மாநில செயலாளர் தியாகராஜன் கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார். இதில் மாநில பொது செயலாளர் அமலராஜன் கலந்து கொண்டு, அறிவியல் இயக்க கொள்கை குறிப்பு கையேட்டை வெளியிட்டு பேசுகையில், இளைஞர்கள் சாதி, மதம், இனம், மொழி கடந்து சமூக பணியில் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும்.

திருப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள திருப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மாநில தலைவர் சீனிவாசன், பள்ளிக்கல்வி இயக்குநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2ம் தேதி முதல் 13ம் தேதி வரை மாவட்ட அளவில் திருப்பு தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு, அதற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

மூன்றாம் பருவ விலையில்லா பொருட்களை நேரடியாக பள்ளியில் தர வேண்டும் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

மூன்றாம் பருவத்திற்குரிய இலவச பொருட்களை நேரடியாக பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கரூர் வட்டார செயற்குழு கூட்டம் நடைபெற்றது. வட்டார தலைவர் அருள் குழந்தை தேவதாஸ் தலைமை வகித்தார். செயலாளர் பிரான்சிஸ் வரவேற்றார். மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினர் தமிழரசி, பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சின்னுசாமி, ஜெயராஜ், டெய்சிராணி உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில், 25வது ஆண்டு பாரம்பரிய உணவு திருவிழா

வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில், 25வது ஆண்டு பாரம்பரிய உணவு திருவிழா நேற்று நடைபெற்றது. பள்ளி செயலாளர் சாந்தி அஜய்குமார் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஞானசுந்தரி முன்னிலை வகித்தார். செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உதவி மருத்துவ அலுவலர் தீனதயாளன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

கோவை நஞ்சுண்டாபுரம் கிராமத்தின் உயர்நிலை பள்ளி வளாகத்தில் புதிய அரங்கம் கட்ட பூமி பூஜை

கோவை நஞ்சுண்டாபுரம் கிராமத்தின் உயர்நிலை பள்ளி வளாகத்தில் புதிய அரங்கம் கட்ட பூமி பூஜை விழாவும், 300 மரக்கன்றுகள் நடும் விழாவும் நடந்தது. ஈஷா அவுட்ரீச் மற்றும் கோவை பில்டர்ஸ் அண்ட் கான்ட்ராக்ட் அசோசியேசன் இணைந்து இந்த அரங்கத்தை கட்டுகிறது. இந்த அரங்கம் பள்ளி மாணவர்கள் யோகா பயிலும் யோகா சாலையாகவும், சிறப்பு பயிற்சிகள் நடத்தும் பயிற்சியறையாகவும், பள்ளி நிகழ்ச்சிகள் நடத்தும் அங்கமாகவும் பயன்படும். நிகழ்ச்சியில் செந்தில் அண்ட் கோ தலைவர் அன்பரசன், ஈஷா யோகா மையத்தின் ஸ்வாமி அபிபாதா, கோவை பில்டர்ஸ் அண்ட் கான்ட்ராக்ட் அசோசியேசன் தலைவர் சப்தரிஷி, பள்ளி தலைமையாசிரியர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Sunday, 24 December 2017

குழந்தைகளுக்கான நோபல் பரிசு பெறப்போகும் தமிழ் மாணவன்!



நன்றி: குங்குமம் சிமிழ் கல்வி வேலை வழிகாட்டி

அனைத்து உயிர்களுக்கும் உணவு ஒன்றே அத்தியாவசியமானது. அவ்வுணவுக்காகத்தான் மனிதன் உட்பட அனைத்து உயிர்களும் தன் வாழ்வில் அத்தனை போராட்டங்களையும் எதிர்கொள்கின்றன. இப்படி அதி அத்தியாவசியமான உணவு எளிதாகக் கிடைக்கும் வாய்ப்பு கொண்ட மனிதர்கள் பேராசையில் பணத்தைத் தேடி அலைகின்றனர். இதற்கு நேர்எதிராக சொத்து சுகத்தில் நம்பிக்கை இல்லாமல் தன் வாழ்நாள் அத்தனையும் உணவைத் தேடி அலையும் வாழ்க்கைச் சூழலைக் கொண்டவர்கள்தான் நரிக்குறவர்கள், பழங்குடிகள் என நாடோடி வாழ்க்கை வாழும் விளிம்புநிலை மனிதர்கள்.

அழகாபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகளின் டெங்கு விழிப்புணர்வு கானா பாடல்


டெங்கு விழிப்புணர்வு கானா பாடல்


அரசு பள்ளி மாணவனின் கண்ணீர் வரவைக்கும் அம்மா கானா பாடல்


அரசு பள்ளி மாணவனின் டெங்கு விழிப்புணர்வு கானா பாடல்


சுந்தரம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் மீண்டும் பள்ளிக்கு போகலாம் நிகழ்ச்சி

24.12.2017 அன்று வேலூர் மாவட்டம் மத்தூர் to திருப்பத்தூர் சாலையில்  சுந்தரம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி 1992-1993,மற்றும் 1993-1994 ஆண்டில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மீண்டும் பள்ளிக்கு போகலாம் என்ற நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்தனர்.அதன் மூலம் அந்த ஆண்டுகளில் பாடம் எடுத்த ஆசிரியர்களை  வரவழைத்து அவர்கள் 1992-1993, 1993-1994 ம் வருடங்களின் பள்ளி காலத்து நினைவுகளை அக்காலகட்டத்தில் பயின்ற மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள்.முன்னாள் மாணவர்கள் தங்களது ஆசிரியர்களுக்கு மரியாதை செய்த நிகழ்வு மிகவும் அருமையான தருணம்.

மாறுதல் பதவியுயர்வு கலந்தாய்வை டிசம்பர் இறுதியில் நடத்த வேண்டும்


மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலக நிர்வாக சீர்கேட்டை கண்டித்து தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்டம்


தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் சந்திப்பு


தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு கே.ஏ.செங்கோட்டையன் அவர்களை  21.12.2017 மாலை சந்தித்தனர்.                  பி.கே.இளமாறன்  மாநிலத் தலைவருடன் அ.அர்ச்சுனன் பொதுச்செயலாளர், எஸ்.கோகுலகிருஸ்ணன் திருவள்ளுர் மாவட்டச்செயலாளர்  ஆகியோர் உடனிருந்தனர்.

அரசு பள்ளி ஆய்வகத்திற்கு அறிவியல் உபகரணங்கள் லண்டன் வாழ் தமிழர்கள் வழங்கினர்

கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆய்வகத்திற்கு அறிவியல் உபகரணங்களை லண்டன் வாழ் தமிழர்கள் நேற்றுமுன்தினம் வழங்கினர். கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு லண்டன் வாழ் தமிழர்கள் சார்பாக அறிவியல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் வெங்கடேசன், ஆசிரியை விஜயலட்சுமி முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ராஜா வரவேற்றார்.

10 நாட்கள் புத்தாக்க பயிற்சி நிறைவு: கல்வியால் மட்டுமே மாணவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் கலெக்டர் பேச்சு

கல்வியால் மட்டுமே மாணவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பேசினார்.திருவண்ணாமலை மாவட்டத்தில், 10, பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி சதவீத்தை அதிகரிக்க, ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் கடந்த 11ம் தேதி தொடங்கி, நேற்று முன்தினம் வரை நடந்தது. அதில், நடிகர் தாமு உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்தனர்.பயிற்சி முகாம் நாள் நிகழ்ச்சி, தியாகி அண்ணாமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் நடந்தது. முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் வரவேற்றார்.

நீண்ட தாமதத்திற்கு பிறகு கலந்தாய்வு முடிந்து ஆசிரியர்கள் மாநகராட்சி பள்ளிகளில் நியமனம்

கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 83 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். மாநகராட்சி பள்ளிகளில் ஒவ்வொரு கல்வியாண்டும் கவுன்சிலிங் நடத்தப்பட்டு ஆசிரியர்கள் பணி மாற்றம் செய்யப்படுவர். அதன்படி, நடப்பு கல்வியாண்டு துவங்கிய கடந்த ஜூன் மாதம் பணியிடமாற்றம் தொடர்பாக மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களிடம் இருந்து  கல்வித்துறையால் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் முதல்கட்டமாக மேல்நிலைப்பள்ளிக்கான ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில் உயர்நிலைப்பள்ளியில் இருந்து மேல்நிலைப்பள்ளிக்கு 28 ஆசிரியர்கள் பணியிடம் மாற்றப்பட்டனர்.

கல்வி உதவித் தொகை வழங்குவது தொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது குறித்தும், அதற்கான விண்ணப்பங்களை பிழையின்றி பூர்த்தி செய்வது குறித்தும், கல்லூரி முதல்வர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு கோவை தனியார் கல்லூரியில் நேற்று பயிற்சி முகாம் நடந்தது. இதனை கோவை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் மதுராந்தகி துவக்கி வைத்தார். இதில் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் செந்தில்வேல், செயல்விளக்கம் காட்டினார். ஆசிரியர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப் பட்டது. இது குறித்து மாநில ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் செல்வக்குமார் கூறியதாவது:

ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் மாவட்ட நீதிபதியிடம் மனு

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமுல்படுத்திட வேண்டும், ஆசிரியர்களின் பணிப்பாதுகாப்பை உறுதிப்படுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதைதொடர்ந்து, மாவட்ட நீதிபதி வழியாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டத்தில் ஜேக்டோ ஜியோ அமைப்பினர் நேற்று ஈடுபட்டனர். இதில் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபரிடம் (பொறுப்பு), ஜாக்டோ-ஜியோ அமைப்பு நிர்வாகிகள் நேற்று மாலை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். மனுவில்,‘மதுரை உயர்நீதிமன்றத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு ஒப்புக்கொண்டவற்றை நிறைவேற்ற வேண்டும்.

பத்தாம் வகுப்பு தேர்வு எழுத தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

அரசுத் தேர்வுகள் கோவை மண்டல துணை இயக்குனர் திருநாவுக்கரசு வெளியிட்ட அறிக்கை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மார்ச், ஏப்ரல் மாதம் நடக்கிறது. இத்தேர்வு எழுத விரும்பும் தகுதியான தனித்தேர்வர்கள் இன்று முதல் வரும் 29ம் தேதி வரை (ஞாயிறு நீங்கலாக) கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்களுக்கு நேராக சென்று விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும். தேர்வு கட்டணம் ரூ.125, ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.50 என ரூ.175 தேர்வர்கள் செலுத்த வேண்டும்.

ஆசிரியரை தாக்கிய விவசாயி கைது

பண்ருட்டி அருகே தோப்புகொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் செந்தில்நாதன் (37). புதுப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பக்கத்து வீட்டை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (55) என்பவரிடம் கடன் வாங்கியிருந்தார். வாங்கிய கடனை பல ஆண்டுகளாக திருப்பி கொடுக்கவில்லை. இதனால் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இத்தகவலை கிருஷ்ணமூர்த்தி தனது நண்பரிடம் தெரிவித்து செந்தில்நாதனிடம் பணத்தை வாங்கி தருமாறு கூறி உள்ளார்.

கரூர்:10ம் வகுப்பு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்க சேவை மையம்

10ம் வகுப்பு தனித் தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. 2018 ம் ஆண்டு மார்ச் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள் ஆன்லைனில விண்ணப்பிக்கலாம் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்காக நேற்றுமுதல் வரும் 29ம்தேதி வரை (ஞாயிறு தவிர்த்து) ஆன் லைனில் விண்ணப்பிக்க கரூர் மாவட்டத்தில் அரசுத்தேர்வு சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இடைநிலை கல்வியில் பின் தங்கிய ஏழு மாவட்டங்கள்


Educational videos (145 videos )

Saturday, 16 December 2017

வேலூர் அறிவியல் மையத்தில் 7, 8, 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறையில் அறிவியல் செயல்முறை பயிற்சி வரும் 27ம் தேதி தொடங்குகிறது

வேலூர் மாவட்ட அறிவியல் மையத்தில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாணவர்களுக்காக அறிவியல் செயல்முறை கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூடத்தில் அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு அறிவியல் செயல்முறை பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த பயிற்சியில் மாணவர்கள் தாங்களாகவே அறிவியல் உபகரணங்கள் வடிவமைத்து 10 வகையான செயல் முறைகளின் மூலம் அடிப்படை அறிவியல் தத்துவங்களை மிக எளிமையான முறையில் தெரிந்துகொள்ளலாம். இதற்கு உதவியாக வீடியோ பட காட்சியும், வழிகாட்டும் முறைகளுடன்கூடிய வசதிகள் அறிவியல் மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

விருத்தாசலம்: தலைமையாசிரியை விருப்ப ஓய்வில் செல்ல எதிர்ப்பு

விருத்தாசலம் அருகே உள்ள கோ.ஆதனூர் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 152 மாணவர்கள் பயின்று வருகின்றனர். தலைமையாசிரியை தமிழ்செல்வி உள்பட 6 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில், தலைமையாசிரியை தமிழ்செல்விக்கும், மற்றொரு ஆசிரியைக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த ஆசிரியை, கல்வித்துறை அதிகாரிகளுக்கு கொடுத்த புகாரின் காரணமாக நேற்று முன்தினம் விருத்தாசலம் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் அறிவழகன், சந்திரலேகா ஆகியோர் பள்ளிக்கு சென்று சம்பந்தப்பட்ட ஆசிரியை மற்றும் தலைமையாசிரியையிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

கடலூர்:இரவு நேரங்களில் அரசு பள்ளியில் சமூக விரோதிகள் அட்டகாசம்

விருத்தாசலம்-கடலூர் சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளி வளாகம் இரவு நேரத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். சம்பவத்தன்று மாலை பள்ளி நேரம் முடிந்ததும் நுழைவு வாயிலை பூட்டி விட்டு சென்றனர். நேற்றுமுன்தினம் காலை வழக்கம்போல் ஆசிரியர்கள், மாணவர்கள் பள்ளிக்கு வந்தபோது, தலைமையாசிரியர் அறையின் வெளிப்பகுதி மற்றும் வகுப்பறைகளின் வெளி பகுதியிலுள்ள மின் விளக்குகள் உடைக்கப்பட்டு கண்ணாடி துகள்கள் சிதறி கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பல இடங்களில் காலி மதுபாட்டில்கள், கப்புகள் மற்றும் சிகரெட் துண்டுகள் கிடந்தன.

பாபநாசம் கருவூலத்தில் அலுவலர்கள் பற்றாக்குறை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அவதி

பாபநாசம் கருவூலத்தில் அலுவலர்கள் பற்றாக்குறையால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பாபநாசம் கருவூலத்தில் 24 பேர் வேலையில் இருந்தனர். ஆனால் தற்போது 6 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். பாபநாசம் கருவூலத்தில் அசிஸ்டண்ட் டிரசரி அலுவலர், சப்-டிரசரி அலுவலர் பணியிடம் காலியாக உள்ளது. அசிஸ்டண்ட் டிரசரி அலுவலர் டெபுடேஷனில் 2 நாளைக்கு ஒருமுறை தஞ்சாவூர், கும்பகோணம், திருவையாறு, திருவிடைமருதூர் போன்ற இடங்களிலிருந்து வருகின்றனர்.

கோவை ஆனைகட்டி உண்டு உறைவிடப்பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி தொடர உத்தரவு

கோவை ஆனைகட்டி உண்டு உறைவிடப்பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி தொடரும் என கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார். கோவை மாவட்டத்தில் ஆனைகட்டி, பாலமலை, எண்4.வீரபாண்டி ஆகிய பகுதிகளில் பழங்குடியின நலத்துறை கட்டுப்பாட்டில் உண்டு உறைவிட ஆரம்ப பள்ளிகள் உள்ளன. மலைவாழ் மக்களின் குழந்தைகள் அதிகளவில் இந்த பள்ளிகளில் படிக்கின்றனர். இங்கு ஆங்கில வழிக்கல்வி அமலில் உள்ளதால், உறைவிட பள்ளிகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

கோவை:தகுதிகாண் பருவம் முடிக்காத ஆசிரியர்களுக்கு ஜமாபந்தி

தகுதிகாண் பருவம் முடிக்காத ஆசிரியர்களுக்கு டிசம்பர் 26-ம் தேதி ஜமாபந்தி துவங்கும் என முதன்மை கல்வி அலுவலர் து.கணேஷ்மூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கணேஷ்மூர்த்தி கூறியதாவது: கோவை வருவாய் மாவட்டத்தில் உள்ள அரசு, நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதிகாண் பருவம் முடித்தல், பணிவரன்முறை, தேர்வுநிலை மற்றும் சிறப்புநிலை வழங்கக்கோரும் நிகழ்வுகளில் ஜமாபந்தி மூலமாக ஆணைகள் வழங்க கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.

தாராபுரம் சார்நிலை கருவூல அதிகாரியை கண்டித்து அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்ட அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தாராபுரம் சார்நிலை கருவூல அதிகாரியை கண்டித்து கருவூல அலுவலகம் முன் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு தாராபுரம் அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை தலைவர் ராஜூ தலைமை தாங்கினார்.

குளித்தலை:ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி குளித்தலை வட்டாரம் சார்பில் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. குளித்தலை வட்ட தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். விழாவில் கூட்டணியின் மாவட்ட தலைவர் குளித்தலை மணிகண்டன்,  ஏஇஓ ஆக பதவி உயர்வு பெற்ற மீனா மற்றும் நல்லாசிரியர் விருதுபெற்ற ரெங்கநாதன் ஆகியோருக்கு பாராட்டப்பட்டனர். விழாவில் சங்க பிரதிநிதிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பொருளாளர் தேக்கமலை நன்றி கூறினார்.

-தினகரன் 

திறக்கப்பட்டு 6 மாதங்கள் ஆகியும் பயன்பாட்டுக்கு வராத புதிய பள்ளி கட்டிடம்

கடந்த 6 மாதங்களுக்கு முன் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்ட அரசு உயர்நிலை பள்ளி கட்டிடம் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. குறிஞ்சிப்பாடி அடுத்த கல்குணம் ஊராட்சியில், அரசு நடுநிலை பள்ளி செயல்பட்டு வந்தது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இப்பள்ளி உயர்நிலை
பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. கல்குணம், டி.வி.நல்லூர், ரெட்டிப்பாளையம், பூதாம்பாடி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, உயர்நிலை பள்ளி இரண்டும் பழைய பள்ளி வளாகத்திலேயே இயங்கி வந்தது. 7 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன் தலைமையாசிரியர் ஓய்வு பெற்றுவிட்டார்.

டெங்கு கொசு: 55 பள்ளிகளுக்கு நோட்டீஸ்

கோவை மாவட்டத்தில் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த 55 பள்ளிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் பருவமழை காரணமாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவியது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கல்வித்துறை சார்பில் டெங்கு பரவாமல் தடுக்க ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் காய்ச்சல் பாதிக்கப்பட்டு விடுமுறை எடுத்த மாணவர் விவரங்கள் உடனுக்குடன் கல்வித்துறைக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

Thursday, 14 December 2017

வேலூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதிய இணையதளம் துவக்கம்

05.12.2017 முதல் www.edwizevellore.com என்ற புதிய இணையதளம்  வாயிலாக வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலக சுற்றறிக்கைகள் மற்றும் செய்திகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

HSC MARCH 2018-APPLICATION FOR EXEMPTIONS FOR PHYSCIALLY CHALENGED STUDENTS

10, 11 மற்றும் 12ம் வகுப்பு 2017-18 -திருப்புதல் தேர்வுகள் அட்டவணை

புதிய ஊதியப்படி பி.எப்., சந்தா

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, புதிய சம்பள அடிப்படையில், பி.எப்., எனப்படும், பொது வருங்கால வைப்பு நிதிக்கான, மாதாந்திர சந்தா பிடிக்க, நிதித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு, 2009ல், ஊதியம் உயர்த்தப்பட்டது.அதன் அடிப்படையில், பி.எப்., மாதாந்திர சந்தாவாக, சம்பளத்தில், 12 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது.

குரூப் - 4 தேர்வு பதிவு இணையதளம் முடக்கம்

குரூப் - 4 தேர்வுக்கு பதிவு செய்ய, நேற்று கடைசி நாள் என்பதால், லட்சக்கணக்கானோர் முயற்சித்ததால், இணையதளம் முடங்கியது. தமிழக அரசுத் துறைகளில், குரூப் - 4 பதவிகளில், 9,351 காலியிடங்களை நிரப்ப, பிப்., 11ல், எழுத்து தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கிராம நிர்வாக அதிகாரிகளுக்கான, 494 காலி இடங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுக்கு, நேற்று முன்தினம் வரை, 15 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். பதிவு செய்வதற்கு, நேற்று கடைசி நாள். ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் பதிவு செய்ய முயற்சித்ததால், இணைய தளத்தின் செயல்பாடு முடங்கியது. மாலையில், இணைய தளம் ஓரளவு இயங்க துவங்கியது. ஆனாலும், தேர்வுக்கு பதிவு செய்ய முடியாமல், பலர் ஏமாற்றம் அடைந்தனர்.

ஆசிரியர் பயிற்றுனர்கள் இடமாற்றம்

பள்ளிக்கல்வியில், 2005 - 06ல், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,யால் நியமிக்கப்பட்ட, 1,039 ஆசிரியர் பயிற்றுனர்கள், வட்டார வள மையங்களில் பணியாற்றுகின்றனர்.
இவர்களில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுவோருக்கு, ஆசிரியர்களாக பணியிட மாற்றம் வழங்க, பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம்

பேச்சு மற்றும் கேட்கும் திறனற்ற 3 பெண்கள், ஆதார் விபரங்கள் மூலம் சுமார் 2 ஆண்டுகளுக்கு பின் தங்கள் குடும்பத்தினருடன் இணைந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. இவர்களில் ஒருவர் ஆந்திராவையும், மற்றொருவர் தெலுங்கானாவையும், மற்றொருவர் ஈரோட்டையும் சேர்ந்தவர்கள்.

சேர்த்து வைத்த ஆதார் :

ஆதார் வழக்கில் நாளை உத்தரவு

மத்திய அரசின் 39 நலத்திட்டங்களுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதி அமர்வு விசாரித்து வருகிறது. இவ்வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட் அமர்வு, நாளை உத்தரவு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.

Wednesday, 13 December 2017

EMIS Day wise district login details

EMIS-*Day wise district login details*

*Monday, Wednesday, Friday*

Villupuram, Vellore, Tiruvallur, Coimbatore, Salem, Chennai, Cuddalore, Thiruvannamalai, Erode, Krishnagiri, Dharmapuri, Tiruppur
, *Namakkal,* Nilgiris, Kanchipuram


*Tuesday, Thursday, Saturday*

Karur, Perambalur, Pudukkottai, Madurai, Theni, Dindigul, Ramanathapuram, Virudhunagar, Sivagangai, Tirunelveli, Thoothukkudi, Kanniyakumari, Krishnagiri, Ariyalur, Thanjavur, Nagapattinam, Tiruvarur, Tiruchirappalli

*Note : All district login will be open on Sunday*

வீட்டிலிருந்தே மொபைல் எண் - ஆதார் இணைப்பு: பி.எஸ்.என்.எல்., புது திட்டம்

வாடிக்கையாளர்களுக்கு வசதியாக, வீட்டிலிருந்தபடியே மொபைல் எண்ணுடன் ஆதார் இணைக்கும், 'ஐ.வி.ஆர்.எஸ்.,' வசதியை பி.எஸ்.என்.எல்., ஜனவரி முதல் அறிமுகப்படுத்தவுள்ளது.
மொபைல் எண்ணுடனும் ஆதார் எண் இணைக்கக்கோரி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன. போலியான ஆவணத்தைக் காட்டி மொபைல் எண் பெறுதல் மற்றும் அதை பயன்படுத்தி நடக்கும் சமூக விரோத செயல்களைத் தடுக்கும் வகையில், மொபைல் எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்காக, பிப்., 6ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

திருத்திய ஊதிய அடிப்படையில் பொது வருங்கால வைப்பு நிதி மாதாந்திர சந்தா பிடித்தம் செய்ய ஆணை வெளியிடப்பட்டுள்ளது

திருத்திய ஊதிய அடிப்படையில் பொது வருங்கால வைப்பு நிதி மாதாந்திர சந்தா பிடித்தம் செய்ய ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசாணை எண்:362       நிதி(படிகள்)த்துறை  நாள்:11-12-2017 காண மற்றும் தரவிறக்கம் செய்ய இதனை அழுத்துக... 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தனித்தேர்வர்கள் டிசம்பர் 11 முதல் விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தனித்தேர்வர்கள் டிசம்பர் 11 முதல் விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு.அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் டிசம்பர் 11ம் தேதி முதல் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

Tuesday, 12 December 2017

வாக்காளர்,ஆதார் கார்டு பெற முடியாமல் அரசு இ சேவை மையங்களில் பொதுமக்கள் தவிப்பு!

 மதுரை மாவட்டத்திலுள்ள அரசு இ சேவை மையங்களில் பிரின்டருக்கான ரிப்பன், பிளாஸ்டிக் கார்டுகள் இல்லாததால் வாக்காளர், ஆதார் கார்டு நகல்கள் பெற முடியாமல் பொது மக்கள் தவிக்கின்றனர்.
இம்மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் உட்பட பத்து தாலுகா அலுவலகங்கள், பாஸ்போர்ட் சேவை மையம் போன்ற இடங்களில் அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் சார்பில் இ சேவை மையங்கள் செயல்படுகின்றன. இங்கு அனைத்து வகை வருவாய்த்துறை சான்றிதழ்கள், நில ஆவணங்கள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டு ஒரு வாரத்திற்குள் வழங்கப்பட்டன. இதற்காக 50 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. வாக்காளர் அட்டை, ஆதார் கார்டுகளில் மாற்றங்கள் செய்த பிறகு இங்கு 30 ரூபாய் செலுத்தி திருத்தப்பட்ட கார்டுகளை பெறலாம்.

கோவை மாவட்டத்தில், பொதுத்தேர்வு எழுதும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்காக, 113 தேர்வு மையங்கள்

கோவை மாவட்டத்தில், பொதுத்தேர்வு எழுதும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்காக, 113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகம் முழுக்க, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, அரையாண்டு தேர்வுகள் நடக்கின்றன. முழு பாடத்திட்டத்தில் இருந்தும், வினாக்கள் இடம்பெறுவதால், மாணவர்களின் கல்வித்தரம் ஆய்வுக்கு உட்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதோடு, பொதுத்தேர்வும் நெருங்கவுள்ளதால், மாவட்ட வாரியாக, ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நமக்கு இப்படி ஒரு பள்ளி வாய்க்கவில்லையே...!ஏங்க வைக்கும் மூலத்துறை நடுநிலைப்பள்ளி


'பாரதியை ஆழ்ந்து வாசித்தால் அச்சம் நீங்கும்'

'பாரதியை வாசித்தால், அச்சம் நீங்கும்; அநீதியை தட்டிக்கேட்கும் எண்ணம் உருவாகும்,'' என, கவிஞர் உமா மகேஸ்வரிபேசினார்.
பாரதி சிந்தனையாளர் பணி மையத்தின் சார்பில், 47ம் ஆண்டு பாரதி விழா அன்னுாரில் நடந்தது. பணி மையத் தலைவர் ராமதாஸ் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் சுப்பையன் துவக்கி வைத்தார்.
கவிஞர் உமா மகேஸ்வரி, 'எட்டையபுரத்து எரிமலை,' என்ற தலைப்பில் பேசியதாவது:
பாரதி உழைப்பாளியை நேசித்தவர். ஜாதிக்கொடுமையை எதிர்த்து எழுதியவர். அறிவுதான் தெய்வம் என்று கூறியவர்.நுாறு ஆண்டுகளுக்கு முன்பே, பெண் சுதந்திரம் கிடைத்து விட்டது என்று பாடியவர். பாரதி வீட்டு அடுப்படியில் செல்லம்மாளின் கண்ணீர் தான் அதிகம் இருந்திருக்கும்.

மாணவர்களின் அடையாள அட்டை பள்ளிகளில் வடிவமைக்க புது செயலி

பள்ளிக்கல்வித்துறை சார்பில் உருவாக்கப்பட்ட, பிரத்யேக செயலி மூலம், தலைமையாசிரியர்களே மாணவர்களின் அடையாள அட்டையை, உருவாக்கும் வகையில், புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், தனியார் பள்ளிகளை போல, அரசு, உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும், அடையாள அட்டை வழங்கும் நோக்கில் 2012ல், பள்ளிக்கல்வி மேலாண்மை இணையதளம் (எமிஸ்) உருவாக்கப்பட்டது.
தொழில்நுட்ப குளறுபடிகளால், பள்ளிகள் சார்பில், இணையதளத்தில் உள்ளீடுசெய்த, தகவல்களை திரட்டுவதில், சிக்கல் நீடித்தது. இதற்காக நடப்பாண்டில்,மேம்படுத்தப்பட்ட எமிஸ் இணைய பக்கம் உருவாக்கி, தொழில்நுட்ப பிரச்னைகளுக்கு, தீர்வு காணப்பட்டு வருகிறது.

உயர்கல்வி ஆலோசனைக்கு வழிகாட்டி ஆசிரியர்கள்:பள்ளிகளில் நியமிக்க திட்டம்

அரசு, உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும், ஆர்வமுள்ள ஆசிரியர்கள் கொண்டு, மாணவர்களுக்கு உயர்கல்வி ஆலோசனை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாணவர்களின் நலனுக்காக, உயர்கல்விக்கான ஆலோசனைகள் வழங்க, வழிகாட்டி நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். வட்டார வாரியாக உள்ள, பள்ளி மாணவர்களை ஒருங்கிணைத்து, கல்வியாளர்கள் கொண்டு, ஆண்டுதோறும் கருத்தரங்கு நடத்தப்படும்.

ஆர்.ஏ.ஏ., திட்டத்தில் 27 அரசுப் பள்ளிகள் தேர்வு! கடலூர் மாவட்டத்தில் கல்வித் தரத்தை உயர்த்த திட்டம்

கடலுார் மாவட்டத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்தும் விதமாக ஆர்.ஏ.ஏ., திட்டத்தில் 27 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் மூலமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக பள்ளி படிப்பை முடிக்கும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் உயர்கல்விக்குச் செல்வதை நோக்கமாக கொண்டு மத்திய அரசு கடந்தாண்டு ராஷ்டிரிய அவியாஸ் அபியான் (ஆர்.ஏ.ஏ) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

'பான் - ஆதார்' இணைப்பு; மார்ச் 31 வரை அவகாசம்

வருமான வரித்துறை வழங்கும், 'பான்' கார்டுடன், 'ஆதார்' எண்ணை இணைப்பதற்கான அவகாசம், 2018 மார்ச், 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
'பான் எனப்படும், நிரந்தர கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்' என,மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. மேலும், ஜூலை, 1 முதல், புதிதாக பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது, ஆதார் எண்ணை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டது.அது தவிர, வருமான வரி கணக்கு தாக்கலின் போது, ஆதார் எண்ணை குறிப்பிடுவதும் கட்டாயமாக்கப்பட்டது. இதுவரை வழங்கப்பட்டுள்ள, 33 கோடி பான் கார்டுகளில், நவ., நிலவரப்படி, 13.28 கோடி பான் கார்டுடன், ஆதார் இணைக்கப்பட்டுள்ளது.

Monday, 11 December 2017

சேலம் பள்ளி மாணவி தற்கொலை ஏன்? பரபரப்பு தகவல்கள்

சேலம் அரிசிபாளையத்தில் தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சேலம் சங்கர்நகரை சேர்ந்த சக்திவேல் மகள் கவிஸ்ரீ (வயது 13), செவ்வாய்பேட்டை மூலப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஜெயராஜ் மகள் ஜெயராணி (13) ஆகியோர் 8-ம் வகுப்பு படித்து வந்தனர். கடந்த 8-ந் தேதி வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற மாணவிகள் மாலையில் வீடு திரும்பவில்லை. இது குறித்து மாணவிகளின் பெற்றோர் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் மாணவிகளை தேடி வந்தனர்.

தொடக்கப்பள்ளி மாணவர்களின் புத்தகசுமை குறைக்க நடவடிக்கை


TNPSC போட்டி தேர்வில் வெளிமாநிலத்தவர்களை அனுமதிக்க கூடாது:அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்


கோவை:பொதுத்தேர்வு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்க முடிவு


Friday, 8 December 2017

வேதியியல் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு


தேசிய திட்ட அமலாக்கத்துறையில் 1270 உதவி பேராசிரியர் பணியிடங்கள்

தேசிய திட்ட அமலாக்கத்துறையில் 1270 உதவி பேராசிரியர்பணியிடங்கள் மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின்கீழ் செயல்பட்டு வரும் தேசிய திட்ட அமலாக்கத்துறையில்"National Project Implementation Unit" காலியாக உள்ள1270 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் டிசம்பர் மாதம் 11 முதல் 15-ஆம் தேதிவரை நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்குபெற்று பயனடையலாம். மொத்த காலியிடங்கள்: 1270

கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கலைத்திருவிழாவில் பங்குகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.நிகழ்விற்கு வந்தவர்களை பள்ளி மாணவர் நந்தகுமார்   வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.கலைத்திருவிழாவில் பங்குகொண்டு தனிநபர் போட்டிகளில் வெற்றி பெற்ற கிருத்திகா ,பிரஜித்,பாலமுருகன்ஆகியோருக்கும்,நாட்டுபுற நடனத்தில் குழுவாக வெற்றி பெற்ற சந்தோஷ்குமார்,ராஜேஸ்வரி,அம்முஸ்ரீ,    தேவதர்ஷினி,திவ்யதர்ஷினி,ஆகாஷ்,பாலமுருகன்,புகழேந்தி ஆகியோருக்கும் பள்ளியின் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது.

1282 BT Assistant Post continuation order

 1282 BT Assistant Six Month Post continuation order  - click here